Tamilnadu

News December 5, 2025

கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு!

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று டிச.5 ஆம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி ஶ்ரீ முஷ்ணம் 7.3 மில்லி மீட்டர், எஸ்ஆர்சி குடிதாங்கி 6 மில்லி மீட்டர், தொழுதூர் 5 மில்லி மீட்டர், விருத்தாசலம் 4.2 மில்லி மீட்டர், காட்டுமன்னார்கோவில், குப்பநத்தம் தலா 3 மில்லி மீட்டர், லால்பேட்டை 2 மில்லி மீட்டர், வானமாதேவி 1.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

News December 5, 2025

திருவள்ளூரில் நாளை விடுமுறை இல்லை!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் முழு வேலை நாளாக செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது கடந்த 2 ஆம் தேதி மழைக்காக விடுமுறை விடப்பட்டதன் ஈடு செய் பணி நாளாக கருதப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 5, 2025

கிருஷ்ணகிரியில் புளியமரங்கள் வெட்டுவதை எதிர்த்து போராட்டம்!

image

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை–புலியூர் சாலை அகலப்படுத்தும் பணியின் பெயரில் 50 ஆண்டுகள் பழமையான புளியமரங்கள் நூற்றுக்கணக்காக முறைகேடாக வெட்டப்படுவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இதனை குறைந்த மதிப்பில் டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதை எதிர்த்து வரும் டிச.8ஆம் தேதி நெடுஞ்சாலைத் துறைக்கு எதிராக போராட்டம் நடைபெற உள்ளது. என இன்று (டிச.5) அறிவிக்கப்பட்டது.

News December 5, 2025

விழுப்புரம் முழுவதும் போலீசார் திடீர் சோதனை!

image

விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம் & விக்கிரவாண்டி ஆகிய உட்கோட்டங்களில் இன்று (டிச.5) மறைமுக நாசவேலை தடுப்பு பிரிவினர், காவலர்கள் & மோப்பநாய் ராணி உதவியுடன். பின் பொதுமக்கள் அதிகம் போடக்கூடிய இடங்கள், நகர்ப்புற முக்கிய இடங்கள் வழிபாட்டுத் தலங்கள் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், இது நாளை டிச.6(பாபர் மசூதி விவகாரம்) தினத்தை முன்னிட்டு நடைபெறுவதாக கூறப்படுகிறது.

News December 5, 2025

தருமபுரி இளைஞர்களுக்கு இலவச தொழில் பயிற்சி!

image

தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள இந்தியன் வங்கியில் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் (RSETI), வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சிகளை வழங்குகிறது. இதில் சிசிடிவி சர்வீஸ், கால்நடை & மீன் வளர்ப்பு போன்ற பயிற்சிகள் உள்ளன. உணவு, சீருடை & பயிற்சி அனைத்தும் இலவசம். விண்ணப்பிக்க கடைசி நாள் டிச-10. மேலும் தகவல்களுக்கு: 04342230511, 6383147667 என்ற எண்ணை அணுகவும்.

News December 5, 2025

கள்ளக்குறிச்சி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 5, 2025

சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

image

குழந்தைத் திருமணங்கள் சட்டரீதியாக தண்டனைக்குரிய குற்றம் என்பதை வலியுறுத்தி, சேலம் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு படத்தை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் உரிமைகள் மற்றும் எதிர்காலத்தை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும், குழந்தைத் திருமண தகவல் தெரிந்தவுடன் காவல்துறையையோ அல்லது 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 5, 2025

சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறும் தேதி அறிவிப்பு

image

ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் ஜனவரி மாதம் புத்தகக் கண்காட்சி நடைபெறும்.நந்தனம் YMCA மைதானத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் & பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி), தமிழக அரசு உதவியுடன் நடத்தி வருகிறது. அதன்படி, புத்தகக் காட்சி வரும் ஜன.7-ஜன.19 வரை 12 நாட்கள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த முறை 900 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

News December 5, 2025

ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி – அரசு மானியம்

image

கோவில்பட்டி, எட்டையாபுரம் வட்டார பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். பருத்திப் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்படுகிறது. இந்தபூச்சிக்கொல்லி மருந்தை ட்ரோன் மூலம் அடிப்பது மூலம் செயல் திறன், கூலி, நேரம் ஆகியவை மிச்சமாகிறது. எனவே டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்க அரசு ஒரு ஹெக்டருக்கு ரூ.1250 பின்னேற்பு மானியமாக வழங்குகிறது என வேளாண் துறை தெரிவித்துள்ளது.

News December 5, 2025

தேனி: போலீசாரால் 2088.180 லிட்டர் மது அழிப்பு

image

தேனி மாவட்ட மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவினரால் கடந்த 2017 முதல் 2024 வரையான காலங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் சட்ட விரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர்களின் மீது 1231 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 11,601 மதுபான பாட்டில்கள் (2088.180 லிட்டர்) மதிப்பு கைப்பற்றப்பட்டது. அதனை இன்று போலீசார் அரசின் Buy Back Scheme விதிமுறைகளின்படி முறையாக கொட்டி அழித்தனர்.

error: Content is protected !!