India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கோவை மாவட்டத்தில் இன்று (01.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணையின் மீன்பாசி குத்தகையினை டெண்டர் மூலம் சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் அலுவலகம் வாயிலாக ஏலம் விட ஆணையிடப்பட்டுள்ளது.
டெண்டர் விண்ணப்பங்கள் மற்றும் அதன் தொடர்பான விவரங்கள் www.tntenders.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (டிச. 01) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில்(24.11.2025) அன்று நடந்த சாலை விபத்தில் இறப்பு ஏற்பட்டுள்ள 6 நபர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.3 இலட்சம் வீதம் ரூ.18 இலட்சமும், பலத்த காயம் அடைந்த 35 நபர்களுக்கு தலா ரூ.10 இலட்சம் வீதம் ரூ.35 இலட்சமும் மற்றும் லேசான காயம் அடைந்த 18 நபர்களுக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.9 லட்சம் மொத்தம் 59 நபர்களுக்கு ரூ.62 இலட்சம் மதிப்பிலான நிவாரண உதவி வழங்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சின்ன சங்கரன்கோவில் வாய்க்கால் பகுதிக்கு அருகே வனவிலங்கான உடும்பினை வேட்டையாடி சமைத்தது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த வனக்குற்றத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சங்கரசுப்பு மற்றும் மேல கொட்டாரத்தை சேர்ந்த கணேசன் மகன் முத்துப்பாண்டி ஆகிய இருவர் கைது செய்து அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

சேலம் ரயில்வே: 12677 என்ற எண் கொண்ட கே.எஸ்.ஆர்.பெங்களூரூ- எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இனி 16377 எண்ணாக ஆகவும், 12678 என்ற எண் கொண்ட எர்ணாகுளம்- கே.எஸ்.ஆர்.பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இனி 16378 எண்ணாக ஆகவும் மாற்றம் செய்யப்படுகிறது. புதிய ரயில் எண்கள் அடிப்படையில் வரும் டிச.03 முதல் மேற்கண்ட ரயில்கள் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், வன்னிவேடு கிராமம் அருள்மிகு ஶ்ரீபுவனேஸ்வரி அம்பாள் உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோயிலில், இன்று (டிச.01) கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். உடன் திமுக மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் வினோத் காந்தி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரத்தில் பொதுப்பணி துறையின் சார்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக இறுதி கட்ட கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை அதிகாரிகள், கட்டட ஒப்பந்ததாரர் மற்றும் அரசு ஊழியர்கள் பலர் உடன் இருந்தனர்.

கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு வரவிருக்கும், பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு. தற்காலிக பேருந்து நிலையம், கார் நிறுத்தும் இடங்கள், காவல் சேவை மையங்கள், மருத்துவ முகாம்கள்,குடிநீர் நிலையங்கள், கழிவறைகள், அவசர உதவி, காணாமல் போன குழந்தைகளை கண்டறிய போன்ற உதவிகளை, மேலே தெரியும் செயலியில் அறிந்து கொள்ளலாம். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து மாவட்ட அரசால் இன்று (டிச.01) வெளியிடப்பட்டது.

தருமபுரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு உதவி செயற்பொறியாளர் (ஊ.வ), பயன்பாட்டில் இருந்த ஈப்பு TN 09 G 1289 முதிர்ந்த நிலையில் கழிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. கழிவு செய்யப்பட்ட வாகனத்தை வரும் டிச.12ம் தேதி அன்று முற்பகல் 11.00 மணியளவில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 3வது தளம், இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தருமபுரி அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது.
Sorry, no posts matched your criteria.