India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தாம்பரம் மாநகராட்சியில் இன்று (செப்.24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, சித்தாமூர் அடுத்த சரவம்பாக்கம் கிராமத்தில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. இக்கடையில், அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மது பாட்டில் வாங்கியுள்ளார். இதனையடுத்து மது அருந்துவதற்காக அதை திறக்க முற்படும் போது, சீலிடப்பட்ட பாட்டிலின் உள் பகுதியில் புழு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால், அப்பகுதியில் உள்ளவர்கள் அச்சமடைந்த நிலையில் உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சி செயல் அலுவலராக மகேஸ்வரன் பணிபுரிந்து வந்தார்.கடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், வீட்டுமனைக்கு அனுமதி வழங்க, மனு அளித்திருந்தார். இதுகுறித்து செயல் அலுவலர் மகேஸ்வனிடம் கேட்ட போது, ரூ.4 லட்சம் லஞ்சம் கேட்டு பேரம் பேசியுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பேரூராட்சி செயல் அலுவலர் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளது.
அனகாபுத்தூரைச் சேர்ந்த கிருபாகரன் (35) மற்றும் அவரது மனைவி கீர்த்தனா (25) இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கீர்த்தனா, குளியலறை சுத்தம் செய்யும் திரவத்தை உடலில் தெளித்து தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட கிருபாகரன் அவரை காப்பாற்ற முயன்ற போது, இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரபப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் இங்கே <
செங்கல்பட்டு மாவட்டத்தில் சுகாதாரமற்ற உணவு, தரமற்ற உணவு, கலப்படம் உள்ளிட்ட உணவு பொருட்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு இனி இருந்த இடத்திலேயே புகார் அளிக்கலாம். தமிழக அரசின் Tn Food Safety Consumer App என்ற செயலியிலோ (அ) இந்த<
உங்கள் பகுதி தண்ணீர் பாதுகாப்பானது தானா? குடிக்கவும் சமைக்கவும் ஏற்றது தானா? என்பதை அறிந்து கொள்ளுங்கள். செங்கல்பட்டில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் நீரின் தரத்தைப் பரிசோதிக்கும் ஆய்வகங்கள் உள்ளது. அங்கு உங்கள் தண்ணீரை சுத்தமான புதிய பிளாஸ்டிக் கேனில் 2 லிட்டர் அளவு கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுத்த தண்ணீர் குடிக்க உகந்ததா என பரிசோதித்து உங்களுக்கு தெரிவிக்கப்படும். ஷேர்!
செங்கல்பட்டு மக்களே..வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் கிராம வங்கிகளில் காலியாக உள்ள 13,217 காலியாக உள்ள Manager, Assistant Manager நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. சம்பளமாக ரூ.35,000 முதல் 80,000 வரை வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள், <
திருநீர்மலையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரிஷ், நேற்று முன்தினம் தாம்பரம் அருகே தேநீர் கடை முன்பு நின்று கொண்டிருந்தபோது, 6 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. பழைய பகையின் காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. படுகாயமடைந்த மாணவர் தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெறுதிறது.
தமிழ்நாட்டில் உள்ள 54 சிறப்பு பொருளாதார மண்டலங்களில், அதிக ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பை அளித்து செங்கல்பட்டு மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 2024-25-ஆம் ஆண்டில், செங்கல்பட்டு மாவட்டம் ரூ.1.54 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்து, 3.54 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது. இதில், சென்னை இரண்டாம் இடத்திலும், கோவை மூன்றாம் இடத்திலும் உள்ளன.
Sorry, no posts matched your criteria.