India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி +2 பயிலும் மாணவ, மாணவியருக்கு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டு மீதமிருந்த இலவச மடிக்கணினிகள், செங்கல்பட்டு அண்ணா மேல்நிலைப்பள்ளி கட்டடத்தில் வைக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் (மார்.25) அறையின் ஜன்னல் உடைக்கப்பட்டு 53 மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, 11 மாணவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை வீடியோ கால் மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இணையதள மோசடி பற்றி புகார் தெரிவிக்க 1930 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் எனவும், கீழ்கண்ட மூன்று அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. 1. அறிமுகமில்லாத செல்போன் அழைப்புகளை ஏற்காதீர். 2 அறிமுகமில்லாத ரெக்கியூஸ்ட்களை ஏற்க வேண்டாம் 3. இணையதளங்களில் கால் அழைப்புகளை ஏற்காதீர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு நகராட்சியில், அறிஞர் அண்ணா அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 53 இலவச மடிக்கணினிகள் திருடு போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிளஸ்-2 தேர்வு எழுதி முடிவிற்காக காத்திருக்கும் மாணவர்களில் சிலர் இந்த மடிக்கணினிகளை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்பாக 12ஆம் வகுப்பு மாணவர்கள் 11 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டசபையில் நேற்று (மார்ச்.25) அமைச்சர் கே.என்.நேரு, தாம்பரம் மாநகராட்சியில் ரூ.30 கோடி செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், ரூ.750 கோடி செலவில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம், நந்திவரம் – கூடுவாஞ்சேரி தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்துதல், செங்கல்பட்டு நகராட்சியில் புதிய பேருந்து நிலைய பணிகள், மறைமலைநகர் நகராட்சியில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
செங்கல்பட்டில் இயங்கி வரும் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் Nurse, Medical Officer, Lab Technician ஆகிய பதவிகளுக்கு 14 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேரடியாக வந்து விண்ணப்பிக்க வேண்டும். ஏப்ரல் 23க் குள் விண்ணப்பிக்க வேண்டும். ரூ.47,430 முதல் ரூ.108,508 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் முன் வயது, கல்வி தகுதி ஆகியவற்றை இந்த <
காட்டாங்கொளத்தூரை சேர்ந்தவர் ஹரி ராம்நாராயணன். போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர் தன்னுடன் பணியாற்றும் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். இதனால் மனவேதனையில் இருந்த அவர் நேற்று தனது வீட்டின் அறையில் ‘ஹீலியம் கேஸ்’ கசிய விட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னைக்கும் மாமல்லபுரத்திற்கும் இடையிலான கிழக்கு கடற்கரை சாலையில் 1000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான நித்யகல்யாண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவராக விளங்கும் நித்யகல்யாண பெருமாளை வேண்டினால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. வாகனங்களுக்கு ஏற்ப 5 முதல் 25 ரூபாய் வரை கட்டண உயர்வு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
தமிழக அரசின் அறிவிப்பையடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் கைரேகையை பதிவு செய்யாத குடும்ப அட்டைதார்கள் தங்களுடைய நியாய விலைக் கடைக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது. வெளி மாவட்டங்களில் இருப்பவர்கள் அருகில் உள்ள நியாய விலை கடைகளில் ஆதார் அட்டையுடன் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.
சிவகங்கையை சேர்ந்தவர் பாலமுருகன் (28). இவர் குன்றத்துாரில் தங்கி தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி பாலமுருகன் தன் நண்பர்களுடன் எருமையூரில் உள்ள கல்குவாரியில் குளிக்க சென்றார். அப்போது அவர் நீரில் மூழ்கி மாயமானார். சோமங்கலம் போலீசார் மற்றும் படப்பை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடியும் கிடைக்கவில்லை. 3வது நாளாக இன்றும் தேடுதல் பணியில் ஈடுபட உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.