India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம் மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika
அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய 2 சிறுவர்கள் நேற்று நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக பள்ளி முடிந்து திரும்பிய 16 வயது மாணவியை காதலிப்பதாக கூறி, சிறுவர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அச்சிறுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 18 வயதுடைய சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும், மற்றொரு 18 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டிக் கடை, அடகு கடைகள் மற்றும் அச்சக உரிமையாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனி மேரி ஸ்வர்னா தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட்டிக் கடை, அடகு கடை, அச்சக உரிமையாளர்கள் தேர்தல் நடத்தை நெறி விதிகளுக்கு மாறாகவோ , சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடாது என கூறினார்
ஆண்டிமடம் ஒன்றியம் வரதராஜன்பேட்டை பங்கு ஆலயத்தில் புனித சூசையப்பர் திருவிழா திருப்பலி பங்குதந்தை, உதவி பங்குதந்தையால் நிறைவேற்றப்பட்டது. இத்திருவிழா திருப்பலியில் அருட்தந்தை புனி சூசையப்பர் பெயர் கொண்ட அனைவருக்கும் திருவிழா நல்வாழ்த்துக்கள் கூறினார்கள். பிறகு ஆலயமணி ஓசையோடுயும், மேள, தாள முழக்கங்களுடன் இறைமக்கள் பக்தியோடும் இருகரம் குவிக்க புனித சூசையப்பர் திருகொடியிரக்கப்பட்டது .
அரியலூர், நாகமங்கலம் கிராமத்தை சேர்ந்த மணி, ஜெயக்கொடி என்பவரும் உறவினர்கள். இந்நிலையில் மணி தன்னுடைய மாமியார் நகையை தர வேண்டும் என ஜெயகொடியிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் மணியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து ஜெயக்கொடியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறை தரப்பில் நேற்று(மார்ச்.18) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு சிமெண்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் என்ற பேனருடன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என்றும், ஜனநாயகத்தை வலிமை படுத்த அனைவரும் பங்களிக்க வேண்டும் என்பது தொடர்பாக (18.3.2024) விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களை ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, அரியலூர் மாவட்டத்தை சார்ந்த தேர்தல் பாதுகாப்பு பணிபுரிய விருப்பமுள்ள 65 வயதிற்குட்பட்ட நல்ல உடல் திறனுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் வாக்காளர் அட்டையுடன் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகுமாறு இன்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரியலூரில் இன்று(மார்ச் 18) நடைபெறவிருந்த குறைதீர் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் குறைதீர் கூட்டம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் நீங்கும் வரை குறைதீர் கூட்டங்கள் நடைபெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அங்கு தொலைபேசி மூலம் வரும் புகார்கள், கண்காணிப்புக்குழு, கணினியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க தொ.பேசி. எண்.18004259769 என்ற எண்களிலும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பிரதிவாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டம், கிராம பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்கள் போன்றவை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.