India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற வரும் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பொங்கல் தொகுப்பு வழங்குவது சம்பந்தமாக புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்கள். எண்கள். மற்றும் 1800-425-5901 ஆகிய எண்களிலும், மாவட்ட அளவிலான புகார்களை 9445796402 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில் வினாடி வினா போட்டி அரியலூர், மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் 10.01.2025 அன்று காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவியர்கள் 9499055914 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் எஸ்பி-யாக பணியாற்றிய தீபக் சிவாச் அரியலூர் எஸ்பி-யாக நேற்று (ஜன.06) பொறுபேற்றார். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் எஸ்சி, எஸ்டி வழக்குகள் அதிகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் மற்றும் குடிபோதையில் வாகன இயக்கம் மற்றும் போதை பொருள் கடத்தல், கடத்தல் பொருள் விற்பனை தடுக்கப்படும் என்று கூறினார்.
அரியலூர் அரசு கலைக் கல்லூரியில், மாவட்ட மைய நூலகம் சார்பில் இளைஞர் இலக்கிய திருவிழா நேற்று தொடங்கியது. மாவட்ட மைய நூலக அலுவலர் வேல்முருகன் கலந்து கொண்டு, நமது அன்றாட பழக்கமாக வாசிப்பு இருக்க வேண்டும் என கூறினார். முதல் நாளான நேற்று (ஜன.6) பேச்சு, ஓவியம், விநாடி வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் 80 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.
அரியலூர் நகரை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில், தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநர் என்றும், அவரை காப்பாற்றும் அதிமுக- பாஜக கள்ள கூட்டணி என்றும், கெட் அவுட் ரவி என்று அரியலூர் மாவட்ட திமுக கட்சியினரால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அரியலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரியலூர், உடையார்பாளையம் அருகே உள்ள த.சோழங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சீமான் (50) நேற்று (ஜன.06) காலை புத்தேரி ஓடை அருகே சீமான் உடலில் லேசான காயங்களுடன் இறந்து கிடந்தார். இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில், தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது மனைவி புகார் அளித்தன்பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெறும். அதன்படி இன்று (ஜன.06) மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுதிறனாளி உதவிதொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 241 மனுக்கள் பெறப்பட்டன.
அரியலூர் ஒன்றியத்தில் மணக்குடி கள்ளங்குறிச்சி தாமரைக் குளம் ஓட்டக்கோவில் உள்ளிட்ட 36 பஞ்சாயத்துக்கள் உள்ளன. இந்நிலையில் உள்ளாட்சிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை ஒட்டி 36 பஞ்சாயத்துகளை நிர்வகிக்க அரியலூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ள நாராயணன் நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள் தங்களது அடிப்படை தேவைகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலரை அணுகலாம்.
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (ஜன.06) தொடங்கியது இதில் கலந்து கொள்ள விரும்பும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் madurai.nic.in என்ற இணையதளம் மூலம் ஜன.7 மாலை 5 மணிக்குள்ளாக பதிவுசெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக பிளஸ்2 அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் சர்வதேச விமான நிலையங்களில் பணிபுரிய, சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பயிற்சி வழங்கப்படவுள்ளது, இதற்கு தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனை ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.