Ariyalur

News July 25, 2024

அரியலூர் சிமெண்ட் ஆலைகளால் கேள்விக்குறியாகும் விவசாயம்

image

கனிம வளங்கள் நிறைந்துள்ள அரியலூரில் தற்போது 8 பெரு வணிக சிமெண்ட் ஆலைகள் உள்ளன. அரியலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுரங்கம் தோண்டுவதற்கு பல முன்னணி நிறுவனங்கள் வேலை வழங்குவதாக கூறி விவசாயிகளிடம் நிலங்களை கையகப்படுத்துகின்றன.பின்பு கூறியபடி வேலை வழங்குவதில்லை என கூறி பிச்சை எடுப்பதை தவிர வேற வழி இல்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.

News July 25, 2024

பால் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு

image

அரியலூரில் உள்ள தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க மையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, கொள்முதல் செய்யப்படும் பால், சில்லரையில் விற்பனை செய்யப்படும் பால், கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்து கேட்டறிந்தார். மேலும் கொள்முதல் செய்யப்படும் பாலின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

News July 25, 2024

அரியலூரில் அதிரடி காட்டிய கலெக்டர்

image

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரின் நேற்றைய ஆய்வில் அறிவுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 6 மணிக்கு நகராட்சியில் நடைபெறும் தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அனைத்து தெருக்களிலும் உள்ள குப்பைகளை முழுமையாக அப்புறப்படுத்தி நகரை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

News July 25, 2024

பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்ற ஆட்சியர்

image

அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை முதல் அரியலூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கை தொடர்பான 69 மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

News July 24, 2024

பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்ற ஆட்சியர்

image

அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை முதல் அரியலூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கை தொடர்பான 69 மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

News July 24, 2024

குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு

image

திருமானூர் அருகே கீழ கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் மீது திருமானூர் மற்றும் கீழப்பழுவூர் காவல் நிலையங்களில் பல்வேறு கொலை முயற்சி வழக்குகள் உள்ளது இந்நிலையில் கடந்த மாதம் பாலமுருகன் என்பவரை மறித்து அடித்து கொலை செய்ய முயற்சித்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்பி பரிந்துரையில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி இன்று உத்தரவிட்டார்.

News July 24, 2024

கணினி ஆய்வகத்தை திறந்து வைத்த ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ 

image

கீழப்பழுவூர் அரசு தொழில்நுட்ப கல்லூரியினை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி மற்றும் அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா ஆகியோர் இன்று பார்வையிட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் எண்ணிக்கை, பாடப்பிரிவுகள் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்தார். கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கணினி ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா ஆகியோர் திறந்து வைத்தனர்.

News July 24, 2024

அரியலூர் நியாய விலை கடையில் ஆட்சியர் ஆய்வு

image

அரியலூர் நியாய விலைக்கடையில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இருப்பில் உள்ள பொருட்களின் விவரம் மற்றும் தரம், மின்னணு குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, பொருட்கள் வழங்கப்படுவது குறித்தும் ஆய்வு செய்ததுடன், பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என பொதுமக்களிடமும் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

News July 24, 2024

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் ஆட்சியர்

image

ஊரகப்பகுதிகளில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில் இன்று மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் தீர்வு காணவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி அறிவுறுத்தினார். மேலும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 2672 மனுக்கள் பெறப்பட்டது.

News July 24, 2024

கங்கொண்ட சோழபுரம் வரலாறு

image

அரியலூரிலிருந்து 70 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயில் நகரம் கங்கைகொண்ட சோழபுரம். முதலாம் ராஜேந்திரன் கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்றதை நினைகூறும் வகையில் 1023-ல் நிறுவப்பட்டது. 250 ஆண்டுகள் பிற்காலச்சோழர்களின் தலைநகராகவும் விளங்கியது. 2004-ல் யுனெஸ்கோ (UNECSCO) உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலின் மாதிரியாகவே இது பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!