Ariyalur

News June 26, 2024

ரூ.75 லட்சம் கடன் உதவி

image

முதல் தலைமுறை தொழில் முனைவராக உருவாக்கிட புதிய தொழில் முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் படித்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வங்கிகள் மூலம் 25% மானியத்துடன் ரூ.75 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் https://msmeonline.tn.gov.in/needs/index.php என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 25, 2024

ரூ.75 லட்சம் கடன் உதவி

image

முதல் தலைமுறை தொழில் முனைவராக உருவாக்கிட புதிய தொழில் முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் படித்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வங்கிகள் மூலம் 25% மானியத்துடன் ரூ.75 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் https://msmeonline.tn.gov.in/needs/index.php என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 25, 2024

சிதம்பரம் எம்.பி.ஆக பதவியேற்றார் திருமாவளவன்

image

18ஆவது மக்களவைத் தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்ற விசிக தலைவர் திருமாவளவன் இன்று 2வது முறையாக எம்.பி.யாக பதவியேற்றார். நடந்து வரும் 2ஆவது நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் 5,05,084 வாக்குகள் பெற்று, 1.03 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

News June 25, 2024

அரியலூர்: 3,846 யூனிட் ரத்தம் சேகரிப்பு

image

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த மையத்தில் கடந்த ஆண்டு 3,846 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டு 7000க்கும் மேற்பட்ட ரத்தம் மற்றும் ரத்த கூறுகள் மருத்துவமனை கர்ப்பிணி பெண்கள், எலும்பு அறுவை சிகிச்சை, பொது அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சை பிரிவு, அவசர அறுவை சிகிச்சை உள்ளிட்ட நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா தெரிவித்துள்ளார்.

News June 25, 2024

அரியலூர்: பொது நிவாரண நிதி

image

அரியலூர் வட்டம், வெற்றியூர் கிராமத்தை சேர்ந்த மகாலெட்சுமி, கரைவெட்டி கிராமத்தை சேர்ந்த திவ்யபிரியா மற்றும் செந்துறை வட்டம், வஞ்சினபுரம் கிராமத்தை சேர்ந்த ரித்திஸ் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்நிலையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் உயிரிழந்தவர்களின் பெற்றோரிடம் நேற்று வழங்கினார்.

News June 25, 2024

தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உலக குருதி கொடையாளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாமில் உயிர்காக்கும் பொருட்டு தன்னார்வலராக ரத்த தானம் செய்த நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பதக்கங்களையும் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ண இன்று (24.06.2024) வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டார்

News June 24, 2024

பதவி உயர்வு பெற்ற காவலர்களுக்கு பாராட்டு

image

அரியலூர் மாவட்ட காவல் துறையில் புதிதாக பதவி உயர்வு பெற்ற 25 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். மேலும் காவலர்கள் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நேர்மை கொண்ட மன உறுதியுடன் செயல்பட வேண்டும் என்று பதவி உயர்வு பெற்ற காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

News June 24, 2024

அரியலூர்: ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகார அமைப்புக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News June 23, 2024

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பாஜகவினர் கைது

image

உடையார்பாளையத்தில் இன்று மாலை தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்பு தொடர்பாக தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ள வருகை தரும் வெளியூர் நபர்களை ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர்.

News June 22, 2024

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பாஜகவினர் கைது

image

உடையார்பாளையத்தில் இன்று மாலை தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்பு தொடர்பாக தமிழக அரசை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ள வருகை தரும் வெளியூர் நபர்களை ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர்.

error: Content is protected !!