India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டம் சுகாதார துறை துணை இயக்குநராக பணியாற்றி வந்த மருத்துவர் பி.பரணிதரன், வேலூர் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், அங்கு பணிபுரிந்த மருத்துவர் பி.ஜி.பானுமதி, செங்கல்பட்டு மாவட்ட துணை இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொது சுகாதார துறை இயக்குநர் செல்வ விநாயகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில், கடந்த 2022ஆம் ஆண்டு 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில், குமார் என்பவர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு இன்று விசாரணை நடைப்பெற்றது. இதில், செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் குற்றவாளிக்கு 3 பிரிவுகளில் 22 ஆண்டுகள் சிறை தண்டனை,ரூ.2,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு பரிந்துரைக்கப்பட்டது.
திருக்கழுக்குன்றம் அடுத்த பாண்டூரை சேர்ந்தவர் செல்வம். இவர், வீட்டில் கைகுழந்தையுடன் நேற்று தனியாக இருந்தபோது குடுகுடுப்புக்காரன் வேடமிட்ட ஆசாமி ஒருவர் வந்து முகத்தில் ஸ்பிரே அடித்து பீரோவில் இருந்த 4 சவரன் தங்க நகை, 400 கிராம் வெள்ளி கொள்ளை, நல்வாய்பாக பூஜை அறையில் ரூ.70,000 தப்பித்தது. இச்சம்பவம் குறித்து திருக்கழுக்குன்றம் போலிசார் வழக்கு பதிந்து, கைரேகை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை, காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (38). தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று (அக்.21) தனது டூவீலரில் திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். மதுராந்தகம் அடுத்த ஊனமலை அருகே வந்தபோது முன்னாள் சென்ற லாரி திடீரென வலதுபுறம் திரும்பியதால் டூவீலர் லாரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுராந்தகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்பவர்கள், போக்குவரத்து நெரிசல் உள்ள தாம்பரம், பெருங்களத்தூர் சாலைகளை பயன்படுத்த வேண்டாம். மாற்றாக வண்டலூர் மீஞ்சூர் புறவழி சாலை, ஓ.எம்.ஆர். மற்றும் இ.சி.ஆர். சாலைகளை பயன்படுத்தி ஊருக்கு செல்லலாம். இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும் எனக் கூறியுள்ளார். உங்கள் கருத்து?
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் மேல்மருவத்தூர் லட்சுமி பங்காரு கல்லூரியில், வரும் 26ஆம் தேதி அமைச்சர் தலைமையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 50,000 காலியிடங்களுக்கு நிரப்ப உள்ளனர். காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஷேர் பண்ணுங்க
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (22.10.2024) மாலை 3.00 மணியளவில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் “குறை கேட்பு கூட்டம்” குரு-சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் முன்னிலையிலும் நடைபெற உள்ளது.
ஓடிசா மாநிலத்திலிருந்து, பிளாஸ்டிக் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று, ஓஎம்ஆர் சாலையில் பாண்டிச்சேரி நோக்கி சென்றது. அப்போது பையனூர் பகுதியில் பின்னால் வந்து கார்களுக்கு வழிவிடுவதற்காக சாலையோரம் ஒதுங்கியதாக தெரிகிறது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 2023-24 கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு கல்வி பயின்று பொது தேர்வு எழுதி முதல் 3 இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் வழங்கினார். உடன் அரசு அதிகாரிகள் பலர் இருந்தனர்.
தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர் செல்வதற்காக வரும் அக்.28, 29, 30 ஆகிய தேதிகளில் கிளாம்பக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்தம் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.