Chengalpattu

News March 23, 2025

கள்ளகாதலியுடன் உல்லாசம்: மனைவியின் ராஜதந்திரம்

image

தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் (மார்.21), கேளம்பாக்கம் பகுதியில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்று பெண் ஒருவர் கூறியிருக்கிறார். அவர் கூறியதை கேட்டு அங்கு போனால், ஒரு ஆணும் பெண்ணும் மது குடித்தபடி உல்லாசமாக இருந்துள்ளனர். பிறகு, கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த கணவரை மனைவி இப்படி பிளான் போட்டு சிக்க வைத்துள்ளது தெரியவந்தது.

News March 23, 2025

செங்கையில் பசுமை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், 2024-25ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பசுமை முதன்மையாளர் விருது பெற வேண்டிய விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகள், குடியிருப்பு சங்கங்கள், தனிநபர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும். இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 15ம் தேதிக்குள் செங்கல்பட்டு கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

News March 23, 2025

தர்பூசணி சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை

image

ரசாயனம் கலக்கப்பட்ட தர்பூசணியை சாப்பிடும்போது நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, புற்றுநோய் போன்ற ஆபத்துகள் வருமென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தர்பூசணி பழங்களை வெட்டி பஞ்சு அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்தால் சிவப்பு நிறம் அதில் ஒட்டிக் கொண்டால் அது ரசாயன கலப்பு கொண்ட பழம். எனவே கடைகளில் வாங்கும்போது அதில் எங்காவது துளையிடப்பட்டு இருக்கிறதா என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க

News March 23, 2025

செங்கல்பட்டில் மழைக்கு வாய்ப்பு

image

செங்கல்பட்டில் இன்று (மார்.23) காலை 11 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஷேர் செய்யுங்கள்

News March 23, 2025

கொள்ளைகொள்ளும் கொலவை ஏரி

image

கொலவை ஏரி செங்கல்பட்டு மாவட்ட நகரில் அமைந்துள்ளது. இது இம்மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும். மதுராந்தகம் ஏரி முதலிடத்தில் இருக்கிறது. இந்த ஏரியானது செங்கல்பட்டு இரயில் நிலையத்தின் அருகிலேயே உள்ளது. இந்த ஏரியில் மீசைக் கடற்பறவை, இந்திய புள்ளி-பில் வாத்துகள், மூர்ஹென்கள், கூட்ஸ் போன்ற புலம்பெயர்ந்த பறவைகள் உள்ளன. தற்பொழுது ஏரியின் ஆக்கிரமிப்பால் தண்ணீர் குறைந்து வருகிறது. ஷேர் பண்ணுங்க.

News March 22, 2025

ஆஞ்சநேயர் கிரிவலம் செல்லும் அதிசய மலைக்கோவில்

image

கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் செல்லும் சாலையில் உள்ள புதுப்பாக்கத்தில் கஜகிரி என்ற மலை மீது வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு வழிபட்டால் நோய்கள், மன அழுத்தம், திருமண தடைகள் நீங்கும். பவுர்ணமி தோறும் இங்கு ஆஞ்சநேயர் கிரிவலம் வருவதாக நம்பிக்கை. அந்த சமயத்தில் நாமும் கிரிவலம் வந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 22, 2025

JUST IN: செங்கல்பட்டு ஆட்சியருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிப்பு

image

செங்கல்பட்டு ஆட்சியருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கிராம உதவியாளராக பணியாற்றிய முனுசாமி 2001இல் மரணமடைந்தார். அவரின் மகன் ராஜாகிளிக்கு கருனை அடிப்படையில் 3 மாதங்களுக்குள் வேலை வழங்க 2023ல் ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி அவர் தொடர்ந்த வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கு நேட்டீஸ் அனுப்பியும் ஆஜராகததால் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

News March 22, 2025

செங்கல்பட்டில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

செங்கல்பட்டில் இன்று (மார்.22) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பல்லாவரம், தாம்பரம் போன்ற புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் குடை அல்லது ரெயின்கோர்டை எடுத்துச் செல்லுங்கள். உங்க ஏரியாவில் மழையா?

News March 22, 2025

குடிநீா் கேன்களை 50 முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது

image

ஒரு குடிநீா் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீா் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம். அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்ட குடிநீா் கேன்களை பயன்படுத்த வேண்டாம். குடிநீரின் தரத்தை உறுதி செய்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டது. எனவே செங்கல்பட்டில் கேன் தண்ணீர் வாங்கும் பொது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மக்களுக்கு அறியுறுத்தல். ஷேர்

News March 22, 2025

படியில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

image

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த எண்டத்தூரை சேர்ந்த சிவகாமி மாமண்டூர் பகுதியில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று 21ஆம் தேதி பேருந்தில் வேலைக்கு வந்து மாமண்டூர் பகுதியில் இறங்கும்போது படியில் தவறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!