Chengalpattu

News May 5, 2024

ஜி.டி எக்ஸ்பிரஸ் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு

image

சென்னை சென்ட்ரல் – புதுதில்லி இடையே கிராண்ட் ட்ரங்க் விரைவு ரயில் (எண்-12615/12616) தினமும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த பிப்ரவரி 9 முதல் மே.8  வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் மே 9 முதல் மேலும் 3 மாதங்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 5, 2024

செங்கல்பட்டில் ஆரஞ்சு அலர்ட்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் காற்றின் போக்கு காரணமாக கடல் கொந்தளிப்புடனும், கடல் அலை சீற்றத்துடனும் இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடல் அலைகள் 1.5 மீ உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News May 4, 2024

பேரூராட்சி 2 வது வார்டு கவுன்சிலர் காலமானார்

image

திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகியும், மாமல்லபுரம் பேரூராட்சி 2 வது வார்டு கவுன்சிலருமான த.சீனிவாசன் இன்று காலை இயற்கை எய்தினார். இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட அதிமுக சார்பில் நிர்வாகிகள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திருக்கழுக்குன்றம் ஒன்றியம் மற்றும் மாமல்லபுரம் பேரூராட்சி அதிமுக நிர்வாகிகள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

News May 4, 2024

செங்கல்பட்டில் ஆரஞ்சு அலர்ட்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் காற்றின் போக்கு காரணமாக கடல் கொந்தளிப்புடனும், கடல் அலை சீற்றத்துடனும் இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடல் அலைகள் 1.5 மீ உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News May 4, 2024

செங்கல்பட்டு: அதிர்ச்சி தரும் டிஎன்ஏ முடிவு

image

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த அல்லாணூரில் கடந்த செப்டம்பர் மாதம் குடிசை வீட்டில் எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை ஒரத்தி போலீசார் மீட்டு விசாரணை நடத்தி, ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக டில்லிபாபு என்பவரை தீயிட்டு கொளுத்தியதாக சுரேஷ்,கீர்த்திராஜன்,ஹரிகிருஷ்ணன் கைது செய்யப்பட்டனர். தற்போது இறந்து கிடந்த சடலம் ஆண் அல்ல பெண் என்று டிஎன்ஏ முடிவு வந்துள்ளதால் போலீசார் குழம்பியுள்ளனர்

News May 4, 2024

செங்கல்பட்டு அருகே ஏரியில் கலெக்டர் ஆய்வு

image

கோடைக்காலத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள பல்லாவரம் வட்டம் கீழ்கட்டளை ஏரியில் இன்று மாலை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் நேரில் பார்வையிட்டு நீர் இருப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் உடன் இருந்து விளக்கம் அளித்தனர்.

News May 3, 2024

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ரிப்போர்ட்டர்கள் தேவை

image

தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் செங்கல்பட்டு மாவட்ட, தாலுகா வாரி பகுதி நேரமாக பணியாற்ற செய்தியாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள்9642422022 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

News May 3, 2024

குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 528 ஏரிகள் உள்ளன. இதில் தற்போது 300க்கும் மேற்பட்ட ஏரிகளில் 75 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. அதனால் வரும் சொர்ணவாரி பருவ விவசாயத்திற்கும், இந்தாண்டு குடிநீர் தேவைக்கும் பற்றாக்குறை ஏற்படாது என நீர்வளத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

News May 3, 2024

கல்குவாரியில் குளித்த 3 பேர் பலி

image

கீரப்பாக்கத்தில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பொத்தேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 5 பேர் அங்கு சென்று குளித்ததில் தர்மபுரி விஜய்சாரதி (19), உடுமலைப்பேட்டை தீபக்சாரதி (20), மன்னார்குடி முகமது இஸ்மாயில் (19) ஆகிய 3 பேர் நீரில் மூழ்கினர். தீயணைப்பு துறையினரின் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 3 பேரும் நேற்று மாலை சடலமாக மீட்கபட்டனர்.

News May 3, 2024

அன்புமணியை சந்தித்த தேர்தல் பொறுப்பாளர்கள்

image

மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் பாமக சார்பில் ஜோதி வெங்கடேசன் போட்டியிட்டார். இந்நிலையில் நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அலுவலகத்திற்கு தேர்தல் பொறுப்பாளர்கள் சென்று அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இதில் வேட்பாளர் ஜோதி வெங்கடேசன், செங்கல்பட்டு மத்திய மாவட்ட பாமக நிர்வாகிகள் திருக்கச்சூர் ஆறுமுகம், காயார் ஏழுமலை, பிவிகே. வாசு, பார்த்தசாரதி பங்கேற்றனர்.

error: Content is protected !!