Chengalpattu

News September 11, 2025

மறைமலைநகர் அருகே சிறுவனுக்கு சூடு வைத்த கொடூரம்

image

மறைமலைநகர் பகுதியில் வசிக்கும் 11 வயது சிறுவனுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்யப்படுவதாக, மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று, போலீசார் விசாரித்தனர். இதில், சிறுவனின் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சிறுவனின் தந்தையும், சித்தியும் சேர்ந்து, சிறுவனை தாக்கி, உடலில் பல்வேறு இடங்களில் சூடு வைத்தது தெரிந்தது.

News September 11, 2025

வார விடுமுறை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதி விடுமுறையை முன்னிட்டு கிளாம்பக்கத்திலிருந்து, திருச்சி, மதுரை, சேலம், திருவண்ணாமலை, கோயம்பத்தூர், நாகர்கோவில், திருப்பூர், கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு வரும் செப். 12-ந்தேதி 355 சிறப்பு பேருந்துகளும், செப். 13-ந்தேதி 350 பேருந்துகளும் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

News September 10, 2025

செங்கல்பட்டு மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

image

செங்கல்பட்டு மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த லிங்கில்<<>> சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு டவுன்லோடு பண்ணிக்கோங்க. ஷேர் பண்ணுங்க.

News September 10, 2025

தாம்பரம்: தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன்

image

சென்னை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள பண்ணை வீட்டில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் ஜீவன். இவரது தம்பி தேஜ். ஜீவனிடம், தேஜ் 1 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். ஆனால் ஜீவன் பலமுறை கேட்டும் பணத்தை கொடுக்கததாதல், ஆத்திரமடைந்த ஜீவன் தம்பியான தேஜை கத்தியால் வெட்டிக் கொலை செய்தானர். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 10, 2025

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்க. (SHARE பண்ணுங்க)

News September 10, 2025

செங்கல்பட்டு: BA, BSc, BE, B.TECH முடித்தால் வேலை

image

▶️ உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு https://www.mha.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்
▶️மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும்
▶️ BA, BSc, BE, B.TECH படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு,நேர்காணல் என 3 தேர்வுகள் நடைபெறும்.
▶️ விண்ணப்பிக்க செப்.14 கடைசி நாளாகும்
▶️ இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்

News September 10, 2025

செங்கல்பட்டு: கனரா வங்கியில் ரூ.22,000 சம்பளத்தில் வேலை

image

செங்கல்பட்டு, இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியல் காலியாக உள்ள sales, Marketing(Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்தால் போதுமானது. ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். இதற்கு விண்ணப்பிக்க அக்.6-ம் தேதியே இதற்கு கடைசி நாள். (நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News September 10, 2025

செங்கல்பட்டு: ஆசிரியர் வேலை! APPLY NOW

image

செங்கல்பட்டு மாவட்டப் பட்டதாரிகளே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (செப்.10) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனடியாக இங்கு<> கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். பேப்பர் 1 தேர்வு நவ.15 மற்றும் பேப்பர் 2க்கான தேர்வு நவ.16 நடைபெற உள்ளது. (ஆசிரியராக நினைக்கும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க)

News September 10, 2025

செங்கல்பட்டு தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

▶️செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு நாளை துவங்கி நடக்கிறது. ▶️தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு வர வேண்டும். ▶️மொபைல்போன், மற்றும் மின்னணு கைகடிகாரம், புளு டூத் போன்ற மின்னணு பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதியில்லை. ▶️தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (SHARE)

News September 10, 2025

செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்அப், எஸ்எம்எஸ் மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய குறுஞ்செய்திகளில் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930-க்கு புகாரளிக்கலாம்.

error: Content is protected !!