India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதையொட்டி விழாக்கோலம் பூண்டுள்ளது. இதையடுத்து அருணாசலேஸ்வரர் கோவில் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளதையும் கோவிலில் உள்ள நவகோபுரங்கள் மின்னொளியில் ஜொலிப்பதையும் படத்தில் காணலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், சூலக்கல் மேற்கு வீதி சேர்ந்த ஜீவஹரிஹரன் (18) என்பவர் படித்து வந்தார். அவர் பைக்கில், கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், மலுமிச்சம்பட்டி சர்வீஸ் சாலையில், ஒத்தக்கால்மண்டபம் நோக்கி சென்றார். எதிரே வந்த லாரி பைக் மீது மோதியதில் ஜீவஹரிஹரன் படுகாயமடைந்து உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து செட்டிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சிவகாசி அருகே செவலுாரை சேர்ந்தவர் லட்சுமி 64. இவரது மகன் பாலமுருகனுக்கும் 39, அதே பகுதியை சேர்ந்த பஞ்சவர்ணம் மகள் முருகேஸ்வரிக்கும் 39, 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டதில் முருகேஸ்வரி கோபித்து தாய் வீட்டிற்கு சென்றார். இதனை தொடர்ந்து ஏற்பட்ட சண்டையில் முருகேஸ்வரியின் தம்பி சங்கிலி பாண்டி 36, லட்சுமியை கட்டையால் அடித்ததில் நேற்று அதிகாலை இறந்தார்.

திருவள்ளூர்: சென்னை, கிண்டி பெண்கள் ஐடிஐ வளாகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை(நவ.21) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமல் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய 9499966026 எனும் எண்ணை அழைக்கலாம் அல்லது <

காஞ்சி: சென்னை, கிண்டி பெண்கள் ஐடிஐ வளாகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை(நவ.21) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமல் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய 9499966026 எனும் எண்ணை அழைக்கலாம் அல்லது <

பரமக்குடி அண்ணாநகரை சேர்ந்த 22 வயதான இளைஞர் சபரிவாசன் தனது நண்பர்கள் இருவர் என மூவருடன் ஒரே டூவிலரில் பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் இருந்து மணி நகர் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த பேருந்து மோதியதில் இளைஞர் சபரிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பரமக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி சமயபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எஸ்.ஆர்.எம். மருத்துவமனை அருகே 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது தொடர்ந்து குண்டர் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், நேற்று மங்கிலால் என்பவரும் திருச்சி எஸ்.பி பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிலி பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ரகு (40), நவம்பர் 10 ஆம் தேதி பணிக்கு சென்ற நிலையில் வீடு திரும்பாததால் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடுதல் நடத்தி வந்தனர் 19.11.2025 மாலை வெங்கிலி அருகே பாலாற்றில் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்ததால் போலீசார் சென்று சடலத்தை மீட்டனர். ரகு தானாக தவறி ஆற்றில் விழுந்தாரா அல்லது வேறு காரணமா என விசாரணை நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சிவராஜ்.இவரது 21 வயது மகளான லோகேஸ்வரி என்ற பெண் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பெண் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி: சேரம்பாடியில் இருந்து பந்தலூரை நோக்கி காரை ஓட்டி சென்ற ஒரு முதியவர், கட்டுப்பாட்டை இழந்ததால், அருகில் இருந்த புதரில் கார் தலைகீழாக கவிழ்ந்தது. வாகனம் விழுந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் முதியவரை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட அவர் பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.