Ariyalur

News April 25, 2024

அரியலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

அரியலூர் மாவட்டத்தில் இன்று வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசகூடும் என்பதால் அரியலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அரியலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிறபகல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2024

அரியலூர்: ஆட்சியர் வேண்டுகோள்

image

அரியலூர் மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும், நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்த்திட வேண்டும் கோடைகால நோய்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

அரியலூர்: மக்கள் போராட்டம்

image

அரியலூர் மாவட்டம் நாகமங்கலம் ஊராட்சியில் அண்ணா நகர் பகுதியில் குடிநீர் கேட்டு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நாகமங்கலம் ஊராட்சி அலுவலகம் முன்பு நடத்தினார். பின்பு அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினை உடனடியாக தீர்க்க உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

News April 25, 2024

வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம்

image

அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி  கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டு பெருந்திருவிழா கடந்த 17ஆம் தேதி ஸ்ரீராமநவமி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏழாம் நாள் திருவிழாவான இன்று திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 

News April 24, 2024

அரியலூர்: கலெக்டர் அதிரடி அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் காய்ச்சல், இருமல் அம்மை நோய்கள், மஞ்சள் காமாலை போன்ற சுகாதார சீர்கேடு குறித்த தகவல்களை தாங்களாகவே முன்வந்து https://ihip.mohfw.gov.in/cbs/-!. இணையதளத்தில் தெரிவிக்கலாம். இதன் மூலம் சுகாதாரத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 

News April 24, 2024

அரியலூர்: மகா கும்பாபிஷேகம்

image

அரியலூர் மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தில் பழமை வாய்ந்த மகா மாரியம்மன் ,முருகன் ,விநாயகர் ,கருப்புசாமி உள்ளிட்ட 11 ஆலயங்கள் புனரமைக்கப்பட்டன. சிவாச்சாரியார்களால் எடுத்து வரப்பட்டு அனைத்து ஆலயங்களில் உள்ள கலசங்களில் புனிநீர் ஊற்றப்பட்டது.!

News April 24, 2024

சிவலிங்கத்தின் மீது விழுந்த சூரிய ஒளி

image

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில் ஒவ் வொரு ஆண்டும் ஆகஸ்ட் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 20-ந்தேதியில் இருந்து 25-ந்தேதி வரை சிவலிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நடைபெறும்.அதன்படி இன்று காலை 6.10 மணியில் இருந்து 6.20 மணி வரைக்கும் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நிகழ்ந்தது!

News April 22, 2024

லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம்

image

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் இருந்து அரியலூர் கலெக்டர் அலுவலகம் வரை 12 வேகத்தடைகள் உள்ளது. இந்த வேகத்தடைகள் பெயரளவிற்கு மட்டுமே போடப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் லாரிகளால் அடிக்கடி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ,வேகத்தடைகளை ஆய்வு செய்து முறையான வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News April 22, 2024

அரியலூரில் மது விற்றவர் கைது

image

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் முத்துவாஞ்சேரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி முத்துவாஞ்சேரியை சேர்ந்த சுப்பிரமணியன் (50) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர்.அப்பொழுது வீட்டில் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News April 21, 2024

அரியலூர் அருகே விபத்து: பலி

image

அரியலூர் அருகே செட்டி திருக்கோணம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி; தனது  மனைவி செல்வம்பாளுடன் பைக்கில் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.  கடுங்காலி கொட்டாய் அருகே சென்றபோது, பின்னால் நெய்வேலியை சேர்ந்த இசக்கிமுத்து ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியதில் படுகாயம் அடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.  

error: Content is protected !!