India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டம் செங்குந்தபுரம் சிவன் கோவிலில் மாணிக்கவாசகர், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவனடியார்கள் திருகூட்டத்தினர் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சிவ தொண்டர்கள் கலந்து கொண்டு திருவாசகத்தை ஓதினர். முன்னதாக சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. உலக நன்மை வேண்டி இந்நிகழ்வு நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-IV தேர்வுகள் வருகின்ற 09ம் தேதி நடைபெறுகிறது. இதில் அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் ஆகிய 4 வட்டங்களில் உள்ள 87 தேர்வு கூடங்களில் 24, 745 தேர்வாளர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு கூடங்களில்
தேர்வர்களுக்கு தேவையான குடிநீர் மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. தற்பொழுது தேர்தல் முடிவுகள் வெளிவந்ததை அடுத்து இனி வழக்கம் போல் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். எனவே பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை மனுவாக குறை தீர்க்கும் கூட்டத்தில் அளிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான வாய் மற்றும் கால் குழம்புகளில் ஏற்படும் கோமாரி நோய் வராமல் தடுப்பதற்கு அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் மற்றும் மாணவர்களுக்கு 27 பள்ளி விடுதிகள், 3 கல்லூரி விடுதிகள் மற்றும் ஒரு தொழில்நுட்ப விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதியில் சேர இம்மாதம் 14ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளில் ஜூலை 15ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மக்களுக்கான டாம்கோ மூலம் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகியவை வழங்கப்படுகிறது. எனவே இதில் கடன் பெற விருப்பமுள்ளோர் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா தெரிவித்துள்ளார்.
அரியலூர் அடுத்த பொய்யாத நல்லூர் கிராமத்திலுள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில்
வைகாசி மாத அமாவாசை முன்னிட்டு நடைபெற்ற மகா சண்டியாகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள், தங்கள் கொண்டு வந்த புடவை, பழங்கள், மிளகாய் உள்ளிட்டவைகளை யாகத்தில் போட்டு தங்களது நேர்த்திகடனை செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடத்துப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 1 தேர்வுக்கு 90 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு நடத்தப்படவுள்ளது. எனவே தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
செந்துறை ஒன்றியம் சுற்றியுள்ள பகுதிகளான அங்கனூர், சிவராமபுரம் , சன்னாசி நல்லூர் மற்றும் தளவாய் ஆகிய கிராம பகுதிகளில் இன்று பிற்பகல் இரண்டு மணிமுதல் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது. கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் வெப்பமான வானிலை நிலவியது.தற்போது பெய்துள்ள மழையின் காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் உதயநத்தம் அடுத்த அமிர்தராயன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. அதே கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரது வயலில் திருட்டுத்தனமாக புல் அறுத்ததில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ராமசாமி வைத்திருந்த கதிர் அருவாளை பிடுங்கியதில் ராமசாமிக்கு காயம் ஏற்பட்டு ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.