Chengalpattu

News April 14, 2025

விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

image

சிங்கபெருமாள்கோவில் அடுத்த திருக்கச்சூர் பகுதியில் உள்ள பாழடைந்த விவசாய கிணற்றில், அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதாக, மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 13, 2025

தமிழ் புத்தாண்டு- செம்மலை முருகன் கோயில் போங்க

image

செங்கல்பட்டு மாவட்டம் செம்மலையில் முருகன் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை, மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். SHARE பண்ணுங்க.

News April 13, 2025

பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி

image

மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், பெண்களுக்காக அன்னபூர்ணா என்ற திட்டத்தை SBI வங்கி செயல்படுத்தி வருகிறது. புதிதாக கேட்டரிங், பேக்கரி தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்கள் இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். இதற்கு எந்தவித பிணயமும் தேவையில்லை. இதுகுறித்த முழு தகவலை உங்கள் ஊரில் உள்ள SBI வங்கி கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News April 13, 2025

நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் எழுத உத்தரவு

image

செங்கல்பட்டு கலெக்டர் தலைமையில், சமூக பொறுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் அனைத்து நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் என எல்லாவற்றிக்கும் தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும் எனவும்  தமிழில் பெயர் பலகைகள் மே மாதம் 15ம் தேதிக்குள் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News April 13, 2025

போலி செய்திகளைப் பயன்படுத்தி மோசடி; போலீஸ் எச்சரிக்கை

image

முதலீட்டு வலைத்தளங்களை ஊக்குவிக்கும் சமூக ஊடகப் பதிவுகள் குறித்து காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதில், சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் அல்லது இடுகைகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும், அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் அல்லது நம்பகமான ஊடகங்கள் மூலம் செய்திகள் மற்றும் விளம்பரங்களை சரிபார்க்கவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News April 13, 2025

செங்கல்பட்டில் இன்றைய இனிதான நிகழ்வுகள்

image

▶ செங்காடு யோக ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை, வழிபாடு ▶புதுப்பாக்கம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை, வழிபாடு ▶செம்பாக்கம் பால திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ▶அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் பள்ளியறை பூஜை ▶பெரும்பேர் கண்டிகை தாந்தோன்றீஸ்வரர் கோவிலில் நைவேத்திய பூஜை ▶சோத்துப்பாக்கம் பாலமுருகன் கோவிலில் மண்டலாபிஷேகம் ▶நந்திவரம் விநாயகர் கோவிலில் நித்திய பூஜை

News April 12, 2025

கடன் தொல்லை நீக்கும் ஆட்சீசுவரர்

image

பங்குனி மாத சனிக்கிழமையில் வரும் பௌர்ணமி மிக விஷேசம். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கத்தில் ஆட்சீசுவரர் கோயில் உள்ளது . இங்கு வந்து தீபம் ஏற்றி வழிபட்டால் EMI உள்ளிட்ட அனைத்து கடன் தொல்லைளும் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பியாக உள்ளது. மேலும், இறைவனை மனதார வேண்டினால், சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். கடன் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 12, 2025

இந்திய கடற்படையில் +2 முடித்தவர்களுக்கு வேலை

image

இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாதம் ரூ.21,700 – ரூ.69,100 சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.60. இந்த <>இணையதளத்தில் <<>>வரும் ஏப்ரல்.16க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர்

News April 12, 2025

பல லட்சம் மோசடி செய்தவர்கள் கைது

image

தாம்பரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (52) கடந்த பிப்ரவரி மாதம் இவரை போனில் தொடர்பு கொண்ட சிலர், மும்பை போலீஸ் என கூறி மிரட்டி, 50 லட்சம் ரூபாயை பறித்தனர். அதேபோல் சரத் (32) என்பவரிடம் பங்குச்சந்தை வழியாக அதிகம் சம்பாதிக்கலாம் என கூறி 1.97 லட்சம் ரூபாயை ஏமாற்றினர். இது குறித்து விசாரித்த தாம்பரம் சைபர் குற்றப்பிரிவு போலீசார் டில்லியைச் சேர்ந்த ராயிஸ் (25) மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர்.

News April 12, 2025

வீடு புகுந்து பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

image

கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லுாரில் வசிப்பவர் வினோத்குமார், (39). நேற்று அதிகாலை 5:30 மணியளவில், முகமூடி அணிந்த மர்ம நபர், வினோத்குமாரின் வீட்டுக் கதவை இரும்பு கம்பியால் பிளந்து, உள்ளே நுழைந்துள்ளார். பின், உறங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி மம்தாஸ்ரீ அணிந்திருந்த தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பினார். புகாரின் அடிப்படையில் இச்சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!