Chengalpattu

News April 8, 2024

தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

image

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் சிக்னலில் இன்று (ஏப்ரல்-8) முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது டாடா ஏசி வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்து வந்த ஸ்ரீதேவி(41) என்பவர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

News April 7, 2024

ரூ.4 கோடி பறிமுதல் மூவர் கைது

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்றிரவு கட்டுக்கட்டாக பணம் கொண்டு செல்லப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. கொளத்தூர் திருவிக நகரை சேர்ந்த சதீஷ், அவரது சகோதரர் நவீன், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பெருமாள் ஆகியோர் கொண்டு சென்ற பைகளில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ரூ. 4 கோடி கைப்பற்றப்பட்டது. இது தற்போது கைப்பற்ற பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

News April 7, 2024

உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரிந்து கொண்டு வாக்களிக்கவும்

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <>https://affidavit.eci.gov.in/ <<>>என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

News April 7, 2024

பாஜக ஸ்தாபக தினம் கொண்டாட்டம்

image

பாரதிய ஜனதா கட்சியின் 44 ஆவது ஸ்தாபக தினம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அலங்கரிக்கப்பட்ட பாரதமாதா படத்திற்கு புஷ்பாஞ்சலி செய்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் கட்சி கொடி ஏற்றப்படவில்லை. இதில் மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.

News April 6, 2024

பதற்றமான சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 371 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 0 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

News April 6, 2024

இன்று முதல் கோடை விடுமுறை

image

செங்கல்பட்டில் 1 முதல் 3 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.4 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் ஏப்.8,10,12 இல் பள்ளிக்கு வந்து தேர்வுக்கு தயாராக வேண்டும். தேர்தல் பணி காரணமாக ஏப்.15 முதல் ஏப்.21 வரை விடுமுறையும் அதன் பின் ஏப்.22,23 இல் அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும். அதன் பின் ஏப்.24 முதல் கோடை விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.

News April 6, 2024

மாமல்லையில் புதிதாக அலங்கரிக்கும் சுதை சிற்பங்கள்

image

தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் பூம்புகார் நிறுவன கைவினைப் பொருட்கள் விற்பனையகம் மற்றும் ‘அர்பன் ஹட்’ எனப்படும் நகர்ப்புற சந்தைத்திடல் வளாகம் மாமல்லபுரத்தில் உள்ளது.வாயிலில் பயணியரை வரவேற்கும் கரக நாட்டியக் கலைஞர்கள், வளாகத்தில் இளைஞர்கள் காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு, ஏரில் பூட்டப்பட்ட மாடுகள், மாட்டு வண்டி, மான்கள், கொக்குகள் ஆகிய சுதை சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

News April 5, 2024

செங்கல்பட்டு அருகே 4 பேர் கைது

image

மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி பகுதி தனியார் விடுதியில் வேலை செய்து வரும் கமல் குமார், நவ்நீத் மற்றும் சிலர் கடந்த மார்ச் 31ஆம் தேதி பணி முடிந்து அப்பகுதி சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்போது 2 டூவீலர்களில் வந்த 4 பேர், நவ்நீத்தின் செல்போனை பறித்து சென்றனர். இதையடுத்து புகாரின் பேரில் மாமல்லபுரம் போலீசார் ஏற்கனவே கேளம்பாக்கம் மணிகண்டனை (27) கைது செய்த நிலையில், நேற்று 3 சிறுவர்களை கைது செய்தனர்.

News April 5, 2024

ஏப்.15 முதல் மீன்பிடி தடை காலம்

image

கடலில் மீன்வளத்தை பெருக்க ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. மீன்களின் இனப்பெருக்க காலத்தை ஒட்டி ஏப்.15 நள்ளிரவு முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை என 61 நாட்களுக்கு மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு உதவுவதாக  புதுப்பட்டினம், வாயலுார், உய்யாலிகுப்பம், கடலுார் உள்ளிட்ட அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

image

தமிழகத்தில் நாடளுமன்ற தேர்தல் ஏப்.19 இல் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!