Chengalpattu

News April 2, 2024

வீடு புகுந்து 9 சவரன் நகை திருட்டு

image

பவுஞ்சூர் அருகே விழுதமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன. இவர் வயலுக்குச் சென்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 9 சவரன் தங்க நகை மற்றும் அரை கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடு போனது. இது குறித்து அவர் அணைக்கட்டு காவல் நிலையத்தில் வழக்கு கொடுத்துள்ளார்.

News April 2, 2024

ரூ.5.8 லட்சம் நகைகள் திருட்டு: 2 போ் கைது

image

மதுராந்தகம் அடுத்த விழுதமங்கலம் கிராமத்தில் வீட்டின் கதவை உடைத்து 9 சவரன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி பொருள்கள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று கே.நெல்வாய் கிராமத்தைச் சோ்ந்த நவீன்(25), வெங்கடேசன்(28) ஆகிய இருவரை கைது செய்து அவா்களிடமிருந்து 6 சவரன் தங்க நகைகளையும், 500 கிராம் வெள்ளி பொருள்களை மீட்டனர்.

News April 2, 2024

185 விளம்பர பேனர்கள் அகற்றம்

image

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், விளம்பர பேனர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அவற்றை தடுக்கும் விதமாக ஐந்து மண்டலங்களிலும், கள ஆய்வு செய்யப்பட்டு, கட்டடங்களின் மேல் வைக்கப்பட்டிருந்த 37 விளம்பர பலகைகள், 148 விளம்பர பதாகைகள் கண்டறியப்பட்டு, அவற்றை மாநகராட்சி ஊழியர்கள், அகற்றினர்.

News April 1, 2024

செங்கல்பட்டு: நரிக்குறவ பெண்களின் அவல நிலை

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்லாவரம் கண்டோன்மெண்ட் பின்புறம் உள்ள நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என்றும் அவற்றை செய்து தரக் கோரி 100 க்கும் மேற்பட்டோர் இன்று மனு அளிக்க வந்தனர்.  மாவட்ட ஆட்சியரை சந்திக்க இயலாத நிலையில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். 

News April 1, 2024

திரும்ப பெறப்பட்ட சுங்கச்சாவடி கட்டண உயர்வு

image

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுங்கசாவடியில் கட்டணம் உயரும் என மத்திய நெடுஞ்சாலைதுறை ஆணையம் தெரிவித்திருந்தது. செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கசாவடி மற்றும் ஆத்தூர் சுங்கசாவடியில் கட்டணம் உயர்த்தப்படவில்லை என சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு கட்டணம் உயரும் என சுங்கசாவடி நிர்வாகம் தரப்பில் இன்று (ஏப்ரல்-1) தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 1, 2024

பாலாற்றில் பண்டைய கால நாணயங்கள்  கண்டெடுப்பு

image

செங்கல்பட்டு அருகே பாலாற்றில் ஆய்வுசெய்த போது ராஜராஜ சோழன் காலத்தில் பயன்பாட்டில் இருந்த வட்ட வடிவ செப்பு நாணயம் கிடைத்துள்ளது.
தங்க நாணயத்தில் பொறிக்கப்பட்டிருந்த அதே முத்திரை அமைப்புடன் உள்ளது. நாணயத்தின் முன்புறம் மன்னர் நின்றவாறும், பின்புறம் அமர்ந்தவாறும் உள்ளார்.
உலோக நாணயத்தில், முன்புறம் துதிக்கை துாக்கி பிளிறும் யானை, பின்புறம் உஜ்ஜயினி ஸ்ரீவத்சம் எழுத்து சின்னம் உள்ளது.

News March 31, 2024

மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

image

மாமல்லபுரத்தில் தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று மாமல்லபுரம் கடற்கரை மற்றும் வெண்ணெய் உருண்டைக் கல் அர்ஜுனன் தபசு உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவில் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

News March 31, 2024

செங்கல்பட்டு: திமுக கிணற்று தவளை

image

திமுகவுக்கு மாற்று பாஜக தான் திமுகவும் அதிமுகவும் கள்ள உறவு வைத்துள்ளது. திமுகவை மக்களவை தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காக அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகி சென்றது.  திமுக கிணத்து தவளை கும்மிடிப்பூண்டியை தாண்டினால் அடுத்த ஸ்டேஷன் தெரியாது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

News March 31, 2024

தண்ணீர் வாளியில் விழுந்து ஒரு வயது குழந்தை பலி

image

பல்லாவரம் அருகே திரிசூலம் லட்சுமணன் நகரைச் சேர்ந்தவர்கள் ராஜகுரு, காயத்ரி தம்பதியர். இவர்களுக்கு பிரணவ் ராஜ் என்ற 1 வயது ஆண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் காயத்ரி வேலைக்கு சென்ற போது ராஜகுரு தனது குழந்தையுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் குழந்தை எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த தண்ணீர் வாளியில் விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 30, 2024

ஏரியில் மிதந்த முதியவரின் சடலம் மீட்பு

image

 புலியூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (75). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் வெளியே சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை அப்பகுதி ஏரியில் கிருஷ்ணனின் உடல் மிதப்பதை கண்ட அப்பகுதியினர் அவரின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!