Chengalpattu

News April 4, 2025

1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வாரிசுதாரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு 10% ஒதுக்கீடு உள்ளது. ஷேர் செய்யுங்கள்

News April 4, 2025

ஆம்னி பேருந்து மீது மோதி: காவலர் பலி

image

ஆலந்தூர் அருகே உள்ள ஆசர்கானா பகுதியில், போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் (SI) சிவகுமார் (53) நேற்று (ஏப்ரல் 3) பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்னாள் சென்ற ஆம்னி பேருந்து ஒன்று அவரது பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 4, 2025

ராஜேந்திரசோழன் மெய்கீர்த்தி கல்வெட்டு கண்டுபிடிப்பு

image

ஈசூர் பாலாற்றில், ராஜேந்திர சோழன் மெய்கீர்த்தி கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. 12 வரிகள் கொண்ட இந்த கல்வெட்டு, ஆற்றங்கரை பகுதியில் உள்ள பழங்கால கோவிலில் இருந்திருக்கலாம். முழுமையான கல்வெட்டாக இல்லாததால், கோவிலைப் பற்றியோ, தற்போது இந்த கோவில் உள்ளதா என்பதைப் பற்றியோ அறிய முடியவில்லை. இந்த கல்வெட்டை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாக வரலாற்றுத் துறை விரிவுரையாளர் தெரிவித்துள்ளார்.

News April 3, 2025

நினைத்தது எல்லாம் நிகழ்த்தும் சிறந்த கோயில்

image

தாம்பரத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ ராம ஆஞ்சிநேயர் கோயில் உள்ளது. இந்த கோயில் அருகே சிவன் கோயில் உள்ளது. இங்கு தேங்காய் கட்டி பிராத்தனை மேற்கொண்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். மேலும், போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற, திருமணம் கைகூட, உடல் நலம் மேம்பட பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர். மேலும், இது அனைத்தும் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிகின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர்பண்ணுங்க.

News April 3, 2025

ரயில்வே வேலை: ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்

image

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய சரக்கு வழித்தட கழகம் (DFCCIL) நிறுவனத்தில் 642 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூனியர் மேனேஜர், எக்சிகியூட்டிவ், மல்டி டாஸ்க் ஸ்டாப் என பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 2 கட்ட கணினி வழி எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு இருக்கும். <>ஷேர் செய்யுங்கள்<<>>

News April 3, 2025

காதலியை கல்லால் அடித்து கொன்ற காதலன்

image

அனகாபுத்தூரைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (33) கணவரை பிரிந்து தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். வீட்டருகே வசிக்கும் ஞானசித்தன் உடன் பாக்யலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (ஏப்ரல் 1) பாக்கியலட்சுமி வேறு ஒரு நபருடன் செல்போனில் பேசி கொண்டிருந்ததால், ஆத்திரமடைந்து ஞானசித்தன் கடப்பா கல்லை எடுத்து பாக்கியலட்சுமி தலையில் போட்டு கொலை செய்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.

News April 3, 2025

செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் மழை

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது திடீரென மழை பெய்து வருகிறது. மடிப்பாக்கம், மகாபலிபுரம், கீழ்கட்டளை, பல்லாவரம், கேளம்பாக்கம், குரோம்பேட்டை, பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது பெய்து வரும் இந்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. உங்க ஏரியாவில் மழையா?

News April 2, 2025

குழந்தையாக பிறக்கும் பாலமுருகன்

image

செங்கல்பட்டு மாவட்டம் இருங்குன்றம்பள்ளியில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிக்கு பாலமுருகனே குழந்தையாக பிறப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. மேலும், நோய் நொடி நீங்கி வளமான வாழ்வு பெற பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 2, 2025

CISF கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு

image

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) 1161 கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல்காரர், காலணி தைப்பவர், முடி திருத்துபவர், சலவை செய்பவர், ஓவியர், எலக்ட்ரீஷியன், தோட்டக்காரர், வெல்டர், தச்சர் பதவிகள் அடங்கும். அதிகபட்சமாக 493 பதவிகள் சமையல்காரருக்கானவை. பெண் விண்ணப்பதாரர்களும் இந்த ஆட்சேர்ப்புக்கு <>விண்ணப்பிக்கலாம்<<>>. நாளை (ஏப்ரல் 3) கடைசி தேதி. ஷேர் பண்ணுங்க

News April 2, 2025

பைக் மீது கார் மோதி விபத்து: 3 பேர் பலி

image

திருப்போரூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்துடன் பைக்கில் சென்றவர்கள் மீது அவ்வழியே அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதியது. இதில், ஹரிதாஸ், அவரது மனைவி மற்றும் அவர்களது குழந்தை ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மற்றொரு சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.

error: Content is protected !!