India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த திருத்தேரி அருகே, திருட்டு பட்டம் கட்டியதால், நண்பனையே கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அரை கிலோ கஞ்சா, செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த தாக்குதலில் பீர் பாட்டில் மற்றும் கத்தி பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது<
செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கி நேற்று திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எய்ச்சர் சரக்கு வாகனம் ஒன்று சென்றது. புலிப்பாக்கம் அருகே சென்ற போது ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால், பின்தொடர்ந்து வந்த மற்றொரு லாரி, சரக்கு வாகனத்தின் பின்பக்கம் மோதியது. மேலும், பின்னால் வந்த இரண்டு கார்கள், லாரி என அடுத்தடுத்து ஐந்து வாகனங்கள் ஒன்றன் பின் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.
ந்திய அஞ்சல் துறையில் பணிபுரிய தமிழகத்திற்கு மட்டும் சுமார் 32500 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும் தேர்வு ஏதும் இல்லாமல் மெரிட் முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. 18 – 40 வயது உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.10,000- 29,380 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் செப்.30க்குள் <
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த பெரிய வெண்மணி கிராமத்தில், கல்குவாரி ஒன்றில் கற்களை ஏற்றி வந்த லாரி மண் சரிவு காரணமாக நேற்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநரான வடமாநிலத்தைச் சேர்ந்தவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த செய்யூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது
செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நான் காவல்துறையிலிருந்து பேசுகிறேன். உங்களுடைய பார்சல் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அதில், போதை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்ததோம் எனக்கு ஒரு நாள் அந்த அழைப்பை நம்பி ஏமாறாதீர்கள். சைபர் கிரைம் குறித்த புகார்கள் தெரிவிக்க அழைக்கவும் ☎️1930.
செங்கல்பட்டு காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நான் காவல்துறையிலிருந்து பேசுகிறேன். உங்களுடைய பார்சல் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அதில், போதை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்ததோம் எனக்கு ஒரு நாள் அந்த அழைப்பை நம்பி ஏமாறாதீர்கள். சைபர் கிரைம் குறித்த புகார்கள் தெரிவிக்க அழைக்கவும் ☎️1930.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, காவல்துறை இன்று இரவு ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, மாமல்லபுரம், மற்றும் மதுராந்தகம் ஆகிய மூன்று வட்டங்களுக்குட்பட்ட ஒன்பது காவல் நிலையங்களில், துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) தலைமையில் காவல்துறையினர் ரோந்து செல்லவுள்ளனர். தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
தாம்பரம் மாநகராட்சியில் இன்று (செப்.24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, சித்தாமூர் அடுத்த சரவம்பாக்கம் கிராமத்தில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. இக்கடையில், அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மது பாட்டில் வாங்கியுள்ளார். இதனையடுத்து மது அருந்துவதற்காக அதை திறக்க முற்படும் போது, சீலிடப்பட்ட பாட்டிலின் உள் பகுதியில் புழு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால், அப்பகுதியில் உள்ளவர்கள் அச்சமடைந்த நிலையில் உள்ளது.
Sorry, no posts matched your criteria.