India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலத்தை சேர்ந்த 23 வயது பெண், மறைமலைநகரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.இவர் கடந்த 19ம் தேதி விடுதியில் உள்ள குளியல் அறையில் குளிக்கும் போது ஒருவர் அவரை ஜன்னல் வழியாக மொபைல்போனில் வீடியோ எடுத்து உள்ளார்.இதைப் பார்த்து அவர் கூச்சலிடவே, அந்த மர்ம நபர் தப்பிச் சென்றார்.இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் பெரம்பலுாரை சேர்ந்த அருள்தாஸ் என்பவரை கைது செய்தனர்.
தொண்டை நாட்டின் புகழ் பெற்ற அம்மன் ஆலயங்களில் மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் புகழ் பெற்றது. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகள் வழிபட சிறந்த நாளாகும். சுக்கிரன் வழிபட்ட தலம் என்பதால், திருமணத்தடை, குழந்தைப் பேறு ஆகியவற்றுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் ஏராளம். ஆறு வாரங்கள் தொடர்ந்து இரண்டு எலுமிச்சைப் பழங்கள் வாங்கி வந்து வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும். ஷேர் பண்ணுங்க
ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்று (மார்.21) முதல் விண்ணப்பிக்கலாம். சென்னை மாநகர போக்குவரத்து கழகம் – 364, மாநில அரசு விரைவு போக்குவரத்து கழகம் – 318, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) – 322 பணியிடங்கள் உள்ளன.24 வயது நிறைந்திருக்க வேண்டும்.10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விண்ணப்பிக்கும் <
செங்கல்பட்டில் பெற்றோருக்கு அழைப்பு விடுத்து, பள்ளிக் கல்வித் துறையிலிருந்து பேசுவதாகக் கூறி பணம் பறிக்கும் கும்பல் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி மாவட்ட கல்வித் துறை கேட்டுக்கொண்டுள்ளது. பெற்றோரின் வங்கி கணக்கிற்கு கல்வி உதவித்தொகை அனுப்ப குறுஞ்செய்தியில் வரும் ‘கியூ ஆர்’ கோட்டினை ஸ்கேன் செய்து அனுப்பும்படி கூறுகின்றனர்.அவ்வாறு ஸ்கேன் செய்தவுடன் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது.
திருவிடந்தை கடற்கரை கிராமத்தில் நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். திருமணமாகாதவர்கள் மாலை வாங்கியணிந்து இக்கோயிலை 9 முறை சுற்றி வழிபட்டால் அவர்களுக்கு மூன்று மாதங்களில் திருமணம் நடைபெறுவதாக பக்தர்களால் கூறப்படுகிறது. திருமணமாகாத உங்க நண்பர்களிடம் ஷேர் பண்ணுங்க!
செங்கல்பட்டு கேளம்பாக்கம் (OMR) பகுதியிலுள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 22.03.2025 மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது. 20,000 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் கலந்து கொள்வோர்கள் இந்த <
சென்னையின் நுழைவாயில் என அழைக்கப்படும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக இயங்கி வருகிறது. முன்பு இங்குள்ள நீர்நிலைகளில், செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்திருந்தது. எனவே,செங்கழுநீர்ப்பட்டு என்றழைக்கப்பட்டது. அது மருவி இப்பொழுது செங்கல்பட்டு என அழைக்கப்படுகிறது. இது செங்கை எனவும் அழைக்கப்படுகிறது. மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் செய்யுங்கள்.
திருச்சி முசிறி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் மினி லாரியில் வாழைப்பழம் லோடு ஏற்றி கொண்டு திருச்சியிலிருந்து கோயம்பேடு நோக்கி வந்துகொண்டிருந்தார். நேற்று அதிகாலை மறைமலைநகர் அடுத்த பொத்தேரி பேருந்து நிலையம் அருகே வந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரியின் பின்புறத்தில் மினி லாரி மோதியது. இதில் மினி லாரி ஓட்டுனர் ராஜேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கூடுவாஞ்சேரியில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் உருவப்படம் சுவரில் வரையப்பட்டிருந்தது. இந்நிலையில், நள்ளிரவில் பைக்கில் வந்த ஒரு பெண், அந்த சுவரில் விஜய் முகத்தில் கருப்பு மை பூசி அழிக்க முயன்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து அப்பகுதி தமிழக வெற்றி கழகத்தினர், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தற்போது, போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக முன்னாள் எம்பி குப்புசாமியின் உதவியாளராக இருந்த குமார் (72) கடந்த 16ஆம் தேதி தாம்பரம் செல்லும் போது மாயமானார். இதுகுறித்து தாம்பரம் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை விசாரணை மேற்கொண்டது. அதில், ரியல் எஸ்டேட் தொடர்பான விரோதம் காரணமாக ரவி என்பவர் தனது கூட்டாளிகளுடன் குமாரை கொலை செய்து, செஞ்சியில் புதைத்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, போலீசார் ரவி உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.