Ariyalur

News March 31, 2024

தேர்தல் பருவம், தேசத்தின் பெருமிதம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வாக்காளர்களிடையே 100 % வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “தேர்தல் பருவம், தேசத்தின் பெருமிதம்” என்ற கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா கையெழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

News March 31, 2024

அரியலூரில் தேர்வில் மாற்றம்

image

6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு தேதியில் மாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல்.10 அன்று நடைபெற இருந்த அறிவியல் தேர்வு 22.4.2024 அன்றும், 12.4.2024 அன்று நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு 23.4.2024 அன்றும் நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. இதனால் கோடை விடுமுறை தள்ளிப்போவதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

News March 30, 2024

அரியலூர்: விசிக-வுக்கு பானை சின்னம் ஒதுக்கீடு

image

சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் விசிக கட்சிக்கு பானைச் சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார். சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் விசிக சார்பில் போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணியில் விசிக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

News March 30, 2024

அரியலூர் அருகே சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

image

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தெற்கு புதுக்குடி கிராமம் கீழத் தெருவை சேர்ந்தவர் திருமுருகன் மகன் மணிகண்டன். கார் ஓட்டுனரான இவர் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் மணிகண்டனை நேற்று(மார்ச். 29) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News March 30, 2024

பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

image

இலுப்பையூர் சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னம்மாள். டேங்க் ஆப்ரேட்டரான இவர் நேற்று காலை அங்குள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியின் மின் மோட்டாரை இயக்க சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர் பொன்னம்மாள் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் தப்பினார். இது குறித்து புகாரின் பேரில் செந்துறை காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 29, 2024

அரியலூர்: அமைச்சர் வாகனத்தை வழிமறித்த அதிகாரி

image

அரியலூரில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற அமைச்சர் சிவசங்கரின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அஸ்தினாபுரம் அருகே பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். பின்னர்
காரில் பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் அவர் பயணத்தை தொடர அனுமதித்தனர். 

News March 29, 2024

ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை

image

தமிழகத்தில் 39 தொகுதிகளில் வருகின்ற ஏப்ரல்.19 அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் அனைவரும் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. ஏப்ரல் 19 அன்று அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

News March 28, 2024

அரியலூர்: தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல்

image

அரியலூர் நகர அண்ணா சிலை அருகே காவல்துறை உணவகத்தின் முன்பாக இன்று கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயன்படும் வகையில் வெயிலின் தாக்கத்தை தணிக்கும் பொருட்டு அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ்  திறந்து வைத்து, பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.

News March 28, 2024

22 பேர் வேட்பு மனு தாக்கல்

image

அரியலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வந்த நிலையில் இன்று வரை 22 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசிக  திருமாவளவன், பாஜக கார்த்தியாயினி, அதிமுக சந்திரகாசன், நாதக ஜான்சிராணி உள்ளிட்டோர் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 28, 2024

16 வயது சிறுமிக்கு மிரட்டல் போக்சோ சட்டத்தில் கைது

image

அரியலூர் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். காதலிக்க மறுத்தால் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை தவறாக பதிவிடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து அச்சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். இதனையடுத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!