India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுதப்படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3ஆம் தேதிக்குள் <
திருச்சி சுங்கத்துறையின் சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.265 கோடியே 44 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள், அரியலூர் பகுதியில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் தீயில் இட்டு அழிக்கப்பட்டது. இதில் 16 கிலோ கஞ்சா, 4 கிலோ போதை எண்ணெய், 23 கிலோ போதைப்பொருள், 39 கிலோ மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள், ரூ.7 லட்சம் மதிப்பிலான 1,40,500 வெளிநாட்டு சிகரெட்டுகள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் உள்ள கருவவாலப்பர் கோவில் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அகீய ஊருகளுக்கு இடையில் உள்ளதுதான் பொன்னேரி என்று அழைக்கப்படும் சோழகங்கம் ஏரி. கங்கை கொண்ட சோழபுரம் கோவில் கட்டிய ராஜேந்திரன் சோழனால் அமைக்கப்பட்டதுதான் இந்த ழோழகங்கம் ஏரி. கலிங்கம் வென்ற ராஜந்திரான் கங்கையிலிருந்து கொண்டுவந்த நீரை தான் வெட்டிய ஏரியில் கலந்ததால் இந்த ஏரிக்கு சோழகங்கம் என பெயர் அமைந்தது.இதை SHARE பண்ணுங்கள்.
உங்களுக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, வருமானம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வெறும் 60 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் புகார் அளிக்கலாம். இந்த தகவலை இப்போதே ஷேர் பண்ணுங்க!
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க நீட்டிக்கப்பட்ட தேதி நாளையுடன் (ஏப்.25) முடிவடைகிறது. எனவே அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் <
அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
கீழப்பழுவூர் அருகேயுள்ள திருப்பெயர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரேம்குமார்(35), மனைவி சூர்யா(31), மகன் ரட்சகன்(11) உடன் வசித்து வந்த நிலையில், சூர்யா தனது மகனுடன் மாடு மேய்க்க அருகே உள்ள வயலுக்கு சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் உள்ள தரை கிணற்றில் எதிர்பாராதவிதமாக சூர்யா தவறி விழுந்துள்ளார். இதைக்கண்ட, சிறுவன் ரட்சகன், தனது தாயை காப்பாற்ற கிணற்றில் குதித்ததில் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார்.
தமிழ்நாட்டில் 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 24) கடைசி தேர்வு முடிந்ததும், நாளை மறுநாள் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளது. இதைத்தொடர்ந்து அரசு பள்ளி, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் கோடை விடுமுறைகள் முடிந்து வரும் ஜூன் 2ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தின் கிராம ஊராட்சியின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தொடர்பு எண்கள் ▶திருமானூர் கிராம ஊராட்சி: 7402607750, ▶அரியலூர் கிராம ஊராட்சி: 7402607747, ▶செந்துறை கிராம ஊராட்சி: 7402607754, ▶தா.பழூர் கிராம ஊராட்சி: 7402607765, ▶ஜெயங்கொண்டம் கிராம ஊராட்சி: 7402607758, ▶ஆண்டிமடம் கிராம ஊராட்சி: 7402607762. இதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க…
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், TNSURB SI தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் இன்று (ஏப். 23) முதல் தொடங்குகிறது. அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்கள் வழிகாட்ட, மாதிரி தேர்வுகளும், பாடக்குறிப்புகளும் வழங்கப்படும். TNPSC, TNSURB, TRB தேர்வுகளுக்கான பயிற்சிகளும் தொடர்ந்து நடக்கின்றன. சேர விருப்பம் உள்ளோர் 9499055914 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். SHARE IT
Sorry, no posts matched your criteria.