Ariyalur

News April 9, 2024

அரியலூரில் காவல்துறை அணிவகுப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும்,, பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அரியலூர் நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு ஒத்திகையினை ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

News April 8, 2024

அரியலூர்: ஆட்சியர் அதிரடி ஆய்வு

image

தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிதம்பரம் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா இன்று ஆய்வு செய்தார். உடன் அலுவலர்கள், போலீசார் இருந்தனர்.

News April 8, 2024

அரியலூர்: அம்மனுக்கு மிளகாய் சண்டி யாகம்

image

அரியலூர் அடுத்த பொய்யாத நல்லூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டியாகம் இன்று நடைபெற்றது.
பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று நடைபெற்ற மகா சண்டியாகத்தில் பக்தர்கள் புடவை, பழங்கள், மிளகாய் உள்ளிட்டவைகளை யாகத்தில் போட்டு தங்களது நேர்த்திகடனை செலுத்தினர்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடத்தப்பட்டது.

News April 8, 2024

அரியலூர்: அடுத்த 3 மணி நேரத்திற்கு

image

அரியலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில், அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 8, 2024

அரியலூர்: நேருக்கு நேர் மோதி விபத்து

image

செந்துறை அண்ணா நகர் பகுதி பேருந்து நிலையம் அருகில் நேற்று இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபதுக்குள்ளானது. இதில் சேடக்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து செந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 7, 2024

அரியலூர்: தொண்டர்களுக்கு அழைப்பு

image

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவனை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  இன்று அரியலூர் அண்ணா சிலை அருகே பிரச்சாரம் மேற்கொள்கிறார்.  அது சமயம் மதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

News April 7, 2024

திருமணம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

image

அரியலூர் சிலால் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் 17 வயது சிறுமியை 2 ஆண்டுகளுக்கு முன் தனது தாயின் உதவியுடன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் மேற்கொண்ட விசாரணையில் சிறுமிக்கு திருமணம் நடந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்து பாலமுருகனை போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

News April 7, 2024

உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரிந்து கொண்டு வாக்களிக்கவும்

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <>https://affidavit.eci.gov.in/ <<>>என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

News April 7, 2024

வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த ஆட்சியர்

image

அரியலூர் ஒன்றியத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களை சிதம்பரம் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்னா அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் பயன்படுத்தக்கூடிய சாய்வு தளங்கள் சரியாக இல்லாத இடங்களில் அவற்றை விரைவாக சரிசெய்திட வேண்டும், குடிநீர் மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

News April 6, 2024

பதற்றமான சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 192 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 7 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!