Ariyalur

News September 13, 2024

உடையார்பாளையம் அருகே டிராக்டரில் மாட்டி சிறுவன் உயிரிழப்பு

image

உடையார்பாளையம் அருகே உள்ள வென்னம்கொண்டான் ஏரியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு வண்டல் மண் ஜேசிபி எந்திரம் மூலம் வெட்டி எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மண்ணை லாரியிலிருந்து கொட்டும் போது, லாரிக்கு அடியில் நின்று கொண்டிருந்த தரணி என்ற சிறுவன் தலையில் பலத்த அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 13, 2024

அரியலூரில் ரேஷன் கடை குறைதீர் கூட்டம்

image

அரியலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்மந்தமாக, பொது மக்கள் குறைதீர் முகாம் நாளை காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்

News September 12, 2024

அரியலூர்-போட்டித் தேர்வை கண்காணிக்க குழுக்கள்

image

அரியலூர் மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை டிஎன்பிஎஸ்சி யின் குரூப் 2,2ஏ முதல் நிலை தேர்வுகள் நடைபெறுகிறது. இத்தேர்வினை கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் 2 பறக்கும் படை, 08 இயங்கு குழுக்கள் 29 ஆய்வு அலுவலர்கள், 29 வீடியோகிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்வில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தேர்வு எழுத வசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News September 12, 2024

அரியலூரில் சனிக்கிழமை போட்டித் தேர்வுகள்

image

அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் வரும் 14ஆம் தேதி முற்பகல் காலை 9.30 மணிக்கு அரியலூர், உடையார் பாளையம் ஆகிய 2 வட்டங்களிலும் 29 தேர்வு கூடங்களில் 8800 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News September 12, 2024

ரூ.4,00,000 மதிப்பிலான நெகிழி பொருட்கள் பறிமுதல்

image

அரியலூர் ஆசை தம்பி தெருவிலுள்ள ஒரு வீட்டில் நெகிழி பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று இரவு வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அலுவலக பணியாளர்கள் சோதனை மேற்கொண்டனர். இதில் 4 லட்ச மதிப்பிலான அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், நெகிழி பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

News September 11, 2024

கள்ளிப்பாலை ருசி பார்த்த மாணவர்களுக்கு தொடரும் சிகிச்சை

image

குணமங்கலம் அரசு பள்ளியில் பயிலும் வினிஷ், பவன்சரண், விஷாந்து, பிரத்தீஸ், குமாரவேல் ஆகியோர் நேற்று கள்ளிசெடியின் பாலை எடுத்து நாக்கில் தடவி சுவைப்பார்த்து, அதை ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மாணவர்களை அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். இந்நிலையில் இன்று 2ஆவது நாளாக மாணவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News September 11, 2024

அரியலூரில் கிடுகிடுவென உயர்வு

image

அரியலூரில் இன்று கத்தரி ரூ.42க்கும், தக்காளி ரூ.30க்கும், வெண்டை ரூ.26க்கும், அவரை ரூ.90க்கும், கொத்தவரை ரூ 34க்கும், முள்ளங்கி ரூ.36க்கும், பாகல் ரூ.38க்கும், பீர்க்கன் ரூ.38க்கும், சேனை ரூ.90க்கும், மாங்காய் ரூ.70க்கும், சி.வெங்காயம்-ரூ.30க்கும், பெ.வெங்காயம்-ரூ.60க்கும், பீன்ஸ் ரூ.76க்கும், கேரட் ரூ.66க்கும், பீட்ரூட் ரூ.34க்கும், உருளை ரூ.50க்கும் விற்பனை ஆகிறது.

News September 11, 2024

சிறுவனின் பெற்றோருக்கு நிவாரண உதவி

image

உடையார் பாளையம் அடுத்த விழப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் ஆகாஷ் சமீபத்தில் ஏரியில் மூழ்கி உயிரிழந்தார். இதனையறிந்த, முதலமைச்சர் தனது பொது நிவாரண நிதியில் இருந்து நிதி வழங்குவதாக அறிவித்தார். இந்நிலையில் நேற்று, ஆகாஷின் பெற்றோர்களை சந்தித்த அரியலூர் ஆட்சியர், முதல்வரின் நிவாரணத் தொகை ரூ.1 லட்சத்துக்கான வங்கி காசோலையை அவர்களிடம் வழங்கினார். ஷேர் செய்யவும்

News September 10, 2024

அரியலூரில் சுய உதவி குழுக்களின் கண்காட்சி

image

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுய உதவி குழு பெண்கள் உற்பத்தி செய்த உணவு பொருட்கள், மதிப்பு கூட்டு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி இருந்தனர். இதனை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பார்வையிட்டு பாராட்டினார்.

News September 10, 2024

அரியலூரில் 30 கிலோ போதைப்பொருட்கள் அழிப்பு

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உத்தரவுப்படி, புகையிலை தடுப்பு ஒருங்கிணைப்பு குழுவினரால் வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு செய்யும் போது பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், உணவு பாதுகாப்புத்துறை சுகாதாரத்துறை, காவல்துறை, மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அரியலூர் மாவட்டம் முழுவதும் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு 30கிலோ போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன.

error: Content is protected !!