India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விஜய் பொதுக்கூட்டத்தையொட்டி புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என SM-ல் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், பள்ளி நேரம் தொடங்கிய பின் விஜய் வரவும், பள்ளி முடிவதற்கு முன்பே நிகழ்ச்சியை முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக புதுச்சேரி டிஐஜி சத்தியசுந்தரம் அறிவித்துள்ளார். அதனால், நாளை விடுமுறை இல்லை. அதேநேரம், பொதுக்கூட்ட பகுதியில் ஒரேயொரு தனியார் பள்ளிக்கு நாளை விடுமுறை.

70-20-10 என்ற முறையில்தான் ப்ரோமோஷனுக்காக பரீட்சை நடக்கிறது. இதில் 70% பணி அனுபவம், 20% புதிய ஆலோசனைகளை வழங்குவது, 10% பாடங்கள் வழி கற்கும் திறன் போன்றவை அடங்கும். இதுமட்டுமல்லாமல், ப்ராஜெக்ட்டை கையாளுதல், அணியை நிர்வகித்தல், ஜூனியருக்கு ஆலோசனை&பயிற்சி வழங்குதல், நெருக்கடி நேரத்தில் எடுக்கும் முடிவு போன்றவற்றில் நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதையும் கருத்தில் கொள்கிறார்கள்.

டெல்டா, தென் மாவட்டங்களில் ஒரு வாரமாக நீடித்த மழை சற்று ஓய்ந்துள்ளது. இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் டிச.14 வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் நாளை(டிச.9) மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், காலையில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகம் செல்வோர் கவனமாக இருங்கள்!

டிச.8.. இந்நாளில் பாலிவுட் ஹீ-மேன் தர்மேந்திராவின் மும்பை வீடு ஆரவாரத்தால் நிரம்பி இருக்கும். ஆனால், அண்மையில் அவர் மறைந்ததால் மொத்த காட்சியும் மாறிவிட்டது. தர்மேந்திராவின் பிறந்த நாளான இன்று, அவரது இல்லமும், குடும்பத்தினரின் உள்ளமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. ‘மிகுந்த வலியுடன் உங்களை மிஸ் பண்ணுகிறேன் அப்பா. உங்களை பத்திரமாக இதயத்தில் வைத்திருப்பேன்’ என மகள் ஈஷா உருக்கமுடன் SM-ல் பதிவிட்டுள்ளார்.

கொரோனாவுக்கு பிறகு இளம் வயதினருக்கும் இதய நாள தளர்ச்சி(Vascular Dysfunction) ஏற்படுவது TN அரசு டாக்டர்கள் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. இது, இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள் வழக்கத்தை காட்டிலும் ஒன்றரை மடங்கு வீங்கும் பாதிப்பாகும். 2020 – 2023 வரை 11,420 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இவை தெரியவந்துள்ளன. இதுவே இளம் வயதினருக்கும் மாரடைப்பு அதிகரிக்க காரணமாக அமைவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

முக்கிய பிரச்னைகளை திசை திருப்பவே வந்தே மாதரம் பாடல் தொடர்பான <<18503037>>விவாதத்தை மோடி<<>> கையில் எடுத்திருப்பதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடக்கும் சிறப்பு விவாதத்தில் பங்கேற்ற அவர், மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் மத்திய அரசிடம் ஒரு தீர்வும் இல்லை என சாடியுள்ளார். மேலும் கடந்த காலத்தை பற்றி மட்டுமே பாஜக பேசி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையையொட்டி, ஸ்பெஷல் ரயில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மும்பை – திருவனந்தபுரம் ரயில், டிச.18- ஜன.8 வரை (வியாழன் மட்டும்) இயக்கப்படும். மறுமார்க்கத்தில் டிச.20 – ஜன.10 வரை (சனி மட்டும்) இயக்கப்பட உள்ளது. அதேபோல், மைசூரு – தூத்துக்குடி ரயில் டிச.23, டிச.27 ஆகிய நாள்களில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில், டிச.24, டிச.28-ல் ஓடும். பிளான் பண்ணிக்கோங்க நண்பர்களே!

குழந்தைகளுக்கு சாப்பாடு பிடிக்கிறதோ இல்லையோ, நொறுக்குத் தீனி சாப்பிட ரொம்ப பிடிக்கும். அவர்கள் அடம்பிடித்து கேட்பதால் பெற்றோர்களும் சிப்ஸ், பிஸ்கெட், சாக்லேட், பர்கர் என உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களை வாங்கி கொடுத்துவிடுவர். இதனால் அவர்களுக்கு இளம்வயதிலேயே சுகர், உடற்பருமன் பிரச்னைகள் வருகிறது. எனவே, இதற்கு பதிலாக பழங்கள், நட்ஸ், சோளம் உள்ளிட்ட ஹெல்தியான பொருள்களை கொடுங்கள். SHARE.

FIDE Circuit-ல் 115 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த பிரக்ஞானந்தா, கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தேர்வாகியுள்ளார். கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெறும் நபர் உலக செஸ் சாம்பியன் பட்டத்திற்கு போட்டியிடுவார். இந்த ஆண்டு டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ், லண்டன் செஸ் கிளாசிக் ஓபன் உள்ளிட்ட தொடர்களில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

கொங்கு மண்டலத்தில் வாக்கு வங்கியை தக்க வைக்க அதிமுகவும், எப்படியாவது செல்வாக்கு பெற வேண்டும் என திமுகவும் போட்டிப்போட்டு களப்பணியாற்றி வருகின்றன. இவர்களுக்கு அதிர்ச்சியளிக்க, விஜய் திட்டம் தீட்டி வருகிறார். டிச.16 அன்று ஈரோட்டில் நடக்கும் தவெக பொதுக்கூட்டம் அதற்கு அச்சாரமிடும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செங்கோட்டையனின் மூலம் கொங்கு மண்டலத்தில் தவெகவை பலப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளாராம்.
Sorry, no posts matched your criteria.