India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதார், சாதிச் சான்று உள்ளிட்ட சேவைகளை பழங்குடியின மக்கள் பெறும் வகையில் SC/ST நலத்துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் ஆதார் பெற வந்த இருளர் மக்களிடம், ஆதார் எடுக்க பிறப்பு சான்றிதழ் தேவை என கூற, ஆதார் எடுக்கவில்லை. இதனால், தங்களுக்கு பிறப்பு சான்றிதழ் இல்லாமல் ஆதார் வழங்க கோரி, தர்ணாவில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே பேராசிரியர் க.மோகன்காந்தி தலைமையில் நடைபெற்ற கள ஆய்வில் விஜயநகர காலத்தைச் சேர்ந்த இரு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த கற்கள், 500 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த போர்களை குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், போரில் மரணமடைந்த வீரனின் மனைவி, கணவனோடு உடன்கட்டை ஏறியது போல் உள்ளதாக தெரிவித்துள்ளார். இவற்றைத் தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

கூ.கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜேந்திரன் நம்பர் 21 ஆம் தேதி விவசாய நிலத்திற்கு செல்வதற்காக நரிஓடை தரைபாலம் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் வந்த சேந்தநாடு பகுதியை சேர்ந்த மண்டிப் ஒட்டி வந்த பைக் மோதியதில் ராஜேந்திரன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவரது மகன் ராஜேஷ் அளித்த புகாரில் திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம்: திருவக்கரை கிராமத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக ஒன்றிய செயலாளர் திருவக்கரை பாஸ்கரன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். கடந்த சில மாதங்களாக, தன்னை மிரட்டி, தனிமையில் இருந்து, அதை வீடியோ எடுத்ததாக கோட்டக்குப்பம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது பாஸ்கரனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்யவும், சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் இன்று (நவ.22) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே இந்த வாய்ப்பினை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரம் உப்புகுளம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை விற்பனை செய்வதாக விஷ்ணு காஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் சோதனை செய்த போலீசார், விஷ்வா, சூர்யா ஆகிய இருவரையும் நேற்று (நவ.22) விஷ்ணு காஞ்சி போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2.5 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கீழையூர் போலீஸ் சரகம் திருப்பூண்டி பெரிய கடை தெரு பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (73). இவரது மனைவி பாஸ்கரவள்ளி (65) உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால், திருநாவுக்கரசு மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருநாவுக்கரசு அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கீழையூர் போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

நரிக்குடி பள்ளிவாசல் அருகே வசிப்பவர் அரவிந்தன். இவரது மனைவி கெட்சியா (எ ) அஞ்சலி 22. உடல்நிலை சரியில்லாததால் நேற்று பள்ளிவாசலுக்கு மந்திரிக்க சென்றார். அங்கு அசரத்தாக அப்துல் அஜீஸ் 34, இருந்தார். மந்திரித்த போது திடீரென அஞ்சலியை கத்தியால் கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குத்தினார். அலறியபடி வெளியில் ஓடி வந்தார். அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்துல் அஜீஸை போலீசார் விசாரிகின்றனர்.

போச்சம்பள்ளி மடத்தானூரில் இருந்து நேற்று (நவ.21) இரவு மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி வடமலம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது மின்சார கம்பத்தின் மீது மோதி, மின் ஒயர் அறுந்தது. மின் ஒயர் அறுந்து விழுந்த நிலையில், லாரிக்கு பின்னால் டூவீலரில் தனது கணவருடன் சென்ற விஜி என்பவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே களியல் சிறுதோட்டம் பகுதியை சேர்ந்தவர் மத்திய பாதுகாப்பு படை (CSIF) வீரர் சுனில் ராஜ் (39). இவருக்கும் மனைவி சிவராணிக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், அவரது மனைவி வீட்டில் சென்று பார்த்த போது சுனில் ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.