India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சித்தாமூர் அருகே அகத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தனகோடி. நேற்று, வீட்டின் வெளியே அமர்ந்திருந்த போது, எதிர்பாராத விதமாக விஷப்பாம்பு தனகோடியின் வலது கையில் கடித்தது. உறவினர்கள் தனகோடியை மீட்டு, மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, தனகோடியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, சித்தாமூர் போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தை சுற்றியுள்ள மதுராந்தகம், தாம்பரம், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (மே.13) நண்பகல் 1 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை ஒட்டிய மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடும் பகுதி நிகழ்கிறது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இன்று (மே 13) அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
நந்திவரம் – கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர் காலனி 4 ஆவது குறுக்கு தெருவில் வசிப்பவர் பிரபு. 3 ஆம் வகுப்பு படிக்கும் இவருடைய 9 வயது பெண் குழந்தை நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் இருந்து சென்னை வரை இருக்கும் அனைத்து மாவட்ட மக்களும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை மே.14 வரை வெறும் கண்ணால் பார்க்கலாம் என அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளனது. அடன்படி செங்கல்பட்டு மாவட்ட மக்கள் மே.12 அன்று காலை 4.14, இரவு 7.07, மே.13 இல் காலை 5.00, மே.14 இல் காலை 4.15 மணிக்கு காணலாம் என நாசா தெரிவித்துள்ளது.
குரோம்பேட்டை சோழவரம் நகரைச் சேர்ந்த போட்டோகிராபர் மாதேஷ், கடந்த 6 ஆம் தேதி இரவு அவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த பைக் திருடு போனது. அதேபோன்று துர்கா நகர் பகுதியில் சுரேஷ் மற்றும் மரியதாஸ் ஆகியோருடைய பைக்கும் திருடு போனது. இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் சிசிடிவி காட்சி மூலம் நங்கநல்லூர் மெக்கானிக் மணிகண்டன், மற்றொரு மணிகண்டன், கீழ்க்கட்டளை விவேக் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்யூர் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (52), நேற்று அதிகாலை இவரது ஆட்டு கொட்டகையில் இவரது தம்பி மகன் 16 வயது சிறுவன் மது போதையில் ஆடு திருடுவதற்காக உள்ளே நுழைந்துள்ளார்.அப்போது சத்தம் கேட்டு எழுந்து வந்த லோகநாதன் சிறுவனை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிறுவன் அவரை சரமாரியாக தாக்கி கொலை செய்து தப்பி சென்றார். இச்சம்பவம் குறித்து போலீசார் சிறுவனை கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (மே.11) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நண்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கோடையின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.