India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இருந்து இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் உதவி காவல் ஆய்வாளர்களின் இன்றைய (ஏப்ரல் 11) பெயர் பட்டியல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ளது எனவே மக்கள் பயன்படுத்திக்கொண்டு காவல் ஆய்வாளர்களுக்கு தங்களது இரவு நேர பிரச்சனைகளை தெரிவிக்கலாம்.
தாம்பரம் மாநகர போலீசார் ஏற்பாடு செய்த ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி காரணமாக, சனிக்கிழமை காலை 7 முதல் 10 மணி வரை கிழக்கு கடற்கரை சாலையில் அக்கரை சந்திப்பில் இருந்து மாமல்லபுரம் நோக்கி போக்குவரத்து தடைப்படும். வாகனங்கள் பழைய மாமல்லபுரம் சாலை வழியாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் நாளை காலை வேலைக்கு செல்வோர் அதற்கு ஏற்றவாறு தங்களது பயணத்தை திட்டமிட்டு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
▶மாவட்ட ஆட்சியர் – 044-27427412 ▶மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 044-27427412 ▶மாவட்ட வருவாய் அலுவலர் – 044-27427413 ▶செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் – 9445000414 ▶மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் – 044-71116862 ▶காவல் கண்காணிப்பாளர் 044-29540555 ▶டிஐஜி – 04427239009, ▶மாவட்ட மின்வாரியம் – 044-28521109, ▶செங்கல்பட்டு PRO- 9941403602, ▶விவசாய இணை இயக்குநர் – 044-27428391
வண்டலூர் மூகாம்பிகை அம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை. பேரமனுார் வாலீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண தெப்ப உத்சவம். அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை. பெரும்பேர் கண்டிகை தாந்தோன்றீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம், பூஜை. சோத்துப்பாக்கம் பாலமுருகன் கோவிலில் மண்டலாபிஷேகம். கேளம்பாக்கம் பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு. கூடுவாஞ்சேரி சக்தி விநாயகர் கோவிலில் நித்திய பூஜை. ஷேர்
நாளை ஏப்ரல் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, செங்கல்பட்டு மண்டல உதவி ஆணையர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நடத்தபட உள்ளன. பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்றவற்றை செய்து கொள்ளலாம். இலவசமாகவே ரேஷன் கார்டில் அப்டேட் செய்துகொள்ளலாம். இந்த அறிவிப்பால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு மாவட்ட அளவில் தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வளாகத்தில் டிசம்பர் 15ம்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரிலோ /dadskillcpt@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ / 6379090205, 044 – 27426554 தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள நகர்புற சுகாதார நல மையங்களில் 345 பணியிடங்கள் உள்ளன. மருத்துவ அதிகாரி, நர்ஸ், சுகாதார பணியாளர், சமூக சேவகர், பேறுகால பணியாளர், எக்ஸ்ரே வல்லுநர், சப்போர்ட் ஸ்டாஃப் உள்ளிட்ட பணிகள் நிரப்பப்பட உள்ளன. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் நாளை 5 மணிக்குள் ரிப்பன் மாளிகைக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும். ஷேர் செய்யுங்க
மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு, பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் முகாம் 15.04.2025 (செவ்வாய் கிழமை) அன்று செங்கல்பட்டு, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில், தொழிற் பயிற்சி நிலையங்களில் பயின்றவர்கள் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செங்கல்பட்டு, வண்டலூர், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. வடகிழக்கு பருவமழைக்கு, 1,217 ஏக்கர் விவசாய நிலங்களில், நெல் பயிர் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்க, அரசுக்கு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் பரிந்துரை செய்துள்ளார்.
அக்னிவீர் திட்டத்தின்படி, ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சியான இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த <
Sorry, no posts matched your criteria.