Chengalpattu

News September 6, 2025

செங்கல்பட்டு: டிகிரி போதும் கிராம வங்கியில் வேலை

image

கிராம வங்கியில் ஆபீசர்கள் மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட்டுகள் பணிக்கு கட்டாயம் உள்ளூர் மொழி எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். பிரிலிமினரி தேர்வு, மெயின்ஸ் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விபரங்களுக்கு இங்கு <>கிளிக்<<>> பண்ணுங்க. *அருமையான வாய்ப்பு இப்போவே நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News September 6, 2025

அம்பேத்கர் விருதுக்கு அழைப்பு.

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழக அரசின் 2025-26 ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் அறை எண் 108-ல் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் வரும் செப்.30 தேதிக்குள் நேராக (அ) அஞ்சல் மூலமாக அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 6, 2025

செங்கை: பெண் குழந்தைகள் விருது பெற அழைப்பு

image

1 லட்சம் ரூபாய் சான்று பத்திரத்துடன், பெண் குழந்தை விருது வழங்கப்பட உள்ளது. பெண் குழந்தை கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, குழந்தை திருமணத்தை தடுத்தல் உட்பட வேறு ஏதாவது வகையில், சேவையில் ஈடுபட்ட 13-18 வயதிற்குப்பட்ட பெண் குழந்தைகள் இந்த <>லிங்க்<<>> மூலம் வரும் நவ.30க்குள் விண்ணப்பிக்கலாம் என செங்கை ஆட்சியர் தெரிவித்துள்ளார். சேவை விபரங்களை ஆட்சியர் அலுவலகத்திலும் சமர்பிக்க வேண்டும்.

News September 6, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டம் (செப்டம்பர்-05) இன்று செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த தகவலை ஷேர் செய்யுங்க

News September 5, 2025

தாம்பரம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

தாம்பரம் மாநகராட்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் (செப். 05) இன்று இரவு ரோந்து பணி பார்க்கும் காவலர்களின் தொலைபேசி எண்கள் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவலர்கள் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அப்போது ஏதேனும் அவசரம் என்றால் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

News September 5, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டம் (செப்டம்பர்-05) இன்று செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த தகவலை ஷேர் செய்யுங்க

News September 5, 2025

செங்கல்பட்டு மக்களே இந்த நம்பர் நோட் பண்ணிக்கோங்க!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, செங்கல்பட்டு மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (91765 64884) அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 5, 2025

செங்கல்பட்டு மாவட்டத்தில் படகு போக்குவரத்து சேவை.

image

செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் பகுதியில் இருந்து, சென்னை நேப்பியர் பாலம் வரை படகு போக்குவரத்து தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், இந்த சேவையை கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான படகு நிலையம் அமைக்க இடங்களை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

News September 5, 2025

வாகன சோதனையில் ரூ.27.14 லட்சம் அபராதம்

image

செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து கழகம் சார்பில் ஆர்.டி.ஓ., இளங்கோ தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஜெயலட்சுமி, ஹமீதாபானு, ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் கடந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் விதிமுறைகளை மீறிய 273 வாகனங்களுக்கு அபராதமாக ரூ.27.14 லட்சம் விதிக்கப்பட்டது.

News September 5, 2025

செங்கல்பட்டு: தேர்வு இல்லை; உள்ளூரில் அரசு வேலை

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் மற்றும் இரவு காவலர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கிடையாது, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.71,900 வரை வழங்கப்படும். இந்த <>லிங்க்<<>> மூலம் வரும் செப்.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு <<17620278>>இங்கு கிளிக் பண்ணுங்க<<>>

error: Content is protected !!