India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தினை இன்று (நவ 25) வெளியிட்டுள்ளது. அதில், “வாகனங்களை ஓட்டும்போது மொபைலில் பேச வேண்டாம்” என்றும் “உங்கள் வாழ்க்கை உங்களை விட்டு போகாமல் இருக்கட்டும் என்றும்” பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பெரும் அளவு விபத்துகள் குறையும் தங்கள் உயிரும் பாதுகாக்கப்படும் என வெளியிட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, கல்லூரிப் படிப்பிற்காக கல்விக்கடன் வேண்டி விண்ணப்பிப்பதற்காக, மாணவியர்கள் சிறப்பு கடன் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின் படி வரும் 26.11.2025 அன்று காலை 10.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்வு கூட்டரங்கில் நடைபெறுகிறது. கல்விக்கடன் வாங்க விருப்பம் உள்ள மாணவ மாணவியர் முகாமில் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (நவம்பர் 25) காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மற்றும் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகளை உடனடியாக விரைவாக முடிக்குமாறு பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) பணிகள் நிர்ணயம் செய்த காலத்திற்குள் முடிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, சிறப்பாக பணிபுரிந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்/ வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வை அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான எம்.எஸ்.பிரசாந்த் இன்று (25.11.2025) பாராட்டுக் கடிதங்களை வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 109 மதுபான சில்லறை விற்பனை கடைகளில் சென்ன உயர்நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மது நுகர்வோர் விட்டுச்செல்லும் காலி மதுபான புட்டிகள் காரணமாக ஆங்காங்கே உடைந்து கிடந்து பொது மக்களுக்கும், வன விலங்குகளுக்கும் சுற்று சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கும் பொருட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நவ.26ம் தேதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

புதுவை முதல்வர் ரங்கசாமி நேற்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “டாக்காவில் நடைபெற்ற மகளிர் கபடி உலகக் கோப்பை- 2025 இறுதிப் போட்டியில், இந்திய மகளிர் கபடி அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. சர்வதேச அளவிலான கபடிப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பெற்றுள்ள வெற்றி – பெண்களின் சக்தி, தைரியம், திறமை என்ன என்பதை உலகுக்கு மீண்டும் நிருபித்துள்ளது’’ என அவர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <

தூத்துக்குடி மக்களே உங்க போனுக்கு தேவை இல்லாத லோன், கிரெடிட் கார்டு வேண்டுமா, இடம் விற்பனைன்னு போன் வருதா? இதை மத்திய அரசின் TRAI DND 3.0(Do Not Disturb) என்ற செயலியின் மூலம் தடுக்கலாம். <

மதுரை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் ஆட்சியர் பிரவீன் குமார் தலைமையில் நவம்பர் 27 காலை 10 மணிக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடக்கிறது. மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். விவசாயிகள் தங்கள் குறைகளை நேரிலும் மனுக்களாகவும் ஆட்சியரிடம் தெரிவித்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.