Chengalpattu

News January 12, 2026

செங்கை: அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.

News January 12, 2026

மாமல்லபுரம் பகுதியில் டபுள் டக்கர் பேருந்து சேவை துவக்கம்

image

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில், சென்னை அடையாறில் இருந்து மாமல்லபுரம் பகுதி வரை, கடந்த மாதம் டபுள் டக்கர் பேருந்து சேவை தொடங்க சோதனை ஓட்டம் நடைபெற்று வெற்றிகரமாக முடிந்தது. இந்நிலையில் இன்று 12 01 2026 சென்னை அடையாறில் இருந்து தொடங்கி வைக்கப்பட்ட டபுள் டக்கர் பேருந்து சேவை மாமல்லபுரம் வந்து அடைந்தது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் முடியை வைத்து பேருந்து சேவையை தொடங்கி வைத்தார்.

News January 12, 2026

செங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell<<>>.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News January 12, 2026

செங்கை: சிக்கிய பலே திருடன்!

image

கொளப்பாக்கத்தில், கடந்த 2024 ஆகஸ்டு மாதம் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார். இதுகுறித்து கிளாம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று சந்தேகத்தின் பேரில் கொளப்பாக்கம் பகுதியில் சுற்றித் திரிந்த புதுச்சேரியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலகிருஷ்ணனை (55) கைது செய்தனர்.

News January 12, 2026

செங்கை: சிக்கிய பலே திருடன்!

image

கொளப்பாக்கத்தில், கடந்த 2024 ஆகஸ்டு மாதம் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் 8 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார். இதுகுறித்து கிளாம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று சந்தேகத்தின் பேரில் கொளப்பாக்கம் பகுதியில் சுற்றித் திரிந்த புதுச்சேரியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலகிருஷ்ணனை (55) கைது செய்தனர்.

News January 12, 2026

செங்கல்பட்டு மக்களுக்கு ALERT!

image

செங்கை மக்களே, பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!

1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 12, 2026

செங்கல்பட்டு மக்களுக்கு ALERT!

image

செங்கை மக்களே, பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!

1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 12, 2026

செங்கை: கைவரிசை காட்டப்போய் ‘பல்பு’ வாங்கிய கும்பல்

image

அச்சிறுபாக்கம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சமையல் கூடத்திற்குள் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள், ஜன்னல் கண்ணாடியை உடைத்து மின்சார அடுப்பு உள்ளிட்ட பொருட்களைத் திருட முயன்றனர். அமுயற்சி தோல்வியடைந்ததால், அங்கிருந்த டியூப் லைட்டை மட்டும் திருடிச் சென்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு காவலாளியை வேலைக்கு எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

News January 12, 2026

மாமல்லபுரம்: ஒரு நொடியில் பறிபோன உயிர்!

image

கோவளம் – மாமல்லபுரம் இடையே நடைபெற்ற டிரையத்லான் போட்டிக்காக, பனையூர் பகுதியில் கொடிக்கம்பங்கள் நடும் பணியில் அச்சரப்பாக்கத்தைச் சேர்ந்த மெய்யப்பன் (29) ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பம் மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி மெய்யப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கானத்தூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

News January 12, 2026

செங்கை: பெண் தூக்கி வீசப்பட்டு துடிதுடித்து பலி!

image

ஊரப்பாக்கம் அருகே காரணைப்புதுச்சேரியைச் சேர்ந்த பூர்ணிமா (34), தனது கணவர் சரவணகுமாருடன் மோட்டார் சைக்கிளில் சினிமா பார்க்கச் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த லாரி மோதியதில், பின்னால் அமர்ந்திருந்த பூர்ணிமா தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநர் நிரஞ்சனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!