India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (டிச.21) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் ஜெயங்கொண்டம், தா.பழூா், தழுதாழைமேடு, உடையார்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் சிலம்பரசன் தெரிவித்துள்ளாா். ஷேர் செய்யவும்!
அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தேவையற்ற எந்த ஒரு செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது. ஆதார் கார்டை வங்கி கணக்குடன் அப்டேட் செய்வதற்கு APK செயலியை பதிவிறக்கம் செய்யும்படி பெறுநர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் SBI இலிருந்து வந்ததாகக் கூறப்படும் செய்தி ஒரு மோசடி ஆகும் வங்கியை நேரில் அணுகி KYCஅப்டேட் செய்து கொள்ளவும் என அறிவுறுத்தப்படுகிறது.
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு டிசம்பர்- 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27.12.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில், மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
ஜெயகொண்டம் அடுத்த விழப்பள்ளத்தை சேர்ந்த குழந்தை தெரஸ்(37) என்பவர் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். மேலும் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். மேலும் நேற்று ஜெயகொண்டம் போலீசார் தணிக்கையில் ஈடுபட்டபோது, முகமது பைசத் & முகமதுஷாஜகான் என்பவர்களை விசாரித்தனர். அப்போது அவர்கள் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்து, அவர்களை கைது செய்தனர்.
செந்துறை வேளாண் விரிவாக மையத்தின் செயல்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி இன்று ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட அளவில் மக்காச்சோளத்தில் உயர் விளைச்சல் பெற்ற செந்துறை பகுதியைச் சேர்ந்த விவசாயிகளை பாராட்டி பரிசுத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார். மேலும் பல்வேறு விவசாயிகளுக்கு நெல், சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு இடு பொருட்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் வேளாண் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
செந்துறையில் உள்ள தீயணைப்பு துறை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி ஆய்வு செய்தார். அப்போது இருக்கக்கூடிய தீயணைப்பு வாகனங்களின் எண்ணிக்கை, தீத்தடுப்பான் கருவிகள், இடர்பாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான உபகரணங்கள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார். ஆட்சியர் இதுவரை இவ்வருடத்தில் மேற்கொண்ட பணிகளின் விவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் 20ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்ப பணியாளர்களை தேர்வு செய்வர். https://www.tnprivatejobs.tn.gov.in என்ற பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம். முகாமில் 30 வயதிற்கு மேற்பட்ட 10ஆம் வகுப்பு முதல் பட்டதாரி ஆண்கள் & பெண்கள் கலந்துகொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிசம்பர் 20 ஆம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே இம்முகாமில் கலந்து கொள்ள 18 வயது முதல் 35 வயது வரையிலான 10 ஆம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
கைவினைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை பெருக்கி, கைவினைஞர்களை தொழில் முனைவோர்களாக்கும் வகையில் கலைஞர் கைவினைத் திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.50,000 வரை மானியத்துடன் ரூ.3 லட்சம் வங்கிக் கடனுதவி வழங்கப்படும் வழங்கப்படும். பயன்பெற விரும்பும் கைவினை கலைஞர்கள் <
ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 20.12.2024 அன்று மாலை 4.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
Sorry, no posts matched your criteria.