India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊட்டியில் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நான்காவது புத்தக கண்காட்சி வரும் 24ஆம் தேதி முதல் அடுத்த மாதம் இரண்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் முக்கிய சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்கள். பல்வேறு பதிப்பகங்கள் புத்தக கண்காட்சியில் கலந்து கொள்ள உள்ளன. இந்நிலையில் கண்காட்சிகள் நடைபெறும் கலை குழுக்களின் விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (22.10.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
திமுக சார்பில் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகளிடம் தொகுதியில் உள்ள வெற்றி நிலவரம் குறித்தும் கள நிலவரம் குறித்தும் தமிழ்நாடு முதல்வரும் மு.க ஸ்டாலின் நேரடியாக கலந்துரையாடினர். இன்று அக்.22 உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துரையாடினார். அப்போது கள்ளக்குறிச்சி திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் உதயசூரியன் உடன் இருந்தார
சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் முகாமில் காவல் ஆணையாளர் ஆ.அருண் இன்று (22.10.2025) 9 புகார் மனுக்களை பெற்றார். சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் விரைந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு, உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டு தீர்வு காணும் முயற்சியாக இந்த முகாம் நடைபெற்று வருகிறது.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்டு
பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர
வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 32 வாகனங்கள் வரும் அக்டோபர் 30-ம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று அக்.22 அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்-22 நாமக்கல்-(தேசிங்கன் – 8668105073), வேலூர் – (ரவி – 9498168482), ராசிபுரம் – (சின்னப்பன்- 9498169092), குமாரபாளையம் – (செல்வராஜு – 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (22.10.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (அக்.22) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.25 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக்.23) முதல் முட்டையின் விலை ரூ.5.25 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் இன்றைய (அக்டோபர் -22) விலை நிலவர பட்டியலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் அதிகாரிகள் வெளியிட்டனர். நெல் ADT45-1302 விலை போனது மக்காச்சோளம் ரூ.1730-க்கும், நெல் வெளியிடப்படவில்லை எள்- ரூபாய்-3599 விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.