India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் ரயில்வே: சேலம் வழியாக இயக்கப்படும் ஈரோடு – சாம்பல்பூர் – ஈரோடு வாராந்திர சிறப்பு ரயில் (08311/08312) சேவையை இந்த டிசம்பர் மாதம் இறுதிவரை நீட்டித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில்கள் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில், தமிழ் திரையுலக நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன், சூர்யா, சிம்பு, தனுஷ், அஜித் குமார், விக்ரம் போன்றவர்கள் கலந்து கொண்டு அருணாச்சலேஸ்வரர் கோயிலை சுற்றி பார்த்து, சாமி தரிசனம் செய்வது போன்ற AI புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை , பெருநகர ஊர்காவல் படைக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வயது 18-50-க்குள் இருக்கும் ஆண்,பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். தகுதி உடையவர்கள், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஊர்காவல் படை தலைமை அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்று, டிச.15க்குள் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு, 91760 99249 / 74186 81700 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!

வாழ்த்துகள்! வேலை கிடைத்துவிட்டது, ஆனால் முதலில் ரூ.50,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்றால் கவனம். இது வேலை வாய்ப்பு மோசடி. முன் பணம் கேட்கும் வேலை அல்லது முதலீட்டு வாய்ப்புகள் அனைத்தும் சைபர் குற்றமாக இருக்கலாம். ஏமாறாதீர்கள். சந்தேகம் இருந்தால் 1930-க்கு அழைக்கவும், அல்லது www.cybercrime.gov.in-ல் புகார் செய்யவும். என கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உள்ள உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர், பதவிக்கு தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. புதுச்சேரியில் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி உள்ளிட்ட மூன்று மையங்களில் நடந்தது.

புதுகை அருகே வாண்டாகோட்டையைச் சேர்ந்த அதிமுக மாவட்ட பொருளாளர் வி.சி.இராமைய்யா சாலை விபத்தில் பலியானார். இந்நிலையில் அவருடைய இறந்த செய்தி கேட்டு சொல்லனா துயரத்தில் ஆழ்ந்துள்ளதாகவும், அவரது ஆத்மா இறைவன் திருவடி நிலையில் இளப்பார எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, வி.சி.இராமைய்யா குடும்பத்திற்கு இரங்கல் கடிதம் அனுப்பி உள்ளார்.

சென்னையில் காலை முதல் இடைவிடாது மழை பெய்து வரும் நிலையில், பூந்தமல்லியில் உள்ள ஒருசில தனியார் பள்ளிகள் மாவட்ட நிர்வாகம் தரப்பில் விடுமுறை அறிவிக்கப்படாவிட்டாலும் தானாக முன்வந்து அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், சென்னைக்கு 30 கி.மீ தொலைவில் உள்ள புயலால், கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு தாயுமானவர் திட்டத்தின்கீழ் 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பொருட்களை வழங்கும் வகையில், நாளை டிச.2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

தேனி மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
தேனி – 04546-255133
பெரியகுளம் – 04546-231215
ஆண்டிப்பட்டி – 04546-242234
உத்தமபாளையம் – 04554-265226
போடிநாயக்கனூர்- 04546-280124
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

நெல்லை மக்களே, உங்க VOTER ID எண் தெரியாதா? இதை யாருட்ட கேக்கன்னு தெரியலையா?? VOTER ID எண் இல்லாமல் கண்டுபிடிக்க வழி இருக்கு! இங்கு <
Sorry, no posts matched your criteria.