India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இ.பி.எஸ். அறிவுறுத்தலின்படி, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்குவது மற்றும் மக்கள் நலப்பணிகள் குறித்த செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்டம் முழுவதும் இன்று (அக்.2) முதல் வரும் 23ஆம் தேதி வரை 20 இடங்களில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த ஒன்றிய, பகுதி, பேரூர், நகர செயலாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் அறிவுறுத்தி உள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் ஆய்வு கூட்டத்தில், அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார். அப்போது, செங்கல்பட்டு – உளுந்தூர்பேட்டை வரை உள்ள 4 வழித்தடமானது, தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையாகும். இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் நடைபெறுகின்றன. எனவே, முன்னுரிமை அடிப்படையில் 8வழிச்சாலையாக மேம்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்” என்றார்.
கேளம்பாக்கம் ஊராட்சியில் இன்று நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் அன்பரசன் பங்கேற்கிறார். அவருடன் ஆட்சியர் ச.அருண்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றன. பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் நேற்று (1.10.24 ) செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், சித்தாமூர் மேற்கு ஒன்றிய ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கீழ்மருவத்தூர் ஹ. பூபதி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து, வாழ்த்து பெற்றார். அப்போது மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் உடன் இருந்தார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவனையில் இரத்த தான முகாம் நடைபெற்றது. மருத்துவ மாணவர்கள் பங்கேற்று இரத்த தானம் செய்தனர். அவர்களுக்கு மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் பாராட்டு சான்றிதழை வழங்கினார். இந்நிகழ்வில், சார் ஆட்சியர் நாராயண சர்மா, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோதிகுமார், துணை முதல்வர் அனிதா மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தாய்வாட்டில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்களுக்கான தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். சார் ஆட்சியர் நாராயண சர்மா ஒர்க் முதல்வர் ஜோதி குமார் துணை முதல்வர் அனிதா உடன் இருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை மாவட்டத்தில் உள்ள 359 ஊராட்சிகளிலும் காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இந்த கூட்டத்தில் ஊராட்சி நிா்வாகம், பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, ஊராட்சி குறித்த வளர்ச்சி திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் தவறாமல் இதில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் மாவட்ட சுகாதாரத்துறை (District Health Society) மூலமாக தேர்வு செய்யப்பட்டு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் பணிபுரிவதற்கு 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணையினை ஆட்சியர் ச.அருண்ராஜ் வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர், செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண உடனிருந்தனர்.
மேலக்கோட்டையூரில் இன்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு ஒதுக்கப்பட்ட சுமார் 6 ஏக்கர் நிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். அந்த 6 ஏக்கர் இடத்தில் தங்களுக்கு என்றும், அதில், மருத்துவமனை, சமுதாய நலக்கூடம், விளையாட்டு திடல் உள்ளிட்டவை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக தலைவர் கௌதமி ஆறுமுகம், தடை மனுவையும் அமைச்சரிடம் அளித்திருந்தார்.
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினை, காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன், நேரில் சந்தித்து சால்வை அணிவித்து, வாழ்த்துகளை தெரிவித்தார். அவருடன், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கட்சி நிர்வாகிகளும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.