India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு பெய்த கனமழையின் காரணமாக தோகாவிலிருந்து 317 பயணிகளுடன் மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த கத்தார் விமானம், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. மேலும் துபாய், லண்டன், சார்ஜா ஆகிய விமானங்கள் வானில் வட்டமடித்து பின்பு தரையிறங்கின. மீனம்பாக்கதில் இருந்து லண்டன், துபாய், தாய்லாந்து, கத்தார், மொரிசியஸ் உள்ளிட்ட 10 விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரயில் நிலைய சாலையில் இருந்து வெளியே வந்த நால்வர், போலீசாரைக் கண்டதும் தப்பிச் செல்ல முயன்றனர். நால்வரையும் மடக்கிப் பிடித்து போலீசார் சோதனை செய்த போது, அவர்களிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர்கள் நெல்லையை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 11 பணியிடங்களை கொண்ட இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மாதம் ரூ.8,500- 23,800 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 25.09.2025 க்குள் அதிகாரப்பூர்வ மாவட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
செங்கல்பட்டில் நேற்று (செப்-15) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின்வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
செங்கல்பட்டு LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 100 Insurance Advisor பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு முடித்த இருபாளர்களும் விண்ணப்பிக்கலாம். வயது 18 முதல் 60 வரை இருக்கலாம். இதற்கு மாதம் ரூ.25,000 முதல் 50,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
தாம்பரம், அரசு மருத்துவமனையில் இன்று வழக்கத்திற்கு மாறாக மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும், அங்கு மாத்திரைகள் வாங்க போதுமான கவுண்ட்டர்கள் இல்லாததால், மிகவும் சிரமம் அடைந்தனர். எனவே, இங்கு கூடுதல் கவுண்ட்டர்களை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா இன்று (செப்.15) கொண்டாடப்படுகிறது. அதன்படி, தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா, சிலைக்கு மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். மேலும் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை மேயர் காமராஜர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை 600 பக்தர்களை ராமேஸ்வரம் – காசிக்கு ரயில் மூலமாக இலவசமாக ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல உள்ளது. 60 முதல் 70 வயதுடைய, ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்திற்குள் வருமானம் உள்ள பக்தர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை செங்கல்பட்டு மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலோ அல்லது இந்த<
செங்கல்பட்டு மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <
Sorry, no posts matched your criteria.