India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெண்ணாங்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குமார் (53), அணைக்கட்டு காவல் நிலையத்தில் SSI-ஆக பணிபுரிந்து வந்த இவர் கடந்த 19ஆம் தேதி இரவு பணி முடிந்து, சென்றபோது விபத்துக்குள்ளானார். படுகாயமடைந்த குமார், சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (மார்.31) காலை 6:30 மணிக்கு உயிரிழநதார். இதையடுத்து, நேற்று அவருக்கு 36 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது. பின்னர், அடக்கம் செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இருந்து இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் உதவி காவல் ஆய்வாளர்களின் இன்றைய (ஏப்ரல் 01) பெயர் பட்டியல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ளது எனவே மக்கள் பயன்படுத்திக்கொண்டு காவல் ஆய்வாளர்களுக்கு தங்களது இரவு நேர பிரச்சனைகளை தெரிவிக்கலாம்.
செங்கல்பட்டு, திருநீர்மலை அருகே அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள் கோவிலில் மூலவராக உலகளந்த பெருமாள் அருள் பாலித்து வருகிறார். இக்கோவில் குளத்தில் நீராடினால் நோய்கள் தீரும், திருமண தடை அகலும். மேலும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு உள்ள மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்பது பக்க்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
கடைகளில் இருந்து தர்பூசணி பழங்கள் வாங்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். சோதனை செய்து பார்த்த பிறகே, தர்பூசணி பழத்தை வாங்குங்கள். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் விரைவாக கெட்டு விடும் என்பதால், சில பழங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றில் இந்த ரசாயனத்தை கலந்து ஜூஸ் போடுவதாகக் கூறப்படுகிறது. லாபம் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பழங்களில் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.
ரசாயனங்களை தண்ணீரில் கலந்து அதனை ஊசி மூலமாக தர்பூசணி பழங்களுக்குள் செலுத்துவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் அண்மையில் தெரிவித்தார். ரசாயனம் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு மிகவும் சிவந்து போய் இருக்கும். அதன் மீது ஒரு டிஷ்யூ பேப்பரை வைத்து தேய்க்கும்போது, டிஷ்யூ பேப்பர் மீது ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறம் படிந்து இருந்தால் அதில் ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது.
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், “தர்பூசணி பழங்கள் ஊசி போட்டு பழுக்க வைக்கப்படுகிறது என்று அதிகாரிகள் கூறியதால், தர்பூசணி விலை அதிரடியாக குறைந்துள்ளது. யாரும் வாங்க வருவதில்லை. சமூக வலைதளங்களிலும் தர்பூசணி பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஆனால், எந்த ரசாயன உரங்களையும் பயன்படுத்துவதில்லை. இயற்கை உரங்களையே பயன்படுத்துகின்றோம்” என விளக்கம் அளித்துள்ளார்.
செங்கல்பட்டு அருகே நடந்த கோர விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட்ட லாரி ஒன்று சிங்கப்பெருமாள் கோவில் அருகே திடீரென பிரேக் பிடித்ததால், பின்னால் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது. அப்போது, மற்றொரு டிப்பர் லாரி கார் மீது மோதியது. இதில், கார் நசுங்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மூவர் பலத்த காயம் அடைந்தனர்.
செங்கல்பட்டிலிருந்து 25 கி.மீ தொலைவில் திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டது. மேலும், இங்கு வந்து வழிபட்டால், திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இங்கு வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். நீங்களும் இங்கு சென்று வாருங்கள். ஷேர் பண்ணுங்க.
தமிழக வெற்றி கழகத்தின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சூரிய நாராயணன் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் உயிர் பிரிந்தது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 133 காவலர் பணியிடங்களுக்கு வரும் ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 – 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய, மாநில, பல்கலை., அளவிலான போட்டிகளில் 3ஆவது இடமாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு திறன், உடற்தகுதி, மருத்துவ தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். <
Sorry, no posts matched your criteria.