India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <
அரியலூர் மாவட்டத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் ஊராட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் அரசியல் கட்சிகள் சங்கங்கள் பிற அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை 2 வார காலத்திற்குள் தாமாக அகற்றிக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் அரசு அலுவலர்களால் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு அதற்கான செலவு தொகை சம்பந்தப்பட்ட கட்சியிடமே வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க பல கோவில்கள் அமைந்துள்ளன. அந்த வரிசையில் காட்டாயம் செல்ல வேண்டிய 6 கோவில்கள் குறித்து தற்போது தெரிந்து கொள்ளலாம். 1.கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், 2.திருமழபாடி வைத்தியநாதர் கோயில், 3.மேலப்பழுவூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், 4.அரியலூர் வராகமூர்த்தீஸ்வரர் கோயில், 5.அகரம் ஏகாம்பரேஸ்சுவரர் கோயில், 6.கொண்டண்டராமசுவாமி கோவில். இதை ஷேர் பண்ண மறந்துடாதீங்க!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டல பணியிடங்களுக்கான ஆண், பெண் இருபாலர் ஓட்டுநர் உடன் நடத்துனர் பணிக்காலியிடம் அரியலூர் மண்டலத்திற்கு நிரப்புதல் தொடர்பாக அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் ஏப்-14 ஆம் தேதிக்குள் அலுவலக வேலைநாட்களில் உரிய ஆவணங்களுடன் நேரில்சென்று பதிவினை சரிபார்க்க ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனை அனைவருக்கும் SHARE செய்ங்க..
தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் 98 – 102.2 டிகிரி வரை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு மார்ச் 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமையான இன்று (மார்ச் 28) காலை 10 மணியளவில், மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதனை SHARE பண்ணுங்க…
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <
அரியலூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் MIS நடவடிக்கைகளை சிறந்த முறையில் செயல்படுத்திட ஒப்பந்த அடிப்படையில் ஒரு MIS Analyst பணியிடத்திற்கு மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் 2வது தளத்தில் செயல்படும் மாவட்ட முகமை அலுவலகத்தில் 28.03.2025-க்குள் நேடியாக விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு <
அரியலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 32 திருக்கோயில்களில் இரவு நேரங்களில் பாதுகாவலராக பணிபுரிய 62 வயதுக்கு உட்பட்ட முன்னாள் ராணுவத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உரிய ஆவணங்களுடன் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…
காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் வாரிசுகள் உயர்கல்வி பயில தமிழ்நாடு அரசின் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் வாரிசுகள் 10 பேருக்கு உயர்க் கல்வி பயில்வதற்கு, தமிழக அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகையினை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் ஸ்வாச் வழங்கி கல்வியில் சிறந்து விளங்க பாராட்டினார்.
Sorry, no posts matched your criteria.