India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<
செங்கல்பட்டு மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்து கொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்து SMS வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். (தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க)
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்க. (SHARE பண்ணுங்க)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் ஆன்லைன் முன்பதிவு முடிந்துள்ள நிலையில், தாம்பரம் – திருச்சி இடையே இரண்டு மின்சார ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. வரும் அக்.20 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுவதால், ரயில்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், நேரடியாக முன்பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்த பயணிகளுக்கு இந்த அறிவிப்பு பேருதவியாக இருக்கும்.
செங்கல்ப்ட்டு மாவட்டத்தில் இன்று (செப்-07) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சியில் இன்று (செப்.,7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மக்களே.., இந்த செப்.., மாதத்தில் மட்டும் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய டாப் வேலை வாய்ப்புகள்:
▶️சீறுடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/) SHARE
2023ம் ஆண்டிற்கான தமிழகத்தின் சிறந்த காவல் நிலையங்களுக்கான விருதுகள் நேற்று (செப். 6) டிஜிபி வெங்கட்ராமனால் வழங்கப்பட்டன. இதில், 46 காவல் நிலையங்களுக்கு முதல்வர் விருதுகளை வழங்கி கௌரவித்தார். சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட செங்கல்பட்டு டவுன் மற்றும் தாம்பரம் சங்கர் நகர் காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகளைப் பெற்றன.
முட்டுக்காடு பகுதிய சேர்ந்த இம்மானுவேல் (56). கானத்தூரை சேர்ந்த ரகுபதி (37). நண்பர்களான இருவரும் நேற்று கானத்தூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த ரகுபதி பீர் பாட்டிலால் இம்மானுவேலை குத்தி கொலை செய்தார். போலீசார் ரகுபதியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
செங்கல்பட்டு மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்:
▶ தீயணைப்புத் துறை – 101
▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
▶ போக்குவரத்து காவலர் -103
▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091
▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072
▶ சாலை விபத்து அவசர சேவை – 1073
▶ பேரிடர் கால உதவி – 1077
▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930
▶ மின்சாரத்துறை – 1912. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.