India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிதம்பரம் மக்களவை தொகுதியில் தற்போதைய நிலவரப்படி அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் முன்னிலை வகித்து வருகிறார். விசிக தலைவர் திருமாவளவன் பின்னடைவை சந்தித்துள்ளார். தபால் வாக்குள் எண்ணப்பட்டு முன்னிலை வகித்து வந்த திருமாவளவன். 100 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
சிதம்பரம் மக்களவை தொகுதியில் பதிவான 9,993 தபால் வாக்குகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான தத்தனூர் எம் ஆர் சி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கொண்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லப்படுகிறது. எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கப்பட உள்ளன.
செந்துறை வட்டம் குமிழியம் கிராமத்தில் எழுந்தருளும் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், அருள்மிகு விநாயகர், மாரியம்மன் திருத்தேரோட்டம் இன்று (3.6.2024) ஊராட்சி மன்ற தலைவர், நாட்டாண்மைக்காரர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பொது மக்கள் ஒன்றிணைந்து திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையமான தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் போர் சிங் யாதவ், சிறப்பு பார்வையாளர் ராகேஷ் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்னா உடன் இருந்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கலைஞரின் திருவுருவப்படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் மற்றும் கிளைச் செயலாளர் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த குருவாலப்பர்கோயில் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி சாலையை கடக்க முயன்றபோது பூவாய்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவமணி இருசக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டம் நோக்கி சென்றபோது ஆனந்தி மீது பைக் மோதியதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் கொடுக்குற கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் அஷ்டவந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜை, விக்னேஸ்வர பூஜை, கும்ப அலங்கார யாகசாலை, மூலவர் விக்கிரகங்கள் இயந்திரம் வைத்து அஷ்டபந்தனம் சாத்தி புனித கங்கை, காவிரி நீர், ராமேஸ்வரம் கோட்டி உள்ளிட்ட புனித நீரால் இன்று மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
அரியலூர் பேருந்து நிலையம் அருகில் அரசு போக்குவரத்து, சாலை போக்குவரத்து மற்றும் ஆட்டோ போக்குவரத்து துறையில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் நேற்று ஜூன்-1 ஓட்டுனர் தினத்தை முன்னிட்டு மாநில பிரச்சார இயக்கம் துவங்கப்பட்டது. இதில் கிருஷ்ணன் சி.ஐ.டி.யூ தலைமை தாங்கினார். துரைசாமி சிற்றம்பலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் 30 கிமீ முதல் 40 கிமீ வரைலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று நள்ளிரவு 1 மணி வரை அரியலூர் மாவட்டத்தில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.