India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை அருகே இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பல்கலைக்கழத்தில் பணிபுரியும் பேராசிரியருக்கு அதே பல்கலைக்கழத்தில் பணிபுரிந்த பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த மாணவர்கள் பேராசிரியரை சரமாரியாக தாக்கினர். பின்னர் பேராசிரியரை பிடித்து தாம்பரம் படூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் பல்கலைவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களை நிரப்ப தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.விண்ணப்ப கட்டணம் கிடையாது.நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .இந்த <
செங்கல்பட்டு அருங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் தேன்மொழி.இவர் கடந்த 11-ந்தேதி தனது நிலத்திற்கு இலவச பட்டா பெறுவதற்கு வி.ஏ.ஓ சக்குபாய் என்பவரை அணுகியுள்ளார்.ஆனால் சக்குபாய் ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார்.இது குறித்து தேன்மொழி லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார்.அதன்படி ரசாயனம் தடவிய பணத்தை பெற்ற வி.ஏ.ஓ சக்குபாய் மற்றும் உதவியாளர் சரவணன் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மையம் இணைந்து மார்ச் 22 அன்று திருப்போரூரில் உள்ள இந்துஸ்தான் கலை & அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது. 200+ நிறுவனங்கள் பங்கேற்று, 20,000 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். 8-ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, செவிலியர் உள்ளிட்டவர்கள் (18-40 வயது) கலந்து கொள்ளலாம். விவரங்களுக்கு: 044-27426020. ஷேர் பண்ணுங்க.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு, மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் சேர்வதற்கு பி.எஸ்.சி., – எம்.எஸ்.சி., நர்சிங் பட்டயப்படிப்பு உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தாட்கோ இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். 2 மாதம் அளிக்கப்படும். விடுதி கட்டணத்தை தாட்கோ அளிக்கும் என கலெக்டர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக வைட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்கள் மாலை கண் தொடர்பான நோய்களை தடுப்பதற்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மார்ச் 17 முதல் மார்ச் 22 வரை 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.
மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விஷ்வா (20) என்பவர் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். தினமும் மின்சார ரெயிலில் பயணம் செய்து கல்லூரிக்கு சென்று வந்தார்.நேற்று வழக்கம்போல் விஷ்வா மின்சார ரெயிலில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது, தாம்பரம் அருகே கூட்ட நெரிசல் காரணமாக எதிர்பாராத விதமாக ரெயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே விஷ்வா உயிரிழந்தார்.
சித்தாமூர் அடுத்த சரவம்பாக்கத்தை சேர்ந்தவர் பிரியா (45).மதுராந்தகம் ஒன்றியக் குழுவின் 20வது வார்டு தி.மு.க ஒன்றிய கவுன்சிலராக இருந்து வந்தார்.இரண்டு மாதங்களுக்கு முன் மருத்துவமனையில் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சில நாட்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மின் விசிறியில் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அன்பார்ந்த வே2நியூஸ் வாசகர்களே இனி நீங்களும் நிருபர் ஆகலாம். செங்கல்பட்டு மாவட்டத்தில் நிகழக்கூடிய அனைத்து விஷயங்களையும் எங்களுக்கு செய்தியாக கொடுத்து வருமானம் ஈட்டுங்கள். உங்களை சுற்றி நடக்கும் அனைத்தையும் செய்தியாக்குங்கள். இந்த <
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுக்கா, மானாம்பதி பகுதியில் பிரசித்தி பெற்ற மானாம்பதி திருக்கரை ஈஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு வந்து வழிபாட்டால் பேச்சு குறைபாடுகள், தொண்டை பிரச்சினைகள் மற்றும் தைராய்டு பிரச்சினைகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.