Ariyalur

News April 29, 2024

தகவல் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

image

அரியலூர் தேளூர் GKM நகர் பகுதியில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடப்பதாக அவ்வழியாகச் சென்றவர்கள் நேற்று காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் ஏதேனும் தகவல் தெரிந்தால் 9498100709 & 9898102217 இந்த எண்ணில் புகார் அளிக்கலாம் என கயர்லாபாத் போலீசார் தரப்பில் நேற்று இரவு தகவல் தரப்பட்டுள்ளது.

News April 29, 2024

உலக செஸ் போட்டி: அரியலூர் சிறுமி சாம்பியன்

image

ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் 25.04.2024 முதல் 29.04.2024 வரை நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் under 10 Rapid பிரிவில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த சர்வாணிக்கா இந்தியா சார்பில் கலந்து கொண்டு மொத்தம் 11 சுற்றுகளில் 9 வெற்றிகளை பெற்று தங்கம் வென்று உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வண்ணமே இருக்கின்றன.

News April 29, 2024

அரியலூர்: 2329 காலி பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழகத்தில் உள்ள மாவட்ட கோர்ட்டுகளில் 2329 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது விருப்பம்போல் எதாவது ஒரு மாவட்டத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். அதன்படி அரியலூர் மாவட்ட நீதித்துறையில் 39 காலியிடங்கள் உள்ளன. இதில் விண்ணப்பிக்க <>https.//www.mhc.tn.gov.in <<>>என்ற இணைய தளத்தில் மே.27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News April 29, 2024

மூதாட்டியிடம் நூதன முறையில் தாலி செயின் பறிப்பு

image

அரியலூர் பொன்க்குடிகாடு கிராமத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை என்பவரிடம் மர்ம நபர் ஒருவர் உங்களுக்கு செய்வினை வைத்துள்ளனர். தாலி செயினை கழட்டி கொடுத்தால் பூஜை செய்து நீக்கிவிடுவேன் என கூறியுள்ளார். மூதாட்டியும் 5 பவுன் தாலிச் சங்கிலியை கழட்டி கொடுத்துள்ளார். அதை எடுத்துக்கொண்டு மர்ம நபர் தப்பி சென்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.

News April 28, 2024

முதலை கடித்து மூதாட்டி காயம்

image

தா.பழூர் அருகே நடுக்கஞ்சங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சின்னம்மா. இவர் நேற்று கொள்ளிடம் கரையோரம் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது கொள்ளிடத்தில் இருந்த முதலைக் கடித்ததில் பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து சின்னம்மா அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து த.பழூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

News April 28, 2024

அரியலூர் அருகே சோகம்

image

அரியலூர் தேளூர் GKM நகர் பகுதியில் உள்ள மரத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கயர்லாபாத் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 27, 2024

கிராம சபை கூட்டம் ரத்தா?

image

அரியலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 6 முறை கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மே.1 இல் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இந்தாண்டு கிராம சபை கூட்டம் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இன்றுவரை கிராம சபை கூட்டம் நடத்துவதற்கான தகவல்கள்,வழிகாட்டுகளோ கிராமங்களுக்கு வழக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News April 27, 2024

செந்துறையில் தீமிதி திருவிழா

image

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்தில் குழுமூர் கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலில் நேற்று (26.04.2024) தீமிதி திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவானது 18 நாட்களுக்கு முன் காப்பு கட்டுதளுடன் தொடங்கிய திருவிழா ஒவ்வொரு நாளும் அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

News April 26, 2024

அரியலூரின் பொக்கிஷம் கரைவெட்டி சரணாலயம்!!

image

அரியலூரில் உள்ள சிற்றூரான கரைவெட்டியில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. தமிழகத்தின் மிகப் பெரிய சரணாலயம் இதுவே. இங்கு திபெத், லடாக், ரஷ்யா, சைபேரியா போன்ற நாடுகளிலிருந்து பறவைகள் இடம்பெயர்ந்து அக்டோபர் முதல் மே வரை தங்கி செல்கின்றனர். 50க்கு மேற்பட்ட நீர்ப்பறவைகளும் 37 வகையான நிலப்பறவைகளும் வருகின்றன. பகலில் இரை தேடச் சென்று, மாலையில் சரணாலயத்திற்கு திரும்புவதால், மாலை நேரம் இங்கு செல்ல ஏற்றதாகும்.

News April 26, 2024

செந்துறையில் கோடைகால நீர் மோர் பந்தல்

image

பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் இளம்பை. இரா.தமிழ்ச்செல்வன் MA, Ex. மலை செந்துறையில் நேற்று (25.04.2024) தண்ணீர் பந்தலை பொதுமக்களின் நலனுக்காக திறந்து வைத்து நீர்,மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்டவகளை வழங்கினார். உடன் செந்துறை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் உதயம் எஸ். ரமேஷ் மற்றும் ஒன்றிய சார்பு அணி, உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

error: Content is protected !!