India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜெயங்கொண்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2024-25 கீழ் ஜெயங்கொண்டம் தொகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்த கடிதத்தினை வழங்கினார்.உடன் மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குனர் ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழக அரசு துணிநூல் துறை சார்பில், 10, 12 ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சியினை பெறவிரும்புபவர்கள் <
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 21 ஆம் தேதி சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில் முன்னணி தனியார்துறை நிறுவனங்கள், திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்களில் 300-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் கலந்து கொள்பவர்கள் <
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மாநில விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதை பெற விரும்பும் நிறுவனமோ, தனிநபரோ https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் 05.07.2024-க்குள் விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் வரும் 21.06.2024 அன்று அனைத்து துறை அதிகாரிகளும் பங்குபெறும் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், அடையாள அட்டை, ஆதார் அட்டை திருத்தம், வாக்காளர் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எனவே, இதில் திருநங்கைகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசின் சார்பாக நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துக்கள், தீவிபத்துக்கள், நிலச்சரிவு, விலங்குகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு ஜீவன்ரக்க்ஷா பதக்கவிருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. தகுதியானவர்கள் https://awards.gov.in இணையதளம் மூலம் ஜீன்.25 வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு சுதந்திர தினத்தன்று விருதுகள் வழங்கப்பட உள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகர்கள் விருது பெற உரிய ஆவணங்களுடன் இம்மாதம் 20 ஆம் தேதிக்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா தெரிவித்துள்ளார்.
அரியலூரில் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 8 கார் உள்ளிட்ட 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் மது அருந்திவிட்டு ஓட்டியதாக 13 வாகனங்களை பறிமுதல் செய்து ரூ.1.30 லட்சம் வரை அபதாரம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தலைக்கவசம், இன்சூரன்ஸ் உள்ளிட்ட விதிமீறல்கள் செய்த 140 இருசக்கர வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அரியலூரில் ஜமாபந்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். இதில் அரியலூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கு நாளையும் நாகமங்கலம் உள்வட்டத்திற்கு 21ஆம் தேதியும், கீழப்பழுவூர் உள்வட்டத்திற்கு 25ஆம் தேதியும், திருமானூர் உள்வட்டத்திற்கு 26ஆம் தேதியும் ஏலாக்குறிச்சி உள்வட்டத்திற்கு 27ஆம் தேதியும் நடைபெறும் எனவும் இதில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கான விடுதிகள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள், பெண்களுக்கான இல்லங்கள்,சிறார் இல்லங்கள், பள்ளி குழந்தைகளுக்கான விடுதிகள், பள்ளியுடன் இணைந்து விடுதிகள் நடத்தும் நிறுவனங்கள் தமிழ்நாடு பெண்கள், குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் திட்டத்தில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாத விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.