India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூரில் முதிர்ந்த நிலையில் உள்ள கழிவு செய்யப்பட்ட 11 காவல் வாகனங்கள், 8 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளுக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி பொது ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் கலந்து கொள்வோர் ஆகஸ்ட் 7ஆம் தேதி காலை 8:00 மணி முதல் 10:00 மணிக்குள் 1000 ரூபாய் முன் வைப்பு தொகையினை செலுத்தி தங்கள் பெயரினை பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு புதிய கட்டிடங்களை கட்ட உரிய நடவடிக்கைகளையும், போதிய நிதியையும் ஒதுக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுடெல்லியில் சட்டம் மற்றும் நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வாலை சிதம்பரம் தொகுதி எம்பியும், விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து மனு அளித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி, ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டம் இரண்டாம் கட்ட முகாம் இன்று ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம் குவாகம் ஊராட்சி, செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
அரியலூர் மாவட்டம் வாரணாசி கிராமத்தில் அரியலூர் – தஞ்சை நெடுஞ்சாலையில் வழக்கம்போல மீன் ஏற்றச் சென்ற லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து அரியலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள காட்டாத்தூர் மேலத்தெருவை சேர்ந்த அன்புமணி (25). இவர், 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து மகளிர் நல அலுவலர் சாந்தி ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் அன்புமணியை போலீசார் கைது செய்து சிறுமியை மீட்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் பாடப்பிரிவில் சான்று பெற்ற இளம் தொழில் முனைவோருக்கு, அக்ரி கிளினிக் (அ) வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு 50 சதவீதம் மானியத்தில் கடன் உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் உரிய ஆவணங்களுடன் ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், குண்டவெளி, உடையார்பாளையம், தா.பழூர் (ம) சுத்தமல்லி ஆகிய 6 தாலுகாவில் சோள பயிருக்கும் மற்றும் அரியலூர், கீழப்பழூர், செந்துறை, நாகமங்கலம் உள்ளிட்ட 7 தாலுக்காவை சேர்ந்த விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 16-ஆம் தேதிக்குள் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட காவல்துறை இன்று மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரக்கூடிய எந்த ஒரு செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், ஏடிஎம் கார்டு எண் உள்ளிட்டவற்றை பகிர வேண்டாம் எனவும், சந்தேக நபர்கள் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்க கூட்டத்தில் 5 பயனாளிகளுக்கு ரூ.4.05 லட்சம் பயிர் கடனுதவிகள் வழங்கப்பட்டது. இக்கூட்டம் ஆட்சியர் பொ.ரதினசாமி தலைமையில் நடைபெற்றது. மேலும் அவர் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 500 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மத்திய அரசின் முப்பெரும் சட்டத்தை கண்டித்து நேற்று விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் டெல்லியில் மாபெரும் போரட்டம் நடைப்பெற்றது. போராட்டத்தை முடித்துவிட்டு விசிக தலைவர் திருமாவளவனுடன், அரியலூர் வழக்கறிஞர் சங்க தலைவர் மனோகரன் தலைமையில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு. சின்னப்பா முன்னிலையில் 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.