India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக வெற்றி கழகம் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் இன்னும் நியமிக்கப்படாததால், தலைமை யாரை நியமிக்கும் என்று தொண்டர்கள் அதிக எதிர்பார்பில் உள்ளனர். பல ஆண்டுகளாக விஜயை முன்னிலைப்படுத்தி பல நற்பணிகள் செய்து வரும் தையூரில் வசித்து வரும் மேஷாக் மாவட்ட செயலாளராக விரைவில் நியமிக்கப்படலாம் என்று அப்பகுதி தொண்டர்கள் பேசிவருகின்றனர்.
செங்கல்பட்டு, காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ளது காளத்தீஸ்வரர் கோவில். இங்குள்ள சிவலிங்கத் திருமேனி சுயம்புவாகத் தோன்றியதாக சொல்லப்படுகிறது. பல்வேறு வேண்டுதலுக்காக இக்கோவிலுக்கு பக்தர்கள் குவிகின்றனர். அதில், முக்கியமாக இங்குள்ள நந்திதேவருக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், வீட்டில் தங்க நகைகள் சேரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. *நகை சேர்க்க விரும்பும் நண்பர்களுக்கு பகிரவும்*
➡தாம்பரம் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தங்க பெண்களுக்கு ஓய்வு அறை அமைக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி. ➡ செய்யூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.3.5 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசாணை வெளியீடு. ➡மாமல்லபுரத்தில் ரூ.30 கோடி செலவில் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று அறிவிப்பு.
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் வளாகத்தில் வரும் 25-ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணிவரை நடைபெற உள்ளது.மேலும் தகவலுக்கு 044-27426020, 60933 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் செய்யுங்கள்
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்க்க இன்று (18.04.2025) ஒருநாள் மட்டும் இலவச அனுமதி என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு இன்று பொதுமக்கள் அனைவரும் இந்த இலவச அனுமதியை பயன்படுத்தி மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை பார்வையிடலாம். நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
செங்கல்பட்டு, பெரும்பேர்கண்டிகையை சேர்ந்தவர் சரவணன் (47). இவர் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்துாரில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்றார். அப்போது அச்சிறுபாக்கம் அருகே முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்ற போது லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி பலியானார். போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பல்வேறு காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.Sc, D.Pharm, Diploma, DMLT, MBBS, Nursing படித்தவர்கள் நேரடியாக சென்று வரும் ஏப்.23-க்குள் விண்ணப்பிக்கலாம். தகுதியானோருக்கு ரூ.47,430-ரூ.108,508 வரை சம்பளம் வழங்கப்படும். மேலம், தகவலுக்கு <
அச்சிறுப்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், செங்கல்பட்டு மாவட்ட சிறந்த பள்ளிக்கான காமராஜர்விருது, பாராட்டுசான்று வழங்கும்விழா (ம) 8-கூடுதல் பள்ளிகட்டிடங்கள் திறப்புவிழா நிகழ்ச்சி இன்றுகாலை மாவட்ட ஆட்சியர் S.அருண்ராஜ், கூடுதல் ஆட்சியர் நாராயணசர்மா (மா.ஊரகவளர்ச்சி) தலைமையில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் S.C.அகர்வால், CMD.மைத்தன் நிறுவன மேலாளர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் 156 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த <
செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 64 ஏரிகள் சமூக பொறுப்பு நிதி 5.17 கோடி ரூபாய் செலவில் துார்வாரி சீரமைக்கும் பணி துவங்கி உள்ளது. ஏரிகள் துார்வரும் பணிக்கு, முதல் முறையாக தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் வட கிழக்கு பருவமழை துவங்கும் முன் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க, ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.