Chengalpattu

News February 12, 2025

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆட்டோக்களுக்கு தடை 

image

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே வெளி ஆட்டோக்களுக்கு அனுமதி இல்லை எனவும், பதிவு செய்யாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோக்களை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என தாம்பரம் காவல்துறை அறிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இளம் பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் சீண்டல் செய்த சம்பவத்தை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News February 12, 2025

காலிப்பணியிடங்கள் நிரப்ப அழைப்பு

image

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு இயங்கி வருகிறது. இங்கு, 2 துணை தலைமை சட்ட உதவி வழக்கறிஞர்கள் பணிகள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பங்களை (https;//chengalpattu.dcourts.gov.in) என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை, வரும் 21ஆம் தேதிக்குள், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமர்ப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News February 12, 2025

துணை ஆட்சியர்களுக்கு கூடுதல் பொறுப்பு

image

செங்கல்பட்டு சார் ஆட்சியர், ஊரக வளர்ச்சி கூடுதல் ஆட்சியராக பணி மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், துணை ஆட்சியர் நிலையில் பணியாற்றி வரும் மாவட்ட வட்ட வழங்கள் அலுவலர் சாகிதா பர்வீன், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியராகவும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரான நரேந்திரன் – தாம்பரம் வருவாய் கோட்டாட்சியராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கி மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News February 12, 2025

டிப்ளமோ முடித்தவர்களுக்கு HP நிறுவனத்தில் வேலை

image

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு. மார்க்கெட்டிங் பிரிவில் இருக்கும் 234 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் பொறியியல் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும். <>ஷேர் பண்ணுங்க<<>>

News February 12, 2025

சத்துணவு திட்டத்தில் காலிப் பணியிடங்கள்

image

செங்கல்பட்டு மாவட்டம் சத்துணவு திட்டத்தில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒப்பந்த அடிப்படையில் இந்த நியமனம் நடைபெற உள்ளது. அலுவலக உதவியாளர், தகவல் தொகுப்பாளர், கணினி உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தால் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.8,000 – ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும்.

News February 12, 2025

தனியார் ரத்த பரிசோதனை மையத்தில் தீ விபத்து

image

கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம் பஜார் சாலையில் தனியார் ரத்த பரிசோதனை மையம் செயல்படுகிறது. நேற்று (பிப்.11) காலை, ரத்த பரிசோதனை மையத்தின் உட்புற பகுதியிலிருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் தீயும் பற்றி எரியத் தொடங்கியது. அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் வந்து தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். இதில், ரத்த பரிசோதனை மையச் சாதனங்கள், ‘பிரிஜ், ஏசி’ உள்ளிட்டவை எரிந்து சாம்பலாகின.

News February 11, 2025

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் காலி பணியிடம்

image

செங்கல்பட்டு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் அலுவலகத்தில் உள்ள 2 துணை தலைமை சட்ட உதவி வழக்கறிஞர்கள் காலி பணியிடங்கள் தகவல்களை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தின் https://chengalpattu.dcourts.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் பிப்.21ம் தேதி மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்கவேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. #Share_ it

News February 11, 2025

செங்கல்பட்டில் வேலைவாய்ப்பு முகாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் சார்பாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களை https://tnprivatejobs.tn.gov.in/home/jobs என்ற இணையதளத்தில் காணலாம். 6383460933 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். 

News February 11, 2025

தைப்பூசத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

தைப்பூசம் மற்றும் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று (பிப்.11) செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் மதுகூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினத்தில், மதுபானக்கடைகள் திறந்திருந்தாலோ அல்லது சட்ட விரோதமான கள்ளச்சந்தையில் விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. ஷேர் செய்யுங்கள்

News February 11, 2025

1,124 காலிப் பணியிடங்கள்: 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

image

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 – ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி, திறன், எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை செய்து தேர்வு செய்யப்படுவார்கள். <>ஷேர் பண்ணுங்க<<>>

error: Content is protected !!