Chengalpattu

News April 8, 2025

கோவில் குளத்தில் தவறி விழுந்தவர் பலி

image

மதுராந்தகம், பகத்சிங் தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் நேற்று, திருவெண்காட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்றார். அப்போது அங்குள்ள குளத்தில் இறங்க முயன்ற போது குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி மாயமானார். பின்னர் தீயணைப்பு துறையினரின் நீண்ட நேர தேடுதலுக்கு பின்பு வினோத் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 8, 2025

பெண் பயணி தவறவிட்ட பணம் ஒப்படைப்பு

image

வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் வெளியூர் செல்வதற்காக வந்த பெண் பயணி ஒருவர் தான் கொண்டு வந்த பணப் பையை தவறவிட்டுள்ளார். அந்த பையில் ரூ. 73,000 இருந்துள்ளது. இந்நிலையில், அந்த பையைக் கண்டெடுத்த அரசு பேருந்து ஓட்டுநர் இளங்கோ மற்றும் நடத்துநர் வரதராஜ பெருமாள் ஆகிய இருவரும் பணப் பையை தவற விட்ட பெண்ணிடம் ஒப்படைத்தனர். இந்த நேர்மையான செயலை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்

News April 7, 2025

செங்கல்பட்டு மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள்

image

செங்கல்பட்டு மாவட்டத்தின் இன்றைய TOP 5 செய்திகள்: 1) பொழிச்சலூரில் தம்பி கண் எதிரேயே அக்கா தூக்கிட்டு தற்கொலை. 2) 23 கிராமங்களை உள்ளடக்கி மாமல்லபுரம் புது நகரத்தை உருவாக்க உத்தேசம். 3) சட்ட பேரவையில் மதுராந்தகம் MLA சஸ்பெண்ட். 4) மக்கள் குறைதீர் கூட்டத்தில் 537 மனுக்கள் பெறப்பட்டது. 5) சரிவர பணி செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும்- டி.ஆர். பாலு எச்சரிக்கை. நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.

News April 7, 2025

23 கிராமங்களை உள்ளடக்கி மாமல்லபுரம் புதுநகர்

image

மாமல்லபுரத்தை சுற்றி 123.48 கி.மீ சுற்றளவில் 25 கிராமங்களை உள்ளடக்கிய மாமல்லபுரம் புது நகரத்தை உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா மற்றும் அது தொடர்பான வளர்ச்சிகளின் மையமாக மாமல்லபுரத்தை உருவாக்க உதவும். இதற்கான பணி தற்போது நடைபெற்று வருகிறது என இன்று சட்டசபையில் நடைபெற்ற சென்னை பெருநகர வளர்ச்சித் துறை மீதான கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

News April 7, 2025

மதுராந்தகம் எம்.எல்.ஏ சஸ்பெண்ட்

image

டாஸ்மாக்கில் ₹1,000 கோடி ஊழல் விவகாரம் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, சட்டபேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சட்டப்பேரவையில் இருந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேலை இன்று ஒருநாள் மட்டும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். மேலும், யார் அந்த தியாகி என்ற பதாகைகளை காட்டிய அவர்களை உடனே வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

News April 7, 2025

அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 85 அங்கன்வாடி பணியிடங்கள், 2 குறு அங்கன்வாடி பணியிடங்கள், 69அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்பட உள்ளன. பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 25-35 வயதுடைய 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். 23ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்கலாம்<<>>. ஷேர் பண்ணுங்க

News April 7, 2025

தம்பி கண் எதிரேயே அக்கா தூக்கிட்டு தற்கொலை

image

பொழிச்சலூர் எம்.ஜி.ஆர்.நகர் மூர்த்தி தெருவைச் சேர்ந்த ரோஷினி (10), 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது தாய் கவுசல்யா நேற்று (ஏப்ரல் 6) வேலைக்கு சென்றுவிட்டு வருவதற்குள் வீட்டு வேலைகளை செய்து வைக்கும்படி ரோஷினியிடம் கூறியுள்ளார். ஆனால் ரோஷினி, வீட்டு வேலைகள் எதுவும் செய்யவில்லை. இதனால் தனது தாய் தன்னை அடிப்பாரோ? என பயந்த ரோஷினி தனது தம்பி கண் எதிரேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News April 7, 2025

கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

image

திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் திருப்போரூர் அடுத்த காலவாக்கதில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி எலக்ட்ரானிக்ஸ் மற்றும்  கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஏப்ரல்.05) இரவு ஜீவானந்தம் தனது அறையில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 7, 2025

காஞ்சிபுரம்: இலவச ட்ரோன் பயிற்சி முகாம்

image

தமிழக அரசின் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கான இலவச ட்ரோன் பயிற்சி முகாம் ஏப்ரல் 28 முதல் ஏப்ரல் 30 வரை சென்னையில் நடைபெற உள்ளது. 18 வயது பூர்த்தியான இருபாலரும் இதில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சி முகாமில் சேர விரும்புவோர் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

News April 6, 2025

செங்கல்பட்டு மாவட்டத்தில் 156 பணியிடங்கள் அறிவிப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 85 அங்கன்வாடி பணியாளர், 2 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 69 அங்கன்வாடி உதவியாளர் என மொத்தம் 156 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10th, 12th பாஸ் போதும். விருப்பமுள்ளவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையத்தில் ஏப்ரல் 23-க்குள் விண்ணப்பிக்கலாம். *ஆதரவற்ற பெண்கள் உள்ளிட்ட அனைத்து பெண்களுக்கும் ஷேர் பண்ணுங்க*.

error: Content is protected !!