Ariyalur

News January 2, 2025

அரியலூர்: நல வாரிய உறுப்பினர் சேர்க்கை அறிவிப்பு

image

சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் அரியலூர், உடையார் பாளையம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜனவரி 7ஆம் தேதி காலை 11:00 மணி முதல் மதியம் 2 மணி வரை சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. இதில் நல வாரியத்தில் உறுப்பினராக சேராத சிறுபான்மையினர் உரிய ஆவணங்களுடன் உறுப்பினராக சேர விண்ணப்பங்களை வழங்கலாம் என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News January 2, 2025

அரியலூரில் 34 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

image

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2024ஆம் ஆண்டில் கொலை, கொள்ளை, மது விற்பனை, மோசடி, பாலியல் குற்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மொத்தம் 34 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 2023ஆம் ஆண்டில் இதேபோல் மொத்தம் 28 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

News January 2, 2025

ரெட்டிப்பாளையம்: புத்தாண்டு கொண்டாடிய வாலிபர் பலி

image

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியைச் சேர்ந்த மாதேஷ் (26) அவரது நண்பர்களுடன் சேர்ந்து டிச.31 இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் ரெட்டிப்பாளையம் பகுதியில் சென்ற போது வேகத்தடையில் நிலைதடுமாறி எதிரே வந்த லாரி மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News December 31, 2024

அரியலூர்: முக்கிய இடங்களில் பாதுகாப்பு தீவிரம்

image

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டுத்தலங்கள், மசூதிகள், கிருஸ்தவ தேவாலயங்கள், முக்கிய வரலாற்று இடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணியினை தீவிரமாக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண மண்டபத்தில் சோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 31, 2024

அரியலூரில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது குற்றம்

image

அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வாகனம் ஓட்டுவது குறித்து பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொது மக்களுக்கு இடையூறு மற்றும் விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டுவது, பொது சாலையில் சாகசம் செய்வது, போக்குவரத்து விதி மீறல் சட்டப்படி குற்றமாகும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 31, 2024

அரியலூர் மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை குறித்து மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலையின் நடுவில் கேக்குகளை வெட்டுவது பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் நடந்து கொள்வதோ கூடாது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News December 31, 2024

அரியலூர்- தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வரும் 03ம் தேதி சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது இதில் 50க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள்
9499055914 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்

News December 30, 2024

அரியலூர்- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை முகப்புத்தோற்றமாக வைத்து, மாவட்ட ஆட்சியர் பெயருடன் +917726095149 என்ற எண்ணிலிருந்து வாட்ஸ்அப் கால், மெசேஜ் மூலமாக அரசு உயர் அலுவலர்களிடம் தொடர்பு கொள்வதாக கூறப்படுகிறது. இவ்வாறான பொய்யான அழைப்புகள் வந்தால் உடனே மாவட்ட நிர்வாகத்திற்கோ அல்லது காவல் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News December 30, 2024

அரியலூர்-போலீசார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

image

அரியலூர் அண்ணா சிலை அருகில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதை தமிழ்நாடு அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன், முன்னாள் எம்பி இளவரசன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள், தொண்டர்கள் என 432 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.

News December 30, 2024

அரியலூர்: Way2News-ல் நிருபராக சேர விருப்பமா?

image

தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான Way2News செயலியில் அரியலூர் மாவட்டதின் உள்ளூர் செய்தியாளராக பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட லிங்கில் <><இங்கே க்ளிக் செய்யவும்><<>> பதிவு செய்யவும். இதன் மூலம் உங்கள் ஊர் செய்திகளை பதிவிடுவது மட்டுமில்லாமல் கூடுதல் வருவாய் ஈட்டவும், இது ஒரு அறிய வாய்ப்பாக அமையும். மேலும் விவரங்களுக்கு +91 91603 22122 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

error: Content is protected !!