India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டம் திருமானூரைச் சேர்ந்தவர் சாவித்திரி. இவர் தனியார் கடையில் வாங்கிய டி.வி. ஒரு சில நாட்களில் அது பழுதானதாக அந்நிறுவனம் மீது அரியலூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த குறைதீர் ஆணைய தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையிலான குழுவினர் டி.வி. தொகையுடன் சேர்த்து ரூ.10 ஆயிரம் இழப்பீடும் மேலும் வட்டியுடன் சேர்த்து வழக்கு செலவும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சாமிதுரை தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற வெண்மான்கொண்டான் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன், அரியலூர் சாக்கோட்டை தெருவை சேர்ந்த தியாகராஜன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் இந்திரா நகரை சேர்ந்த பால விக்னேஷ் என்பவர் பழைய இரும்பு பிளாஸ்டிக் கடை வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய பழைய இரும்பு பிளாஸ்டிக் குடோனில் கழிவுகள் தனியாக சேமித்து வைத்துள்ளார். அதில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டு புகை மூட்டமாக காணப்பட்டது.
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரையுள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட உள்ளது எனவே தகுதியுள்ள நபர்கள் www.sdat.tn.gov.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடைகால பயிற்சி முகாம் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வருகின்ற 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இதில் கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 18 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் மேலும் விவரங்களுக்கு 7401703499 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளாா்.
அரியலூரில் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு மே தினமான இன்று அரியலூர் நகராட்சி ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்கம் சார்பாக ஏஐடியுசி கொடியை சங்க தலைவரும், உள்ளாட்சித் துறை சம்மேளன மாநில செயலாளருமான தண்டபாணி புது நகராட்சி அலுவலகம் முன்பும் கொடியேற்றினர்.
செந்துறை வட்டம் நல்லாம்பாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றதுடன் தொடங்கியது. 5ஆம் நாளை முன்னிட்டு நேற்று (30.04.2024) படைத் தேரில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு அம்மன் அருளை பெற்றுச் சென்றனர்.
உடையார்பாளையம் அருகே தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிதம்பரம் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தினை தேர்தல் அலுவலரும் அரியலூர் ஆட்சியருமான ஆனி மேரி ஸ்வர்னா இன்று ஆய்வு செய்தார். அப்போது துணை இராணுவத்தினர், சிசிடிவி கேமரா கண்காணிப்பு, மாவட்ட காவல்துறை பாதுகாப்பு ஆகியவற்றை பார்வையிட்டார்.
ஆண்டிமடம் வட்டார தமிழக ஆசிரியர் கூட்டணியின் 8 ஆசிரியர்களின் பணி நிறைவு பாராட்டு விழா, மகளிர் தின விழா, 25 ஆண்டுகள் பணி முடித்த 65 ஆசிரியர்களின் வெள்ளி விழா என முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இதில், அகில இந்திய செயலாளர் வா.அண்ணாமலை மற்றும் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட 1000த்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அரியலூர் தேளூர் GKM நகர் பகுதியில் அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடப்பதாக அவ்வழியாகச் சென்றவர்கள் நேற்று காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் ஏதேனும் தகவல் தெரிந்தால் 9498100709 & 9898102217 இந்த எண்ணில் புகார் அளிக்கலாம் என கயர்லாபாத் போலீசார் தரப்பில் நேற்று இரவு தகவல் தரப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.