Chengalpattu

News September 11, 2025

சிட்லப்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

image

நாமக்கல்லைச் சேர்ந்தவர் கந்தன் (26). இவர் சிட்லப்பாக்கம் பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று வீடு அடித்தளம் கட்ட தோண்டிய பள்ளத்தில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற மின் மோட்டாரை இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிட்லப்பாக்கம் போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.

News September 11, 2025

செங்கல்பட்டு: B.E./B.Tech முடித்தால் ரூ.50,000 சம்பளம்

image

செங்கல்பட்டு, பொதுப்பணிதுறை நிறுவனத்தில் காலியாக உள்ள (Graduate Engineer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் B.E./B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே கிளிக் பண்ணுங்க. வரும் செப்.21-ம் தேதியே கடைசி நாள். (உடனே SHARE பண்ணுங்க)

News September 11, 2025

செங்கல்பட்டு: தமிழ் தெரிந்தாலே.. ரூ.80,000 வரை சம்பளம்

image

▶️கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ▶️18 முதல் 28 வயது உள்ளவர் விண்ணப்பிக்கலாம். ▶️ஏதேனும் ஒரு டிகிரி போதும். ▶️தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ▶️சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை. ▶️ https://www.ibps.in/என்ற இணையதளத்தில் செப்.21க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ▶️பணிக்கான தேர்வு நவம்பர் (அ) டிசம்பரில் நடைபெறும். ▶️மேலும் தகவலுக்கு கிளிக் பண்ணுங்க.

News September 11, 2025

செங்கல்பட்டில் வேலை வேண்டுமா? இங்கு போங்க

image

செங்கல்பட்டு அடுத்த ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் வரும் செப்.13-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார். இதில், 10th, 12th, டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, 044- 2742 6020, 94868 70577 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். (வேலை தேடுபவர்களுக்கு SHARE)

News September 11, 2025

செங்கல்பட்டு: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

image

செங்கல்பட்டு சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருக்க வேண்டும் என்றனர். (SHARE பண்ணுங்க)

News September 11, 2025

செங்கல்பட்டு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் 2ம் நிலை காவலர், சிறை காவலர் (ம) தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனால் மேற்கண்ட பதவிகளுக்கு எழுத்து தேர்விற்கான இலவச பயிற்சி, செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 12-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், விபரங்களுக்கு 044- 2742 6020 எண்ணை அழைக்கலாம்.

News September 11, 2025

மறைமலைநகர் அருகே சிறுவனுக்கு சூடு வைத்த கொடூரம்

image

மறைமலைநகர் பகுதியில் வசிக்கும் 11 வயது சிறுவனுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்யப்படுவதாக, மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று, போலீசார் விசாரித்தனர். இதில், சிறுவனின் தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சிறுவனின் தந்தையும், சித்தியும் சேர்ந்து, சிறுவனை தாக்கி, உடலில் பல்வேறு இடங்களில் சூடு வைத்தது தெரிந்தது.

News September 11, 2025

வார விடுமுறை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதி விடுமுறையை முன்னிட்டு கிளாம்பக்கத்திலிருந்து, திருச்சி, மதுரை, சேலம், திருவண்ணாமலை, கோயம்பத்தூர், நாகர்கோவில், திருப்பூர், கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு வரும் செப். 12-ந்தேதி 355 சிறப்பு பேருந்துகளும், செப். 13-ந்தேதி 350 பேருந்துகளும் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

News September 10, 2025

செங்கல்பட்டு மக்களே சான்றிதழ்கள் காணவில்லையா?

image

செங்கல்பட்டு மக்களே! சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் நமக்கு அரசின் திட்டங்களை பெற கட்டாயமாக தேவைப்படும் ஆவணங்கள். இது தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே உங்கள் போனில் டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். <>இந்த லிங்கில்<<>> சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு டவுன்லோடு பண்ணிக்கோங்க. ஷேர் பண்ணுங்க.

News September 10, 2025

தாம்பரம்: தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன்

image

சென்னை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள பண்ணை வீட்டில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் ஜீவன். இவரது தம்பி தேஜ். ஜீவனிடம், தேஜ் 1 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். ஆனால் ஜீவன் பலமுறை கேட்டும் பணத்தை கொடுக்கததாதல், ஆத்திரமடைந்த ஜீவன் தம்பியான தேஜை கத்தியால் வெட்டிக் கொலை செய்தானர். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!