India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புனித தோமையர் மலை போலீசார் நேற்று மாலை, ஜிஎஸ்டி ரோட்டில் உள்ள தபால் அலுவலகம் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி வந்த 2 பேரை சோதனை செய்தபோது, 25 கிராம் ஹெராயின் வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களை கைது செய்து மேற்கொண்ட விசாரித்ததில் அஸ்ஸாம்மை சேர்ந்த மன்சூல் இஸ்லாம் (28), முபாரக் அலி (27) ஆகிய இருவரை கைது செய்தனர்.
கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், அடிக்கடி மின்வெட்டும் ஏற்படும். அவ்வாறு, முன்னறிவிப்பின்றி ஏற்படும் மின்வெட்டு குறித்து புகார் அளிக்க மின்னகத்தின் (9498794987) எண்ணை தொடர்வு கொள்ளவும். ஒருவேளை லைன் கிடைக்கவில்லை அல்லது பிசியாக இருந்தால், 9444371912 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ X <
தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் விவேக்ராஜ் (29). இவர் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. சீசிங் ராஜாவின் கூட்டாளியான இவர் போலீசார் என்கவுன்ட்டர் செய்து விடுவார்களோ என பயந்து சில மாதங்களுக்கு முன் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்நிலையில் ஜாமினில் வந்த இவர் சேலையூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்டதால் நேற்று கைது செய்யப்பட்டார்.
இன்று (ஏப்ரல்.21) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் விவரங்கள் செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர். இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளின் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்பட்டால் புகைப்படத்தில் இருக்கும் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை உதவிக்கு அழைக்கலாம்.
▶️அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர்
▶️நினைவுச்சின்னங்கள், மகாபலிபுரம்
▶️முதலை வங்கி, மகாபலிபுரம்
▶️வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், வேடந்தாங்கல்
▶️தக்ஷிண சித்ரா அருங்காட்சியகம், முட்டுக்காடு
▶️இந்திய கடல் சிற்பி அருங்காட்சியகம், மகாபலிபுரம்
▶️கலங்கரை விளக்கம், மகாபலிபுரம்
▶️சட்ராஸ் டச்சு கோட்டை, சதுரங்கப்பட்டினம்
▶️முட்டுக்காடு படகு குழாம், முட்டுக்காடு
▶️கோவளம் கடற்கரை, கோவளம்
ஷேர் பண்ணுங்க மக்களே
▶ கந்தசுவாமி முருகன் கோவில், திருப்போரூர்
▶ ஸ்ரீ மஹா பைரவர் ருத்ர ஆலயம், செங்கல்பட்டு
▶ வல்லம் மலை குகைக் கோயில் , வல்லம்
▶ ஞானபுரீஸ்வரர் கோயில், செங்கல்பட்டு
▶ சதுர்புஜ ராமர் கோயில், செங்கல்பட்டு
▶ கழுகு மலை கோயில், திருக்கழுகுன்றம்
▶ ஆதிபராசக்தி கோயில், மேல்மருவத்தூர்
▶ காளத்தீஸ்வரர் திருக்கோயில், காட்டாங்குளத்தூர்
இங்கெல்லாம் யாருடன் செல்ல விரும்புகிறீர்களோ அவர்களுக்கெல்லாம் ஷேர் செய்யுங்கள்
செங்கல்பட்டில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்ற பானங்களை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே <
வண்டலூர் அருகே இயங்கி வரும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைகழக மாணவியை கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்த உதவிய பேராசிரியர் ராஜேஷ்குமாரை (45) போலீசார் கைது செய்தனர். இவருக்கு கடந்த மாதம்தான் திருமணம் நடைபெற்றது. கருக்கலைப்பின்போது மாணவிக்கு ரத்தப்போக்கு அதிகமானதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே முதல் குளிர்சாதன மின்சார சேவை நேற்று முதல் பயணிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நாளொன்றுக்கு மொத்தமாக 6 சேவைகள் இயக்கப்பட்டு வரும் இந்த ரயில், தற்போது எந்தெந்த நேரங்களில் இந்த ரயிலை இயக்கலாம் என்று பொதுமக்களிடம் கருத்து கேட்கும் முயற்சியில் தெற்கு ரயில்வே ஈடுபட்டுள்ளது. அதற்காக வாட்ஸ் அப் எண்ணையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது (6374713251) ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.