India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் நகராட்சிக்குட்பட்ட காந்தி மார்க்கெட் அருகேயுள்ள ஒரு மளிகை கடையில் நகராட்சி அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும், பிளாஸ்டிக் பைகளையும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் தர்மராஜா தலைமையிலான குழுவினர் நேற்று பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைக்கு 26 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சீல் வைக்கப்பட்டது. கருத்துக்களை கமென்ட் செய்யவும்.
அரியலூர் மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம், சட்டத்திட்ட திருத்தகுழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் தலைமையில் மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அரியலூர் மாவட்டத்திற்கு திமுக நிகழ்ச்சி மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திற்கு, 22ஆம் தேதி வருகை தரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கபட்டது. ஷேர் செய்யவும்
அரியலூர் ஆட்சியர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மழைக்காலங்களில் ஈரம் கசிந்த ஸ்விட்ச் போர்டுகளை தொடக்கூடாது, மின்கம்பம் மற்றும் ஸ்டே கம்பிகளில் வளர்ப்பு பிராணிகளை கட்டக்கூடாது, இடி, மின்னல் சமயங்களில் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்களை ஆஃப் செய்து வைக்க வேண்டும். மேலும் வீட்டில் மின்தடை ஏற்பட்டால் 9498794987 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார். ஷேர் செய்யவும்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரடைந்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்திற்கு இன்று மற்றும் நாளை கன முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மழைக்கால அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரடைந்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் அக்டோபர் 15ஆம் தேதி மற்றும் அக்டோபர் 16ஆம் தேதி கன முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மழைக்கால அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஐயாறப்பன். இவர் வெடிக்கடை மற்றும் தயாரிப்பு ஆலை அமைத்து உள்ளார். இந்நிலையில் இந்தாண்டு உரிமம் புதுப்பிக்காமல் வெடி தயாரிப்பதாக திருமானூர் போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் போலீசார் ஆய்வு செய்ததில், அனுமதியின்றி வெடி தயாரித்தது தெரியவந்தது. இதனையடுத்து குடோனில் பதுக்கி வைத்திருந்த வெடிகளை திருமானூர் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு வடகிழக்கு பருவமழை குறித்து அறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் TN-Alert என்ற செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலியின் மூலம் மழை பெய்யக்கூடிய இடங்கள் மற்றும் வெள்ள அபாயம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். எனவே பொதுமக்கள் தங்களின் செல்போனில் TN-Alert என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் அக்.15-ஆம் தேதி (செவ்வாய்) மற்றும் அக்.16-ஆம் தேதி (புதன்கிழமை) கன முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 40-55 கி.மீ வரை பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்த கல்யாண சுந்தரத்தின் மகன் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் குருவாலப்பர் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள காலி மனையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அப்பகுதி பொதுமக்களின் புகாரின் பேரில் மீன் சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை பெய்தது. அதனடிப்படையில் அரியலூரில் 9.5 மில்லி மீட்டர், திருமானூர் பகுதியில் 9.4 மில்லி மீட்டர், சித்தமல்லி பகுதியில் 5 மில்லி மீட்டர், குருவாடி பகுதியில் 6 மில்லி மீட்டர் என மொத்தம் அரியலூர் மாவட்டத்தில் 29. 9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என ஆட்சியரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.