India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பிற அரசியல் கட்சிகள், கூட்டத்தை கூட்ட பணம் உள்ளிட்டவற்றை செலவிடும் நேரத்தில், தவெகவுக்கு கூட்டத்தை குறைப்பதே சவாலாக உள்ளது என காங்., முக்கிய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. இன்று திமுகவுடன் காங்., கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள நிலையில், விஜய்க்கு ஆதரவளிக்கும் வகையிலான இப்பதிவு, சீட் பேரத்தை அதிகரிப்பதற்காகவே என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன. அனைத்து பகுதிகளிலும் படம் பெரிய விலைக்கு விற்பனையாகி இருக்கும் நிலையில், ஒட்டுமொத்தமாக ₹500 கோடியை கடந்தால் மட்டும் ஹிட் ஸ்டேட்டஸை அடைய முடியும். இதில் தமிழ்நாட்டில் ₹225 கோடியையும், வெளிநாடுகளில் ₹215 கோடியையும் வசூலிக்க வேண்டும் என குறிப்பிடப்படுகிறது. இவ்வளோ பெரிய வசூலை அள்ளி, வெற்றி படமாக அமையுமா ‘ஜனநாயகன்’?

பிஹார் சீட் ஷேரிங்கில் நடந்த பிரச்னையால் IND கூட்டணியிலிருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்சா விலக உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த JMM நிர்வாகி குணால் சாரங், ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க முடியாது என தெரிந்ததால்தான் பாஜக புரளிகளை கிளப்பிவிடுவதாக விளக்கமளித்துள்ளார். மேலும், ஜார்க்கண்டில் ஆளுங்கட்சியாக இருக்கும் JMM எப்போதும் பாஜகவுக்கு அடிபணியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ODI-ல் இந்திய அணி இரண்டு ஓப்பனர்களையும் இழந்தது. கடந்த போட்டியில் அரைசதம் அடித்த ரோகித் 14 ரன்களுக்கும், ஜெய்ஸ்வால் 22 ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். கடந்த போட்டியில் சதம் அடித்த கோலி, ருதுராஜூடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டு வருகிறார். 12 ஓவருக்கு 77/2 என்ற நிலையில் இந்தியா விளையாடி வருகிறது.

சென்னை போன்ற பெருநகரங்களில் அட்வான்ஸ் தொகையை கேட்டாலே கிறுகிறுக்கும். இந்நிலையில், வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025-ன் படி இனி 2 மாத வாடகையை அட்வான்ஸாக கொடுத்தாலே போதுமானது. அதேபோல், குடியேறிய 12 மாதங்களுக்கு பிறகே வாடகையை உயர்த்த வேண்டும். வாடகை வீட்டில் பழுது ஏற்பட்டால், அதனை 30 நாள்களுக்குள் உரிமையாளர் சரி செய்து கொடுக்க வேண்டும். இந்த விதிகள் விரைவில் அமலுக்கு வரவுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் கருணாநிதியை Role Model-ஆக கருத வேண்டும் என CM ஸ்டாலின் கூறியுள்ளார். ஒரு விபத்துக்கு பிறகு கருணாநிதிக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், அதை பொருட்படுத்தாமல் வரலாற்று சிறப்புமிக்க பல அறிக்கைகளை அவர் வெளியிட்டார் என பகிர்ந்துள்ளார். மேலும், கருணாநிதி வீல் சேரிலேயே அமர்ந்திருந்த போதிலும் பம்பரமாக சுழன்று மக்களுக்காக பணி செய்தார் எனவும் அவர் புகழ்ந்துள்ளார்.

போஸ்ட் ஆபீஸின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஒவ்வொரு மாதமும் ₹20,500 வரை வழங்குகிறது. இத்திட்டத்தில் ₹30 லட்சத்தை முதலீடு செய்தால், 5 ஆண்டுகள் கழித்து 8.2% வட்டியுடன் ஆண்டுக்கு ₹2,46,000 Interest கிடைக்கும். இதை 12-ஆக பிரித்தால், ஒவ்வொரு மாதமும் ₹20,500 வரை ஓய்வூதியமாக பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதில் சேரமுடியும். அருகில் இருக்கும் போஸ்ட் ஆபீஸை அணுகுங்கள். SHARE.

விவசாய அணியின் மாநிலத் துணைத் தலைவர் S.ராஜசேகரை கட்சியில் இருந்து நயினார் அதிரடியாக நீக்கியுள்ளார். ராஜசேகர் மீது அடுக்கடுக்கான பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாலும், கட்சி அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்படுவதாக நயினார் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து, இந்தாண்டு பொங்கலுக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரசு ₹5000 வழங்க இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால், அரசு தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், பொங்கலுக்கு ₹5,000 வழங்க அரசு முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ள நயினார், பொங்கல் பரிசுக்காக கூட்டுறவு வங்கிகளை அடமானம் வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

உலகளவில் டாப் டிரெண்டிங் டெஸ்டினேஷன் பட்டியலில் (2026) இமயமலை முதல் இடத்தை பிடித்துள்ளது. திரில், இயற்கை, கலாசாரம், ஆன்மிகம் என அனைத்தும் கலந்த இடமாக இமயமலை இருப்பதால் டிராவலர்ஸ் இங்கு வருவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு சிட்டிக்கு டூர் செல்ல வேண்டும் என்ற நிலை மாறி, இயற்கை வளமிக்க இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற மனநிலைக்கு டிராவலர்ஸ் வந்திருப்பதை இது காட்டுகிறது. உங்களுக்கு இமயமலை போக ஆசையா?
Sorry, no posts matched your criteria.