Chengalpattu

News March 25, 2025

அட இவங்கல்லாம் செங்கல்பட்டுல பிறந்தவர்களா?

image

வஹீதா ரெஹ்மான் – இந்தியாவின் புகழ் பெற்ற நடிகை. நாசர் – புகழ் பெற்ற தமிழ் நடிகர். C.V ஸ்ரீதர் – புகழ்பெற்ற இயக்குனர். சுல்தான் பக்ஷ் – 1857 ஆம் ஆண்டு முதல் சுதந்திரப் போரின் போது ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்த ஒரு புரட்சியாளர். ஜெனரல் கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜி – ராணுவத் தளபதி (1986 – 1988). ஒவி.அழககேசன் – செங்கல்பட்டின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர். உங்களுக்கு தெரிந்த பிரபலங்களை Comment செய்யுங்கள்

News March 25, 2025

மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 579 மனுக்கள் பெறப்பட்டன

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பட்டா, முதியோர் உதவித்தொகை, ஓய்வூதியம், நலத்திட்ட உதவிகள்,சாலை, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு வகைப்பட்ட 579 மனுக்கள் பெறப்பட்டன. அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

News March 24, 2025

சர்பதோஷம் நீக்கும் காளத்தீஸ்வரர்

image

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ராகு கேது ஒருவர் பின் ஒருவர் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். மேலும், நாகம் அடையாளம் காட்டிய தலங்களில் ஒன்றாக இந்த திருக்கோயில் உள்ளது. சர்ப்பதோஷம் இருப்பவர்கள் சனிக்கிழமையில் நடைபெறும் சர்பதோஷ நிவர்தியில் கலந்து கொள்ள சர்ப்ப தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.

News March 24, 2025

சென்னை TIDEL Parkல் வேலை- ரூ.1,87,000 வரை சம்பளம்

image

சென்னை டைடல் பார்க் நிறுவனத்தில் மேற்பார்வை பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.59,300 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு BE (EEE), ஏதேனும் ஒரு டிகிரி உடன் CA முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை<> இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 24, 2025

கப்பல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

மத்திய அரசின் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயர்மேன், ரிக்கர், ஸ்கஃபோல்டர் என மொத்தம் 12 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். 18-45 வயதிற்குட்பட்டும், 10ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு வடிவில் தேர்வுகள் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் (மார் 24) இந்த லிங்க்கை <>கிளிக் <<>>செய்து பதிவு செய்யவும். ஷேர் செய்யுங்கள் மக்களே!

News March 24, 2025

செங்கல்பட்டில் தலைவிரித்தாடும் போதை கலாச்சாரம்

image

தமிழக அரசு போதை பொருட்களுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வந்தாலும் செங்கை முழுவதும் கஞ்சா, குட்கா, போதை ஊசி போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தினந்தோறும் கிலோ கணக்கில் கஞ்சா, குட்கா போன்றவை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்படுகிறது. போதை பொருள் விற்பனை செய்வதும் அதை பயன்படுத்துவதும் அதிக அளவில் இளைஞர்களே ஈடுபட்டுவருகின்றனர். தலைவிரித்தாடும் போதை கலாச்சாரத்தை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை.

News March 24, 2025

செங்கல்பட்டில் குடிகொண்ட மூதேவி

image

வல்லம் மலை குகைக் கோயில் என்பது மலைகளில் அமைந்துள்ள ஒரு பாறையில் வெட்டப்பட்ட கோயிலாகும். இது ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் கட்டியதாகும். இங்கே ஒரு பெரிய மூதேவியின் சிலை உள்ளது. இம்மூதேவியைத்தான் பல்லவ மன்னர்களும் தங்கள் குலதெய்வமாகக் கொண்டாடி வந்துள்ளனர். அவர்களைப் பிற்காலத்தில் வென்றுப் பேரரசை நிறுவிய இடைக்காலச் சோழர்களும்கூட இம்மூதேவிக்குச் சிறப்பான வழிபாடுகள் செய்துள்ளனர்.ஷேர்

News March 24, 2025

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் உதவி காவல் ஆய்வாளர்களின் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இருந்து இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் உதவி காவல் ஆய்வாளர்களின் இன்றைய (மார்ச்.23) பெயர் பட்டியல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ளது எனவே மக்கள் பயன்படுத்திக்கொண்டு காவல் ஆய்வாளர்களுக்கு தங்களது இரவு நேர பிரச்சனைகளை தெரிவிக்கலாம்.

News March 23, 2025

கண் பிரச்சனையை தீர்க்கும் ஸ்ரீனிவாச பெருமாள்

image

செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இங்குள்ள ஸ்ரீனிவாச பெருமாளை வழிபட்டதன் மூலம் மீண்டும் பார்வை பெற்றதாகக் கூறப்படுகிறது. இப்போதும் கூட, கண் பிரச்சனைகள் உள்ள எவரும் இங்குள்ள பெருமாளை வழிபட்டால் அது குணமாகும் என்று மக்கள் நம்புகிறார்கள். திருமணமாகாத மற்றும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கான பிரஹ்தன ஸ்தலம் இது என்றும் கூறப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

News March 23, 2025

செங்கல்பட்டில் மழைக்கு வாய்ப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!