Chengalpattu

News March 30, 2025

பிரபல் ரவுடியை காலில் சுட்டுப் பிடித்த போலீஸ்

image

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த பிரபல ரவுடி அசோக் (28) மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதிகளவில் கஞ்சா விற்பது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, ஆப்பூா் வனப்பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் நேற்று (மார்.29) கைது செய்யச் சென்றனா். அப்போது அவர் அங்கிருந்த காவலா்களை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சித்தபோது. போலீசார் அவரை காலில் சுட்டுக் பிடித்தனர்.

News March 30, 2025

ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமை

image

குமரியில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையைச் சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவர், கோவில்பட்டியில் இருந்து தாம்பரத்திற்கு பயணம் செய்தார். நேற்று (மார்.29) அதிகாலையில் அந்த ரயில், உளுந்தூர்பேட்டையை கடந்து விழுப்புரம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது கண்ணன் (33) என்பவர் பெண்ணிடம் சில்மிஷம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 29, 2025

செங்கல்பட்டில் சனி தோஷம் நீக்கும் வட திருநள்ளாறு

image

சென்னை பொழிச்சலூரில் அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வட திருநள்ளாறு என்றும் அழைக்கப்படுகிறது. சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரர் பாவ விமோஷனம் பெற்ற தலங்களில் ஒன்றாக இக்கோயில் இருப்பதால் சனி பரிகார தலமாக விளங்குகிறது. இங்கு வந்து வழிபட்டால் ஏழரை, அஷ்டம, அர்த்தாஷ்டம, சனி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இன்று சனிப்பெயர்ச்சி நடைபெறுவதால் இங்கு சென்று வழிபடலாம். ஷேர் பண்ணுங்க

News March 29, 2025

நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை

image

கிளாம்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தர்ஷினி(21). இவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2 முறை நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் வருகிற மே மாதம் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்து அண்ணா நகரில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று தேர்வுக்கு தயாராகி வந்தார். இதனிடையே தேர்வு அச்சம் காரணமாக தர்ஷினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை எதற்கும் தீர்வல்ல. 

News March 29, 2025

ஹீட்டர் போடும்போது கவனம்: உயிரே போய்விடும்

image

மணிமங்கலத்தில், ஹீட்டர் சூடாகி விட்டதா என தொட்டு பார்த்த சிறுவன் (12) உயிரிழந்தான். நீங்கள் ஹீட்டர் போடும்போது, ஈரக்கையால் சுவிட்சை தொட கூடாது. ஹீட்டர் சூடாகி கொண்டிருக்கும்போது, சுவிட்சை ஆஃப் செய்யாமல் தொட்டு பார்க்க கூடாது. முடிந்த அளவுக்கு தொட்டு பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. அதிக நேரம் சுட வைப்பதையும் தவிர்க்க வேண்டும். ஹீட்டர் அருகில் குழந்தைகளை செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News March 29, 2025

பரோடா வங்கியில் 146 காலிப் பணியிடங்கள்

image

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 146 காலியிடங்கள் உள்ளன. துணை பாதுகாப்பு வங்கி ஆலோசகர், குழு தலைவர், தனிப்பட்ட வங்கியாளர், மூத்த உறவு மேலாளர் போன்ற உயர் பொறுப்புள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் ஏப்.15ஆம் தேதிக்குள் <>ஆன்லைனில் <<>>விண்ணப்பிக்கலாம். அனைத்து விண்ணப்பங்களும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஷேர் செய்யுங்கள்

News March 29, 2025

CSK-வை கிண்டல் செய்ததால் ஆத்திரம்

image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கிண்டல் செய்ததால், மது போதையில் இளைஞரை தாக்கிய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெருங்குடி அடுத்த கல்லுக்குட்டை பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான ஜீவரத்தினம் என்பவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. மோதல் தொடர்பாக, அப்பு ஜெகதீஷ் உள்ளிட்ட 7 பேரை துரைப்பாக்கம் போலீசார் நேற்று (மார்.28) கைது செய்தனர்.

News March 29, 2025

11 வழித்தடத்தில் மினி பேருந்து சேவைக்கு ஆணை

image

1.திருவடிசூலம் – பெரிய இரும்பேடு, 2.திருப்போரூர் பி.டி.ஓ. அலுவலகம் – திருப்போரூர், 3.கொட்டமேடு சாலை சந்திப்பு – முள்ளிப்பாக்கம் சாலை சந்திப்பு, 4.புத்திரன்கோட்டை – கடப்பாக்கம், 5.மதுராந்தகம் பேருந்து நிலையம் – வெளிக்காடு, 6.பெரிய வெளிக்காடு கூட்டுரோடு – பவுஞ்சூர், 7.மதுராந்கம் பேருந்து நிலையம் – கொளம்பாக்கம், 8.ஊனமலை கூட்டுரோடு – மதுார், 9.கொத்திமங்கலம் சாலை சந்திப்பு – சந்தனம்பட்டு.

News March 29, 2025

ஹீட்டரில் கையைவிட்ட சிறுவன் தூக்கி வீசப்பட்டு பலி

image

தாம்பரம் அருகே உள்ள மணிமங்கலம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் – தாட்சாயணி தம்பதி. இவர்களது மகன் தமிழரசன் (12) நேற்று (மார்ச் 28) மதியம் குளிப்பதற்காக வாட்டர் ஹீட்டர் மூலம் சில்வர் பாத்திரத்தில் வெந்நீர் சுட வைத்தார். தண்ணீர் சூடாகிவிட்டதா என்பதை அறிய ஹீட்டரில் கை வைத்த பார்த்தபோது, தமிழரசன் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

News March 28, 2025

போலீசாரை தாக்கிய பிரபல ரவுடி மீது துப்பாகிச்சூடு

image

செங்கல்பட்டு மாவட்டம் ஆப்பூர் வனப்பகுதியில் பிரபல ரவுடி அசோக்கை போலீசார் சுட்டுப்பிடித்தனர். ஆப்பூர் வனப்பகுதியில் சுற்றிவளைத்த போலீசாரை பார்த்து தப்ப முயற்சித்த போது நடத்திய துப்பாகிச்சூட்டில் காலில் காயம் ஏற்பட்டது. ரவுடி அசோக் மீது ஏராளமான குற்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!