India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.31 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்தது. இதை தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றியதற்காக அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமியை அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா இன்று சால்வை அணிவித்து பாராட்டினார். மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 96.2% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 95.07 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 97.46 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் 97.31 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 96.41 %பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 98.26 % தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
அரியலூர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் உயர் கல்வியை தொடர சிறப்பாக பணியாற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த கல்வித்துறையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி கலந்து கொண்டார்.
அரியலூர் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கோடைக்காலத்தில் பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் வெயிலின் தாக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்படும் நிலையில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
ஜெயங்கொண்டம் அருகே திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் குருவாளப்பர் கோவில் பகுதி சாலையில் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகள் இரவு நேரங்களில் எரிவதில்லை. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், எனவே தெரு விளக்குகள் எறிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவினை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மருத்துவக் கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் குறித்து கலந்தாய்வு செய்தார். ஆய்வில் சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த பெரியகிருஷ்ணாபுரம் மேலத் தெருவை சேர்ந்தவர் கண்ணப்பன் மகன் கருணாநிதி (55) விவசாயியான இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள மோட்டாரை போடுவதற்காக மோட்டாரை அவர் தொட்டபோது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் கீழப்பழுரில் அமைந்துள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆர்வம் உள்ள மாணவ மாணவிகள் விண்ணப்பிக்க கல்லூரி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர நேரிலோ அல்லது www.tnpoly.in என்ற இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் சிறந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு 12ஆம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். அரியலூரில் மே.10 இல் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.