Chengalpattu

News April 16, 2025

செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை

image

செங்கல்பட்டு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 21 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, ரூ.34,000 வரை சம்பளம் வழங்கப்படும். B.Sc, BSMS, BUMS, Literate படித்த 45 வயதிற்கு உட்பட்டவர்கள் நாளை(ஏப்.16) மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பத்தை பதிவிறக்கலாம். *நாளைக்கு தான் கடைசி தேதி. சீக்கிரம் நண்பர்களுக்கு பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்*

News April 16, 2025

ஜாக்கிரதை! ஒரு க்ளிக் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்!

image

அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள். இது குறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்

News April 16, 2025

ஔவைவும், வள்ளுவரும் ஒன்றாக பயணித்த இடம் எது தெரியுமா?

image

சங்க நூலான சிறுபாணாற்றுப்படையில் இடைக்கழிநாடு பகுதியைப் பற்றி விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறுபாணாற்றுப்படையை எழுதிய நல்லூர் நத்தத்தனார் பிறந்த ஊராக விளங்கி வருகிறது.இரு பெரும் உப்பளக் கால்வாய்களின் மத்தியில் இந்த ஊர் அமைந்துள்ளது. தமிழ் மூதாட்டி ஔவையாரும், திருவள்ளுவரும் இடைக்கழி நாடு வழியாக படகு மூலம் மதுரை தமிழ்ச் சங்கத்துக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க

News April 16, 2025

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள்

image

கடந்த 2018 மார்ச் 5ம் தேதி தாம்பரத்தை சேர்ந்த 6 வயது சிறுமி விளையாடிய கொண்டிருக்கும் போது, அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (40) என்பவர் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த வழக்கில் முருகனுக்கு ஆயுள் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி நசீமா பானு நேற்று தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கபட்ட சிறுமிக்கு 3 லட்ச ருபாய் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

News April 15, 2025

செங்கல்பட்டு: இரவில் வெளியே செல்பவர்கள் கவனத்திற்கு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இருந்து இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் உதவி காவல் ஆய்வாளர்களின் இன்றைய (ஏப்ரல் 15) பெயர் பட்டியல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஆபத்து நேரங்களில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களை பொதுமக்கள் அழைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. *இரவு தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்*

News April 15, 2025

செங்கல்பட்டு மாவட்டத்தில் 154 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

image

செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 154 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்கு, 10 வகுப்பு பாஸ்/ஃபெயில் ஆன 18-40 வயதுடைய பெண்கள் https://chengalpattu.nic.in/ என்ற தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கி, இந்த மாதம் 17- 29-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார். *செம வாய்ப்பு. தெரிந்தவர்களுக்கு பகிரவும்

News April 15, 2025

டிகிரி இருந்தால் போதும்; மெட்ராஸ் ஐகோர்டில் வேலை

image

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு இளநிலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 சம்பளம் வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News April 15, 2025

பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

image

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.இந்த நிலையில் மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

News April 15, 2025

திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு கால் எலும்பு முறிவு

image

செங்கல்பட்டில் மன்சூர் அலி என்பவரின் துணிக்கடையில் கடந்த 7ம் தேதி ரூ.50,000 திருடப்பட்டது. மேலும் அருகில் இருந்த கடைகளிலும் பணம் திருடப்பட்டது. இதில் சென்னையை சேர்ந்த அருண், வெள்ளை செல்வா, ராகவேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்ப முயன்ற ராகவேந்திரன், வெள்ளை செல்வா இருவரும் தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின், மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

News April 14, 2025

திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

error: Content is protected !!