Ariyalur

News April 19, 2024

வாக்கினை பதிவு செய்த மாவட்ட ஆட்சியர்

image

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரியலூர் மாவட்ட ஆட்சியரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனி மேரி ஸ்வர்னா தனது வாக்கினை அரியலூர் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

News April 18, 2024

அரியலூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதி

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடிகளில் சாய்தளம், சக்கர நாற்காலி போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை மாற்றத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் பயன்படுத்திக்கொண்டு அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரும் சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனி மேரி ஸ்வர்னா தெரிவித்துள்ளார்.

News April 18, 2024

அரியலூர்: புகைப்படம் எடுத்துகொண்ட அலுவலர்கள்

image

அரியலூர் அருகே ராஜீவ்நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தினை தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு பார்வையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வாக்காளர்களை 100 சதவீதம் வாக்களிக்கவும் அறிவுறுத்தினர். மேலும் தேர்தல் திருவிழா, தேசத்தின் பெருவிழா செல்பி கார்னரில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

News April 18, 2024

வாக்களிக்க பெயரை உறுதி செய்ய வேண்டும்

image

வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது. எனவே, உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு இந்த இணையதள https://electoralsearch.eci.gov.in லிங்கை க்ளிக் செய்து சரிபார்த்து கொள்ளலாம். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் அனைவரும் தவறாமல் ஜனநாயகக் கடமையை செய்ய வேண்டும்.

News April 18, 2024

பிரச்சாரத்தை நிறைவு செய்த வேட்பாளர்கள்

image

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் வேட்பாளர் ஜான்சிராணி உள்ளிட்ட 14 பேர் களம் காணுகின்றனர். தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், இறுதி கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்ட வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.

News April 17, 2024

வாக்காளர் உறுதிமொழி ஏற்பு

image

ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள மக்களவை பொதுத்தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பது குறித்த வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று(17.04.2024) அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் ஆனந்தவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News April 17, 2024

செந்துறை: காவல்துறையினர் கொடி அணிவகுப்பு ஒத்திகை

image

மக்களவைத் தேர்தலை ஒட்டி, அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக செந்துறை ஒன்றியம் சிறுகளத்தூர் முதல் பொன்பரப்பி வரையில் இன்று(ஏப்.17) காவல்துறை கொடி அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News April 17, 2024

பார்வை மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பது குறித்து பயிற்சி

image

அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பிரெய்லி முறையில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து, பிரெய்லி முறைகளில் பயிற்சி பெற்ற நபர்கள் மூலமாக பார்வையற்ற வாக்காளர்களுக்கு இன்று(17.4.2024) பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News April 17, 2024

பானை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

image

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை ஆதரித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அரியலூர் மாவட்டம் தா. பழூர் மேற்கு ஒன்றியம் அம்பாப்பூர், விக்கிரமங்கலம், கீழநத்தம், கடம்பூர், குணமங்கலம், சாத்தம்பாடி, முட்டுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

News April 17, 2024

வரதராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றம்

image

அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் ஏழைகளின் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. இக்கோவில் ஆண்டு திருவிழா ராம நவமி அன்று தொடங்கி 11 நாட்கள் நடைபெறும். சுயம்பு கலியபெருமாள் சுவாமிக்கு இன்று பூஜைகள் நடைபெற்ற பின்னர் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஊர்வலமாக கொடிமரத்திற்கு எழுந்தருளினார். இதனை தொடர்ந்து கருட கொடி ஏற்றப்பட்டது.

error: Content is protected !!