Chengalpattu

News April 11, 2024

வேதகிரீஸ்வரர் கோவிலில் ரூ.15.23 லட்சம் காணிக்கை

image

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ் இயங்கி வருகிறது. நேற்று உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன் மேற்பார்வையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. கோவிலில் உள்ள 10 பொது உண்டியல்களில் 12 லட்சத்து 84,394 ரூபாயும், இரண்டு திருப்பணி உண்டியல்களில் 2 லட்சத்து 39,049 ரூபாயும், தங்கம் 51 கிராம், வெள்ளி 472 கிராம் காணிக்கையாக கிடைத்துள்ளது.

News April 11, 2024

வேட்பாளர்கள் பெயர்கள் சின்னங்கள் பொருத்தும் பணி

image

திருப்பெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன்,அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

News April 10, 2024

செங்கல்பட்டு: 4 வீடுகளில் கொள்ளை முயற்சி

image

செங்கல்பட்டு அருகே ஊராட்சிமன்ற அலுவலகத்தை சுற்றியுள்ள ரமேஷ் (45), நவின் (25), சாந்திமணி(39), பரசுராமன் (42) ஆகியோரது வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். பொதுமக்களின் சத்தத்தை கேட்டு தப்பியோடினர். அதேபோன்று சிங்கப்பெருமாள் கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 10, 2024

காஸ் சிலிண்டரில் தேர்தல் விழிப்புணர்வு

image

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிப்போம், நியாயமாக வாக்களிப்போம் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து சிலிண்டர்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி இன்று (ஏப்.10) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் துவக்கி வைத்தார்.

News April 10, 2024

பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை

image

நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சி நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் தேர்தல் பாதுகாப்பு சிறப்பு படை அதிகாரி புவனேஸ்வரி தலைமையில் வாகன சோதனை ஈடுபட்டனர்.
சோதனையின் போது கார், வேன், டெம்போ என அனைத்து வாகனங்களையும் நிறுத்தி, பணம், பொருட்கள் எடுத்துச் செல்கின்றனரா என தீவிர சோதனைகளுக்கு பிறகே அனுமதித்தனர்.

News April 9, 2024

ட்ரோன்களில் மருந்து சப்ளை அரசு மருத்துவமனை அசத்தல்

image

தமிழகத்தில் முதன்முறையாக அரசு மருத்துவமனை வாயிலாக ட்ரோன்களில் மருந்து சப்ளை செய்யும் பணி நேற்று நடைபெற்றது. செங்கல்பட்டு மத்திய தொழுநோய் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து மருந்துகளை எடுத்துக் கொண்டு சுமார் 200 அடி உயரத்தில் பறந்து 25 நிமிடத்தில் நந்திவரம் – கூடுவாஞ்சேரி அரசு மருத்துவமனைக்கு ட்ரோன் வந்து சேர்ந்தது. இதில் 50 கிலோ மருந்துகள் வரை கொண்டு செல்லலாம்.

News April 9, 2024

வாக்களிக்க வசதியாக 18518 சிறப்பு பேருந்துகள்

image

வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க வசதியாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. அதன்படி கிளாம்பாக்கத்திலிருந்து ஏப்.17 ,18 ஆம் தேதிகளில் 2970 சிறப்பு பேருந்துகளும், ஏப்.20,21 ஆம் தேதிகளில் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு திரும்பும் வகையில் 1825 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஏப். 16 முதல் 18 வரை முன்பதிவு செய்து செய்து பயணிக்கலாம்.

News April 8, 2024

செங்கல்பட்டு: 2ஆம் கட்ட பயிற்சியில் ஆய்வு

image

2024 மக்களவை தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தேர்தல் பணிகள் குறித்து முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்த நிலையில், இன்று மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடந்தது. இதை மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.

News April 8, 2024

செங்கல்பட்டு அருகே அபாயம்

image

தாம்பரம் ரயில்வே சுரங்கப் பாதையில் பக்கவாட்டு சுவரில் நீர் கசிந்து வெளியேறுவதால் வாகன ஓட்டிகள் வழுக்கி விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு தாம்பரம் – கிழக்கு தாம்பரம் பகுதியை இணைக்கும் இந்த பாதையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில் பக்கவாட்டு சுவரில் இருந்து நீர் கசிந்து வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

News April 8, 2024

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

image

தாம்பரத்தில் மெப்ஸ் (MEPZ) என்ற ஐடி வளாகம் உள்ளது. இங்குள்ள தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத ரசாயன கழிவுநீரால் திருநீர்மலை ஏரி, சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. வீடுகளில் குடிநீர் குழாயில் நுரையுடன் தண்ணீர் வருகிறது. இதுகுறித்து தாமாக வழக்கு பதிந்த தீர்ப்பாயம் ஜூன் 2ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!