India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாரம்பரியமிக்க பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரித்து வருகிறது. இந்த வகையில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் தயாரிக்கப்படும் மரச்செப்பு பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகாரம் வழங்கி உள்ளது. குழந்தைகள் விளையாட்டு மர செப்பு பொருட்கள் இங்கு அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. இனி திருநெல்வேலினா அல்வா மட்டும் இல்ல; மேலும் ஒரு சிறப்பு இருக்கு. *ஷேர் பண்ணுங்க

இன்று (டிச.03) மாலை 2 மணி முதல் 4 மணி வரை நண்பகல் ரோந்து காவல் பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவிஎண் அதிகாரிகள் பெயர் தரப்பட்டுள்ளது. அல்லது 100ஐ டயல் செய்து கொள்ளலாம். மேலும் ராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை, ராமேஸ்வரம், திருவாடானை, முதுகுளத்தூர், கமுதி ஆகிய பகுதி மக்கள் இதனை தொடர்பு கொண்டு பயன்படுத்தலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தெரிவித்துள்ளனர்.

அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான சின்னச்சாமி திமுகவில் இணைந்துள்ளார். 2006 முதல் 2016 வரை சிங்காநல்லூர் தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்த சின்னச்சாமி திமுகவில் இணைந்திருப்பது, அதிமுகவுக்கு கூடுதல் சிக்கலை உருவாக்கி இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், திமுக கொங்கு மண்டலத்தை குறித்து வைத்து முக்கிய புள்ளிகளை தூக்கி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (டிச.2) பெய்த கனமழையால் தாமரைப்பாக்கம் 11.6 சென்டிமீட்டர், செங்குன்றம் 9.6 செ.மீ., பொன்னேரி 9.4 செ.மீ., சோழவரம், கும்மிடிப்பூண்டி தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஊத்துக்கோட்டை 8.1 செ.மீ., ஆவடி 7.2 செ.மீ., திருவள்ளூர் 6 செ.மீ., பூண்டி 4.7 செ.மீ., திருவாலங்காடு, பூவிருந்தவல்லி தலா 4.3 செ.மீ., பள்ளிப்பட்டு 3.6 செ.மீ., திருத்தணி 2.1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (டிச.3) 341 மாற்றுத்திறனாளிகளுக்கு 1.41 கோடி மதிப்பிலான நல திட்ட உதவிகளை காட்பாடி விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், துணை மேயர் சுனில்குமார் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தென்காசி நகர் பகுதியான நடுபல்க் சிக்னல் அருகே செங்கோட்டை நீதிமன்ற அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி என்பவரை அவரது அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்கள் சரமரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தினர். வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை.

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. வயது வரம்பு: 27-50
5. கடைசி தேதி: 04.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.18,000 – 2,09,200/-
3. கல்வித் தகுதி: 10th, 12th, B.A., B.Sc., B.E., B.Tech., Master’s Degree, B.Ed., Post Graduate
4. வயது வரம்பு: 27-50
5. கடைசி தேதி: 04.12.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

நீலகிரி மாவட்டத்தில் 35 ஊராட்சிகளில் 27 கிராம ஊராட்சிகளை பிரித்து 88 ஊராட்சிகளும் அதில் 8 கிராம ஊராட்சிகள் பிரிக்காமல் மொத்தம் 96 கிராம ஊராட்சிகளாக மறு சீரமைப்பு செய்ய அரசாணை வெளியிடப்பட்டது. நீலகிரி மாவட்ட சிறப்பு அரசிதழ் 16 தேதி வெளியிடப்பட்டுள்ளது . பொதுமக்கள் இது குறித்த கருத்துக்களை 17 தேதிக்குள் அனுப்பலாம் என்று நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.

பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தோரை ஊக்குவிக்க சர்வதேச மகளிர் தின விழாவில் முதல்வரால் அவ்வையார் விருது வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் பிறந்த 18 வயதிற்கு மேற்பட்டோர் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான சமூக சீர்திருத்தம் பத்திரிக்கை நிர்வாகம் உள்ளிட்ட துறையில் சிறந்து விளங்குவோர் https://awards.tn.gov.in. இணையதளத்தில் வரும் 31ஆம் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.