India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் அரியலூரில் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்ய வாப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடை இடையே 30 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழத்தில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் அரியலூர் மாவட்டத்தில் இன்று இரவு 8:20 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து வெளியே செல்பவர்கள் எச்சரிக்கையோடு இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி ஆகஸ்ட் 4 காலை 6 மணி அளவில் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் துவங்கி அரியலூர் நகரின் முக்கிய பகுதி வழியாக நடை பயிற்சி முகாம் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் அஜிதா தலைமையில் நடைபெற்றது. நடைப்பயிற்சியில் ஏராளமான அரசு அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் தொடரும் ஆபத்தான பயணங்களை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிராம மக்கள் ஊர் திருவிழா, துக்க காரியம் மற்றும் திருமண நிகழ்வு ஆகிய நிகழ்ச்சிகளுக்கு சரக்கு வாகனத்தை பயன்படுத்தி வருகின்றனர். காவல்துறையை எச்சரித்தும் கவனத்தில் கொள்ளாமல் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இதுபோன்ற பயணங்களால் அதிகமான உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, அரியலூரில் உள்ள 2,47,252 அட்டை தாரர்கள் ஜூலை மாதத்துக்கான பொருட்களை இம்மாதம் பெற்றுக் கொள்ளலாம்.
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.
தமிழகத்தில் தற்போது பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து வெளியே செல்பவர்கள் எச்சரிக்கையோடு இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள 24 மணிநேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையத்தை கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.1077 மற்றும் 04329 228709 என்ற தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ்அப் மூலம் 9384056231 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள 24 மணிநேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையத்தை கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.1077 மற்றும் 04329 228709 என்ற தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ்அப் மூலம் 9384056231 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் அறிவிப்பு.
அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி காவிரி நீர் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே நாளை நடைபெறும் ஆடிபெருக்கு திருவிழாவின்போது கொள்ளிடம் ஆற்றிற்கு செல்லும் பொதுமக்கள் போலீசார் மற்றும் வருவாய் துறையினரால் அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பான இடங்களில் மட்டும் நீராட வேண்டும். உடன் அழைத்துச் செல்லும் குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.