Tamilnadu

News November 26, 2025

தேனி எஸ்.பி தலைமையில் உறுதிமொழி ஏற்பு

image

தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு இன்று 16.11.2025 புதன்கிழமை உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி காவல் கண்காணிப்பாளர் சினேஹபிரியா தலைமையில் நடைபெற்றது. இதில் காவல் உயர் அதிகாரிகள், காவலர்கள், அமைச்சு பணியாளர் பலர் கலந்து கொண்டு உறுதிமொழியை ஏற்றனர்.

News November 26, 2025

ராணுவ வீரர் மனைவி கொலை; ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவு

image

காளையார்கோவிலில், கடந்த வருடம் ராணுவ வீரர் மனைவி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் உண்மை குற்றவாளி தினேஷ்குமார் என்பவர் சிக்காததால், அப்பாவியான ராஜகோபாலன் மீது காளையார்கோவில் காவல்துறை வழக்கு பதிந்தது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி ராஜகோபாலன் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

News November 26, 2025

குமாரபாளையம் வருகை தந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

image

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதன் ஒரு பகுதியாக குமாரபாளையத்தில் மாநில திமுக கட்சி நிர்வாகியின் இல்லத்திற்கு இன்று மாலை வருகை தந்தார். அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 20 நிமிடங்கள் உறவினர் வீட்டில் இருந்த தமிழக முதல்வர் அதன் பின்னர் சித்தோட்டில் நடைபெறும் நிகழ்விற்கு சென்றார்.

News November 26, 2025

கள்ளக்குறிச்சி: ரூ.17,000 சம்பளத்தில் சூப்பர் வேலை!

image

கள்ளக்குறிச்சி மக்களே, INFLUX நிறுவனத்தின் மூலம் ஒரகடம் & ஸ்ரீபெரும்புதூர்-ல் Production/Quality/Assembly பணிக்கு 100 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு BE, டிப்ளமோ (அ) டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.16,500-ரூ.17,000 வரை வழங்கப்படும். 18-24 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். உணவு & போக்குவரத்து வசதி இலவசம். டிச.15-க்குள் இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம்.

News November 26, 2025

கடலூர்: புதிய காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு!

image

கடலூர் மாவட்டம், புவனகிரி காவல் நிலைய புதிய ஆய்வாளராக முத்து ஈஸ்வரன் என்பவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு இருந்த காவல் ஆய்வாளர் லட்சுமி முறைகேடு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், புதியதாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த முத்து ஈஸ்வரன் ஆய்வாளராக புவனகிரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

News November 26, 2025

சென்னை: ரூ.17,000 சம்பளத்தில் சூப்பர் வேலை!

image

சென்னை மக்களே, INFLUX நிறுவனத்தின் மூலம் ஒரகடம் & ஸ்ரீபெரும்புதூர்-ல் Production/Quality/Assembly பணிக்கு 100 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு BE/டிப்ளமோ (அ) டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.16,500-ரூ.17,000 வரை வழங்கப்படும். 18-24 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். உணவு & போக்குவரத்து வசதி இலவசம். டிச.15-க்குள் இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம்.

News November 26, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நவம்பர் 26ம் தேதி நடைபெற்றது இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ6.10நிர்ணயம் செய்யப்பட்டது தீவன மூலப்பொருட்கள் விலை உயர்வு மழை குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது தொடர்ந்து 4 நாட்களுக்கும் மேலாக இந்த விலை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது

News November 26, 2025

விழுப்புரம்:கடன் கொடுத்தவர் தற்கொலை முயற்சி!

image

திண்டிவனம்,தீர்த்த குளம் பகுதியில் மோகன்தாஸ் 6 ஆண்டுகளுக்கு முன்பு,மகேந்திரனுக்கு ரூ.10 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார்.பணத்தை திருப்பி கேட்ட மோகன்தாசை மகேந்திரன் தகாத வார்த்தைகளால் திட்டியதால் மனமுடைந்த மோகன்தாஸ் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 26, 2025

செங்கல்பட்டு: மாத சீட்டு கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News November 26, 2025

அரியலூர்: வழக்கில் இருந்து MLA விடுதலை

image

தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை கண்டித்து, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், ஆர்ப்பாட்டம் நடத்தபட்டது. அப்பொழுது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த வழக்கு நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில், இன்று அந்த வழக்கில் இருந்து அரியலூர் MLA சின்னப்பா உட்பட முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர்களை மாவட்ட முதன்மை நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!