India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பதி வரை காஞ்சிபுரம், அரக்கோணம் வழியாக காலை 4.20 மணிக்கும், பிற்பகல் 12.00 மணிக்கும் செல்லும் காற்று மாசுபாடு இல்லாத பேருந்தினை மக்களின் பயன்பாட்டிற்காக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், நகர்மன்ற தலைவர் தேன்மொழிநரேந்திரன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர். அந்த பேருந்தில் பழைய பேருந்து நிலையம் வரை பயணச்சீட்டு பெற்று பயணித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருணா குளம் பகுதியச் சேர்ந்த பார்த்திபன் (36). இவருடைய அம்மாவின் இரண்டாவது கணவர் கோபால் (68). இன்று காலை கோபாலுக்கும், பார்த்திபனுக்கும் இடையே மது போதையில் ஏற்பட்ட தகராறில் கோபால் கோடாரியை கொண்டு பார்த்திபனின் தலையில் தாக்கியுள்ளார். இதில், சம்பவ இடத்தில் பார்த்திபன் உயிரிழந்தார். மைது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் பல்நோக்கு பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் உள்ள 14 இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். https://chengalpattu.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
விக்கிரவாண்டியில் 27.10.2024 அன்று நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் கொள்கை திருவிழா அழைப்பிதழை நேற்று மாவட்டத் தலைவர் மின்னல் குமார் தலைமையில் பழைய பல்லாவரம் பகுதி பொதுமக்களுக்கு வீடு வீடாகவும் கடைகளுக்கும் சென்று வழங்கி, மாநாட்டில் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டது.
செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுத்தேரியைச் சேர்ந்த யுவராஜ்(27) என்பவருக்கு 6 மாத பெண்குழந்தை உள்ளது. தனியார் நிறுவனத்தில் வேலை புரிந்த இவர், ஒரு மாதமாக வேலைக்கு செல்லாத காரணத்தினால், குடும்ப செலவுக்கு ஆன்லைன் ஆஃப் மூலம் கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், மன உளைச்சலில் இருந்தவர் நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
செங்ல்பட்டில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிழவுவதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைமலை நகர் அண்ணா சாலையில் உள்ள அரசு மதுபானக்கடையில் இன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. கடையிலிருந்து புகை வருவதைக் கண்டு மறைமலை நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். ஃப்ரிஜில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது. இச்சம்பவம் குறித்து மறைமலை நகர் போலிசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மறைமலை நகரில், ஜீவன் மருத்துவமனையின் 2ஆவது கிளை நேற்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில், காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ஓ.வி.ஜெயகுமார், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் (அடுத்த 3 மணி நேரத்திற்கு) பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிலிருந்து வெளியே செல்வோர் குடை எடுத்துச் செல்லவும். ஷேர் பண்ணுங்க
ரத்தினமங்கலத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவனை, நேற்று மாலை வண்டலூரில் 5 பேர் கடுமையாக தாக்கி கத்தியால் வெட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக கிளாம்பாக்கம் போலீசார் 5 பேரை கைது செய்து விசாரணை செய்தனர். அதில், பெண்ணை காதலிப்பதில் ஏற்பட்ட தகராறில் தாக்கியதாக தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பெருங்களத்தூரை சேர்ந்த திவாகர் (18) சஞ்சய் (18), கிரிதரன் (18) மற்றும் 2 சிறுவர்களை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.