Chengalpattu

News May 25, 2024

செங்கல்பட்டு முட்டுக்காடு படகு குழாம் சிறப்பு!

image

செங்கல்பட்டில் உள்ள முட்டுக்காடு படகு குழாம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள ஒரு நீர் விளையாட்டு மையமாகும். இங்கு படகோட்டுதல், காற்றில் உலாவுதல், நீர் சறுக்கு விளையாட்டு, விரைவுப் படகுப் பயணம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் வழங்கப்படுகின்றன. 1984ஆம் ஆண்டில் இந்தப் படகு வீடு திறந்து வைக்கப்பட்டது. இம்மையத்திற்கு ஒவ்வொரு வாரமும் 4,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்கிறார்கள்.

News May 25, 2024

அஞ்சல்துறை இன்சூரன்ஸ் முகவராக விண்ணப்பம் வரவேற்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் அஞ்சல் துறை இன்சூரன்ஸ் முகவராக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் செங்கல்பட்டு நகர், கல்பாக்கம், மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், செய்யூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மறைமலைநகர் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்பதாக செங்கல்பட்டு அஞ்சல் துறை கோட்ட கண்காணிப்பாளர் சண்முகசாமி அறிவித்துள்ளார்.

News May 25, 2024

செங்கல்பட்டு: தம்பி அடித்து கொலை

image

 செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே உள்ள ஆக்கிணாம்பட்டு கிராமத்தில் நில தகராறில் தம்பியை அண்ணன் மற்றும் அண்ணனின் இரு மகன்கள் சேர்ந்து அடித்த கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்யூர் போலீசார் விசாரணை செய்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News May 24, 2024

காலை உணவு திட்டத்தில் 39000 மாணவர்கள் பயன்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த வட்டாரங்களில் 574 பள்ளிகள் மற்றும் அச்சிறுபாக்கம், இடைக்கழிநாடு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம் ஆகிய பேரூராட்சி பகுதிகளில், 37 பள்ளிகள் என மொத்தம் 611 பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை,தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத்திட்டத்தில் 39,002 மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.

News May 24, 2024

செங்கல்பட்டு: நண்பன் இறந்த துக்கம்

image

காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த நண்பர்கள் அலெக்ஸ் பாண்டியன் (22), சுதர்சன் (22) இருவரும் சென்னையில் வேலை செய்து வந்தனர். நேற்று அலெக்ஸ் பாண்டியன் காதல் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் குரோம்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டது. நண்பன் இறந்த துக்கம் தாளாமல் சுதர்சன் சட்டையை கழற்றி அங்கிருந்த மரத்தில் தூக்கிட்டுள்ளார் , சட்டை பாரம் தாங்காமல் கிழிந்ததால் உயிர் தப்பினார்.

News May 23, 2024

பயணியர் நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை

image

ஒரத்தி – திண்டிவனம் மாநில நெடுஞ்சாலையில் சிறுதாமூர் ஊராட்சிக்கு செல்லும் சாலையில் கூட்டுச்சாலை பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது.
இது தற்போது உரிய பராமரிப்பின்றி விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சு உதிர்ந்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News May 23, 2024

செங்கல்பட்டு: அரியர் வைத்ததால் தற்கொலை

image

செங்கல்பட்டு மாவட்டம்
மறைமலை நகர் அருகே கல்லூரி மாணவன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியது. பொத்தேரி அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பயின்ற
நிஜின் (21) என்பவர் அரியர் வைத்த காரணத்தினால் மன உளைச்சலில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 23, 2024

செங்கல்பட்டு: இளம்பெண் பரபரப்பு புகார்

image

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியர் பர்வேஜ்மியா – சல்மா அக்தர், இருவரும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர். திருப்போரூர் அழகு நிலையத்தில் பணிபுரிந்த சல்மா அக்தர் கடந்த 19ம் தேதி கேளம்பாக்கம் மருத்துவமனையில் தனது கணவருடன் சேர்ந்து 3 பேர் கூட்டு பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்தார். போலீசார் விசாரணையில் கணவர் தொந்தரவு செய்ததால் பொய் கூறியது தெரியவந்துள்ளது.

News May 22, 2024

செங்கல்பட்டு மழைக்கு வாய்ப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (மே.22) மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 22, 2024

மறைமலைநகர் பகுதியில் இன்று கரண்ட் கட்!

image

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் துணை மின் நிலையத்தில் இன்று(மே 22) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கூடுவாஞ்சேரி, பெருமாட்டுநல்லூர், காரணைப்புதுச்சேரி, ஊரப்பாக்கம், ஆதனூர், நந்திவரம், மறைமலைநகர் சிட்கோ தொழிற்பேட்டை, கடம்பூர், கூடலூர், கோனாதி, இந்திரா நகர், கொருகந்தாங்கல், காந்தி நகர், காட்டூர், காவனூர் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!