India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த +2 பொதுத்தேர்வில் 97.25 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தது. இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா சால்வை அணிவித்து பாராட்டினார்.
நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், அரியலூர் மாவட்டம் மாநில அளவில் 3 வது இடத்தை பெற்றுள்ளது. மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம் 97.25 ஆகும். மேலும் தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் அரசுப்பள்ளி – 23, அரசு உதவிபெறும் பள்ளி – 6, மெட்ரிக் பள்ளி – 15, சுயநிதி பள்ளி – 9 ஆக மொத்தம் 53 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
நடந்து முடிந்த +2 பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் 90 பள்ளிகளைச் சேர்ந்த 8218 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3917 மாணவர்களும், 4301 மாணவிகளும் தேர்வு எழுதினர்.
54 அரசு பள்ளிகளில் 2323 மாணவர்களும், 2214 மாணவிகளும் என மொத்தம் 4537 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 2199 மாணவர்களும், 2138 மாணவிகளும் என மொத்தம் 4337 தேர்ச்சி பெற்றனர். அரசுப்பள்ளி தேர்ச்சி சதவீதம் 95.59 ஆகும்.
தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் அரியலூர் மாவட்ட, தாலுகா வாரியாக பகுதி நேரமாக பணியாற்ற செய்தியாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், அரியலூர் மாவட்டத்தில் 97.25 தேர்ச்சி விகிதம் பெற்று மாநிலத்தில் மூன்றாவது இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டம் குறைந்த அளிவிலான தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது.
அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே விக்கிரவாண்டி – கும்பகோணம் பைபாஸ் சாலை அமைக்கும் பணி நடைபெறும் நிலையில் மயான சாலை அடைக்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதிமக்கள் பாதை அமைத்து தர மனு அளித்த நிலையில் அதற்கு அதிகாரிகள் மறுத்தனர். ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் பாதை அமைத்து தர வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் ஷிஜாவிடம் மனு அளித்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நாளை(மே 5) நடைபெறுகிறது. அரியலூர் மான்போர்ட் பள்ளியில் 648 பேர், வெங்கட கிருஷ்ணாபுரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொதுப்பள்ளியில் 552 பேர், தாமரைக்குளம் ராம்கோ வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் 432 பேர், ரெட்டிப்பாளையம் ஆதித்ய பிர்லா பள்ளியில் 108 பேர், கருப்பூர் விநாயகா பொது பள்ளியில் 624 பேர் என மொத்தம் 2,364 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.
கடலூர் மாவட்டம் வடலூரில், வள்ளலார் சர்வதேச மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் சார்பில் இன்று மாலை 3 மணி அளவில் போராட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில் நாம் தமிழர் நிர்வாகிகள் கைது செயப்பட்டதால் இப்போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதில் அரியலூர் மாவட்ட செயலாளர் கப்பல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோதண்டராமசாமி கோயிலில் தசாவதார மண்டபம் எனப்படும் 20 அடி உயரமுள்ள 10 தூண்கள் உள்ள நான்கு வரிசை கொண்ட பரந்த மண்டபம் கோயிலில் உள்ளது. இதில் 6.6 அடி உயரமுள்ள விஷ்ணுவின் 10 அவதாரங்கள் இத்தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. 90 அடி உயரமும் 6 அடுக்குகளும் உள்ள கோபுரம் முன்பகுதியில் உள்ளது. கோபுரத்தின் அடித்தளம் சுண்ணாம்பு கற்களாலும், மேற்பகுதி செங்கல் சுண்ணாம்புக்கலவையாலும் கட்டப்பட்டுள்ளது.
தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் அரியலூர் மாவட்ட, தாலுகா வாரி பகுதி நேரமாக பணியாற்ற செய்தியாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள்9642422022 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
Sorry, no posts matched your criteria.