Ariyalur

News April 17, 2024

வாக்காளர் உறுதிமொழி ஏற்பு

image

ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள மக்களவை பொதுத்தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பது குறித்த வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று(17.04.2024) அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் ஆனந்தவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News April 17, 2024

செந்துறை: காவல்துறையினர் கொடி அணிவகுப்பு ஒத்திகை

image

மக்களவைத் தேர்தலை ஒட்டி, அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக செந்துறை ஒன்றியம் சிறுகளத்தூர் முதல் பொன்பரப்பி வரையில் இன்று(ஏப்.17) காவல்துறை கொடி அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News April 17, 2024

பார்வை மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பது குறித்து பயிற்சி

image

அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பிரெய்லி முறையில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து, பிரெய்லி முறைகளில் பயிற்சி பெற்ற நபர்கள் மூலமாக பார்வையற்ற வாக்காளர்களுக்கு இன்று(17.4.2024) பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News April 17, 2024

பானை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

image

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை ஆதரித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அரியலூர் மாவட்டம் தா. பழூர் மேற்கு ஒன்றியம் அம்பாப்பூர், விக்கிரமங்கலம், கீழநத்தம், கடம்பூர், குணமங்கலம், சாத்தம்பாடி, முட்டுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

News April 17, 2024

வரதராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றம்

image

அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் ஏழைகளின் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. இக்கோவில் ஆண்டு திருவிழா ராம நவமி அன்று தொடங்கி 11 நாட்கள் நடைபெறும். சுயம்பு கலியபெருமாள் சுவாமிக்கு இன்று பூஜைகள் நடைபெற்ற பின்னர் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஊர்வலமாக கொடிமரத்திற்கு எழுந்தருளினார். இதனை தொடர்ந்து கருட கொடி ஏற்றப்பட்டது.

News April 17, 2024

அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

அரியலூா் அடுத்த கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் கோயிலில் வருகின்ற ஏப். 25-ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. தேரோட்டத்தையொட்டி ஏப்.25 ஆம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவகங்களுக்கும் உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுசெய்யும் வகையில் மே 4-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று முழுவேலை நாளாக செயல்படும் மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்

News April 16, 2024

காயமடைந்த மானை காப்பாற்றிய மக்கள்

image

திருமானூர் அருகே கரைவெட்டி கிராமத்தில் மான் ஒன்று அடிபட்டு சாலையில் வந்த மானை ஊர் பொதுமக்கள் காப்பாற்றினர். இது குறித்து வெங்கனூர் போலிசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் மானை மீட்டு திருமானூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து உடன் மானை அருகில் உள்ள வனத்தில் வனத்துறையினர் விட்டனர்.

News April 16, 2024

அரியலூர்- தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்த வேட்பாளர்கள்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் (தனி) மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவினங்கள் தொடர்பான பதிவேடுகளை தேர்தல் செலவினப் பார்வையாளர் நிதின் சந்த் நெகி முன்னிலையில் இன்று தாக்கல் செய்தனர். மூன்றாம் கட்ட ஆய்வில் 13 வேட்பாளர்களின் சார்பில் அவர்களது முகவர்கள் பங்கேற்று தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்தனர்.

News April 16, 2024

வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் ஆய்வு

image

உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிகுட்பட்ட அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதிவு பொருட்களை வாக்குச்சாவடி வாரியாக பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர், தேர்தல் நடத்தும் அலுவலர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News April 15, 2024

அரியலூரில் 2 சிறுத்தகள் நடமாட்டமா?

image

அரியலூர் மாவட்டம், செந்துறையில் சிறுத்தை ஒன்று உலவி வந்த நிலையில், அதை பிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டத்தில் இரட்டை சிறுத்தை இருப்பதாக வாட்ஸ் அப்பில் உலா வரும் தவறான செய்தி தொடர்பாக, காவல்துறையில் வனத்துறை சார்பில் புகார் அளித்துள்ளது. இதில் தவறான செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.

error: Content is protected !!