India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக குரூப்.1 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
கடந்த 20 ஆம் தேதி துவங்கிய இந்த பயிற்சி வகுப்பு சிறந்த பயிற்றுனர்கள் மற்றும் இலவச வைபை வசதியுடன் செயல்பட்டு வருகிறது.
கூடுவாஞ்சேரி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக, கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நேற்று கூடுவாஞ்சேரி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கூடுவாஞ்சேரி தேரடி மேட்டு தெருவைச் சேர்ந்த ரவுடி அப்பளம் தினேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் வருகை பதிவேடு பட்டா மாறுதல் நிராகரிப்பு மற்றும் பொதுமக்கள் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நிராகரிக்கப்பட்டால் காரணங்களை உடனடியாக அவர்களுக்கு தெரிவித்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அறிவுறுத்தினார்.
செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம் பகுதியில் ரவிக்குமார் என்பவருக்கு சொந்தமான அடகு கடை உள்ளது. 29ஆம் தேதி நள்ளிரவு கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மருமகன் அவர்கள் ரூபாய் 10,000 ரொக்க பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடி சென்றனர். 30ம் தேதி தகவல் அறிந்து சென்ற செங்கல்பட்டு தாலுகா போலீசார் தடயங்களை கைப்பற்றி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு புறவழிச்சாலையில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் உயிரிழந்தார். முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த இளைஞர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அஜித் (27) என தெரிய வந்துள்ளது. கடலூரில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் சென்னை நோக்கி வரும் போது விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் குளம் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தது. தகவல் அறிந்து சென்ற மேல்மருவத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2023 – 24 ஆம் கல்வி ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி வழங்கிய 475 முதுகலை ஆசிரியர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு. அருண்ராஜ் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் என பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
செங்கல்பட்டில் வேடந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ளது பறவைகள் சரணாலயம். புகழ்பெற்ற சரணாலயமான இங்கு கனடா, சைபீரியா, பங்களாதேசம், பர்மா என உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து பறவைகள் வருகின்றனர். அக்டோபர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு தங்கி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும். ஆண்டிற்கு 35,000 மேல் பறவைகள் இங்கு வந்து சென்றன.
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 2021 ஆம் ஆண்டு முதல் சைபர் கிரைம் குற்றப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் 253 சைபர் கிரைம் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கண்டுபிடித்து ரூ.93.28 லட்சம் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் வங்கி கணக்கு சம்பந்தமான ஆன்லைன் புகார் அளிக்க 1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
திருக்கழுக்குன்றம் ஒன்றியம் சாத்தமங்கலம் பாலாற்றங்கரையில் பழைய கற்சிற்பம் இருப்பதாக கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் சென்ற ஆய்வாளர்கள் வயல்வெளியில் பாதி புதைந்த நிலையில் 5 அடி உயரம், 2.5 அடி அகலம் கொண்ட, பல்லவர் இறுதிக் காலமான 9 – 10 நூற்றாண்டு பெண் தெய்வமான அரிதான கொற்றை சிற்பத்தை கண்டெடுத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.