Chengalpattu

News April 4, 2024

பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

News April 4, 2024

செங்கல்பட்டு: தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கலெக்டர் ஆய்வு

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட லோக்சபா மற்றும் ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதி தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு மையம் உள்ளது. இங்கு 24 மணிநேரமும் தேர்தல் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நேற்று கலெக்டர் அருண்ராஜ், தேர்தல் பொது பார்வையாளர் அபிஷேக் சந்திரா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

News April 3, 2024

சித்தாமூர் ஒன்றிய தலைவர் மீது புகார்

image

சித்தாமூர் ஒன்றியத்தில்,43 ஊராட்சிகள் உள்ளன.17 ஆண் ஊராட்சி தலைவர்கள், 26 பெண் ஊராட்சி தலைவர்கள் உள்ளனர். ஒன்றிய செயலர் ஏழுமலை, ஒன்றியத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், சித்தாமூர் ஒன்றியத்தில் அடங்கிய ஊராட்சிகளின் பெண் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக, அதிகார துஷ்பிரயோகம் செய்யும் சித்தாமூர் ஒன்றியத் தலைவர் ஏழுமலை மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் ‘என, மனு அனுப்பப்பட்டுள்ளது.

News April 3, 2024

பாலூர் – கண்டிகை சாலையில் நேரக் கட்டுப்பாடு

image

காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் பாலூர் ஊராட்சியில் அரசு ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி ரயில்வே கேட் அருகில் கண்டிகை, சிங்கப்பெருமாள் கோவில் செல்லும் சாலையில் உள்ளதால் நாள்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் விபத்து அபாயத்தில் சென்று வருகின்றன. இதுகுறித்து செங்கல்பட்டு சப் கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தி காலை 8 – 10, மாலை 4 – 5.30 மணிவரை கனரக வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்தனர்

News April 3, 2024

ஓட்டளித்தால் உணவகங்களில் தள்ளுபடி

image

தமிழகத்தில் வரும் 19ந்தேதி நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் 100 % வாக்குப்பதிவை ஊக்கப்படுத்தும் வகையில் செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள உணவகங்களில் வாக்காளர்கள் வாக்களித்துவிட்டு விரல்களில் வைக்கப்பட்ட மை அடையாளத்தை காட்டி சாப்பிடும் உணவகங்களில் 5% தள்ளுபடி பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.ஆட்சியரின் அறிவிப்பிற்கு மாவட்ட உணவக உரிமையாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்

News April 3, 2024

செங்கல்பட்டு அருகே தீயில் உடல் கருகி பெண் பலி

image

செங்கல்பட்டு அருகே வேன்பாக்கம் பகுதியில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் மலர் (39) என்கிற பெண் உடல் கருகி உயிரிழந்தார். பின்பு தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் பிரேதத்தை மீட்டே உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

News April 3, 2024

செங்கல்பட்டு அருகே கோடிக்கணக்கில் சிக்கிய பணம்

image

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் – அனுமந்தபுரம் சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் புஷ்பலதா தலைமையிலான அதிகாரிகள் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் சோதனை செய்து ரூ.2,26,87,900 ரூபாயை பறிமுதல் செய்தனர். வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் வைப்பதற்காக, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட அந்த பணம் செங்கல்பட்டு சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

News April 3, 2024

செங்கல்பட்டு:திமுக ஒன்றிய பெருந்தலைவர் மீது புகார்?

image

சித்தாமூர் திமுக ஒன்றிய செயலாளராகவும் சித்தாமூர் ஒன்றிய பெருந்தலைவராகவும் இருப்பவர் ஏழுமலை. இவர் மீது சித்தாமூர் ஒன்றியத்தில் உள்ள பெண் தலைவர்கள் பலர் ஒன்றினைந்து அடுக்கடுக்கான புகார்களை அரசு முக்கிய அலுவலர்களுக்கு நேற்று அனுப்பி வைத்தனர். அதில் அரசு முக்கிய திட்டங்களை அதிகார துஷ்பிரயோகம் செய்து தனக்கு வேண்டியவர்கள் மூலம் அதில் ஊழல் புரிவதாக புகார் அளித்துள்ளனர்.

News April 2, 2024

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 23.82 லட்சம் வாக்காளர்கள்

image

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் 11லட்சத்து 80 ஆயிரத்து 263 ஆண்‌ வாக்காளர்களும் , 12 லட்சத்து 01 ஆயிரத்து 427 பெண் வாக்காளர்களும் , 429 இதர வாக்காளர்கள் என மொத்தம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 23,82,119 வாக்காளர்கள் இறுதியாக உள்ளனர்.

News April 2, 2024

ரூ.1.35 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் 

image

செங்கல்பட்டு அருகே பொன்விளைந்த களத்தூர் அருகே தேரடி தெருவில் வீட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக செங்கல்பட்டு கலால் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் ரகசியமாக வீட்டில் மதுபானம் விற்ற சுலோச்சனா (65) என்பவரை நேற்று (ஏப்-1) கைது செய்து அவரிடமிருந்த ரூ.1.35 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!