India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் நாள் கூட்டம் ஜீலை.26 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் பிரதான கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னோடி விவசாயிகள், விவசாய பிரதிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான குறைகளை கோரிக்கை மனுவாக அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர், ஆண்டிமடத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவ, மாணவிகளின் நேரடி சேர்க்கைக்கு ஜூலை.31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 8 அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 9499055877, 04329 -228408 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 15 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
அரியலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ஆனி மேரி ஸ்வர்ணா சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து அரியலூர் மாவட்ட ஆட்சியராக சென்னை வணிகவரி அலுவலக இணை இயக்குனராக பணியாற்றிய, ரத்தினசாமி அரியலூர் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ரத்தினசாமி பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசு அலுவலர்கள் பலர் ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அரியலூர் துணைமின் நிலையத்தில் நாளை (ஜூலை.20) 110 கிலோ கூடுதல் GC Breaker அமைக்கும் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் தேளூர், உடையார்பாளையம், செந்துறை ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை.23, ஆகஸ்ட்.4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் அரியலூர் மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூா் மாவட்டத்தில் ஜூலை மாதத்திற்கான உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம், அரியலூா் வட்டத்தில் இன்று (ஜூலை.19) காலை 9 மணி முதல் முதல் நாளை காலை 9 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இம்முகாமை நிா்வாக காரணங்களுக்காக ஜூலை 24 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸவா்ணா தெரிவித்துள்ளாா்.
அரியலூர் மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டின் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடி சேர்க்கை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு தொழிற்பயிற்சியில் சேர விரும்புபவர் தங்களது கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வரவும். ஏற்கனவே பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் நேரடி சேர்க்கை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு 2024-ஜூலை மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 26-ஆம் தேதி காலை 10.30 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் தொழில் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Sorry, no posts matched your criteria.