Ariyalur

News March 25, 2025

அரியலூர் ஊராட்சிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்

image

அரியலூர் ஆட்சியர் கூட்டரங்கில் காசநோய் ஒழிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காசநோய் இல்லாத ஊராட்சி என கண்டறியப்பட்டுள்ள 18 கிராம ஊராட்சிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும், மாவட்டத்தில் காசநோய் ஒழிப்பு பணியில் சிறப்பாக சேவைபுரிந்த 38 தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேனிங் மையங்களைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.

News March 25, 2025

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் கோரிக்கை

image

ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய வளாகத்தில் மாவட்ட நேரடி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்,108 ஆம்புலன்ஸில் 6 ஆயிரத்திற்கும் மேல் தொழிலாளிகள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தை தமிழ்நாடு அரசு ஏற்று நடத்த வேண்டும். மேலும் இந்த ஆண்டு ஊதிய உயர்வை 30 சதவீதம் வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News March 25, 2025

திருமானூர் அருகே பைக் மோதி வாலிபர் பலி

image

திருமானூர் அடுத்த அன்னிமங்கலம் அசோக் நகரைச் சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டரான கோபிநாத், நேற்று காலை தனது நண்பருடன் பைக்கில் புள்ளம்பாடி- திருமானூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பாக்கியநாதபுரம் கல்லறை தோட்டம் அருகே, சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த கோபிநாத், சம்பவ இடத்திலேயே உயிர்ழந்தார். இதுகுறித்து வெங்கனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 25, 2025

அரியலூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து ரூ.80,000 திருட்டு

image

திருமானூர் வட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சி தட்டான்சாவடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உண்டியலை மர்ம ஆசாமிகள் உடைத்து அதிலிருந்து சுமார் 80,000 ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வெங்கனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

News March 25, 2025

அரியலூா் ஆட்சியரகத்தில் வேலை: ரூ.25,000 சம்பளம்

image

அரியலூா் ஆட்சியரகத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், அரியலூா் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில், மேலாண்மை தகவல் நடவடிக்கைகளை செயல்படுத்திட வெளி ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ. 25,000 ஊதியத்தில் மேலாண்மை தகவலமைப்பு பகுப்பாய்வாளா் பணிக்கு தகுதிகள் பெற்றுள்ள நபா்கள் விண்ணப்பிக்கலாம். 30 வயதுக்குள்பட்ட நபா்கள் மாா்ச் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW

News March 24, 2025

அரியலூர்: லாரி மோதி ஒருவர் பலி

image

அரியலூர் அருகே கிராமத்தில் தொழிலாளிகள் இன்று வேலைக்குச் சென்றபோது, திடீரென லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில், மூவர் காயமடைந்து, ஒருவர் உயிரிழந்தார் . அங்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அருகிலுள்ள மக்கள் அங்கு கூடி சாலை பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

News March 24, 2025

அரியலூர்: 220 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு

image

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூரில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மாவட்ட அலுவலர் அன்பரசி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆகியோர் 220 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தினர்.

News March 24, 2025

மாநிலத்தின் பெரிய ஏரியைகொண்ட அரியலூர்

image

கரைவெட்டி பறவைகள் சரணாலயம் அடிப்படையில் ஒரு பாசன ஏரியாகும். மேலும் இச்சரணாலயம், புலம்பெயரும் நீர்ப்பறவைகளுக்கான, தமிழ்நாட்டிலுள்ள மிக முக்கியமான நன்னீர் ஏரிகளுள் ஒன்றாகவும், மாநிலத்தின் பெரிய ஏரிகளுள் ஒன்றாகவும், மாநிலத்தின் மிக அதிக அளவிலான நீர்ப்பறவைகள் வந்து கூடும் இடமாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 24, 2025

சோழர் காலத்தை பறைசாற்றும் அரியலூர்!

image

சோழர் ஆட்சியில் பழுவேட்டரையர்கள் அரியலூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர். மேலும் அரியலூர், 450க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சோழர் காலத்தை பறைசாற்றும் விதமாக உள்ளன. அரியலூர் மாவட்டம் ஒரு தொல்லுயிர் விலங்கியல் பூங்காவாகத் திகழ்வதுடன் புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது. உங்களுக்கு தெரிந்த சிறப்புகளை கமெண்ட் செய்ங்க, உங்க ஊர் பெருமையை SHARE பண்ணுங்க…

News March 24, 2025

மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி பலி

image

அரியலூர் மாவட்டம் திருமானூரைச் சேர்ந்த கூலி தொழிலாளி சிலம்பரசன்(30) என்பவர் நேற்று காலை இயற்கை உபாதை கழிக்க கரும்பு வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை சிலம்பரசன் பார்க்காமல் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமானூர் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!