India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை, கிண்டி பெண்கள் ஐடிஐ வளாகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை(நவ.21) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமல் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய 9499966026 எனும் எண்ணை அழைக்கலாம். <

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் திருப்பாச்சேத்தி காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய சிலம்பரசன் மற்றும் ரஞ்சித்தை நேற்று (நவ. 19) குண்டர் தடுப்பு காவலில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி உத்தரவிட்டார்.

தேனியை சேர்ந்த 6.ம் வகுப்பு படித்த 15 வயது பள்ளி சிறுவனை காணவில்லை என பெற்றோர் தேனி போலீசில் 2017.ல் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில் முருகன் என்பவர் சிறுவனை பெங்களூருவில் உள்ள முறுக்கு கம்பெனிக்கு அழைத்து சென்று அங்குள்ள பாண்டி என்பவரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலைக்கு விட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த நிலையில் தேனி மாவட்ட மகிளா நீதிமன்றம் இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை விதித்து தீர்ப்பு

தென்காசி மாவட்டம் ஆயக்குடியைச் சேர்ந்தவர் திருமலை குமார் (39). இவர் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் நேற்று அவர் சிறை குளியல் அறையில் தான் அணிந்திருந்த விலங்கில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெருமாள்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர் விவரங்களை பதிவு செய்வதற்காக, https://labour.tn.gov.in/ism என்கிற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளரை பணி அமர்த்தியுள்ள நிறுவனங்கள், இந்த இணையதளம் வாயிலாகவும், தொழிலாளர் நலத்துறை வாயிலாகவும் விவரங்களை பதிவேற்றம் செய்யவேண்டும் என கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்தார்.

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.ஷேர் செய்யுங்க.

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.ஷேர் செய்யுங்க.

நாமக்கல் மண்டலத்தில் இன்று (20-11-2025) காலை நிலவரப்படி கறிக்கோழி கொள்முதல் விலை உயிருடன் (கிலோ) ரூ.104- ஆகவும், முட்டை கோழி விலை கிலோ ரூ.122- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல், ரூ.6.05 ஆக விற்பனையாகி வந்த முட்டை விலை, நேற்று நடைபெற்ற முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், எவ்வித மாற்றமும் செய்யப்படாததால் அதே விலையில் நீடிக்கின்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் நாகர்கோவில் நகரில் மட்டும் போக்குவரத்து விதி மீறல்களுக்காக ஒரு கோடியே 86 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாக 860 பேரும் இது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று போக்குவரத்து போலீசார் நேற்று தெரிவித்தனர்.

விழுப்புரம்: வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (நவ.21) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில், 500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இதில், 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். உடனே ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.