India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

‘இந்திய மக்களின் ஒற்றுமை’ என சொல்லாமல் ‘இந்து சமுதாயத்தின் ஒற்றுமை’ என அமித்ஷா சொல்வது கவலையளிப்பதாக சீமான் பேசியுள்ளார். நாட்டை வழிநடத்தும் அரசு, இந்தியர்களின் ஒருமைப்பாட்டை பற்றி பேசவேண்டும் என்ற அவர், இந்துவுக்கு ஒரு கனவு, இந்தியாவுக்கு ஒரு கனவு என்று பிரித்து பேசமுடியாது என தெரிவித்துள்ளார். மேலும், அம்பேத்கர் நினைவு நாளில் பாஜக நடத்தும் அமைதி பேரணி கூட சந்தேகங்களை கிளப்புவதாக கூறியுள்ளார்.

SBI வங்கியில் காலியாக உள்ள 996 Specialist Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளம்: ₹51,000. வயது வரம்பு: 20 – 35 வரை. தேர்வு: Personal / Telephonic / Video interview. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.23. விண்ணப்பிக்க இங்கே <

ஜெ., நினைவிடத்தில் 4 பிரிவுகளாக அதிமுகவினர் மரியாதை செலுத்தியது வேதனை அளிப்பதாக பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் EPS செயல்படுவதாகவும், OPS எங்கு சென்றாலும் இறுதியில் பாஜகவில்தான் சேருவார் என்றும் சாடினார். மேலும், தற்போது அதிமுகவை விட திமுக, தவெகவே முன்னிலையில் இருக்கிறது என்றும் 2026-ல் DMK – TVK இடையேதான் போட்டி எனவும் தெரிவித்துள்ளார்.

வீரம், வேதாளம், விஸ்வாசம் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்துள்ள அஜித் – சிறுத்தை சிவா காம்போ மீண்டும் இணைந்துள்ளது. தொடர்ந்து அஜித்தின் ‘Good Book’-ல் இருக்கும் சிறுத்தை சிவா, அவருக்கு ஒரு விளம்பர படத்தை இயக்கவுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘Campa Cola’ விளம்பரத்தில் அஜித் நடிக்க அதைதான் சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறாராம். இந்த விளம்பரம் விரைவில் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.

புதுச்சேரியிலும் தன்னுடைய அரசியல் ஆட்டத்தை ஆடிவருகிறது தவெக. இந்நிலையில், ஆதவ், புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் புதுச்சேரியில் போட்டியிட திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி உப்பளத்தில் ஆனந்த் போட்டியிடலாம் என பேசப்படும் நிலையில், ஆதவ் எத்தொகுதியை குறிவைக்கிறார் என்பதை பற்றிய தகவல்கள் கசியவில்லை. ஆனால் சார்லஸ் மார்ட்டினுக்கு எதிராக இவர் களமிறங்கலாம் என கூறப்படுகிறது.

நறுக்கிய காய்கறி மற்றும் பழங்களை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். ஃபிரிட்ஜின் கூலிங்கான நிலை, கிருமிகள் பரவவும், அவை வெகு நேரம் உயிர்வாழ்வதற்கான உகந்த சூழலையும் அளிக்கிறது. எனவே நறுக்கி வைத்திருக்கும் பழங்களில் நிச்சயமாக கிருமிகள் பரவியிருக்கும். இதை நீங்கள் சாப்பிட்டால், தொற்று ஏற்பட்டு, ஃபீவர், ஃபுட் பாய்சன் கூட ஆகலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். விழிப்புணர்வுக்காக அனைவருக்கும் SHARE IT.

<<18492944>>கோவா தீ விபத்து<<>> தொடர்பாக, விடுதி நிர்வாகத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், தீ பாதுகாப்பு விதிகளை இரவு விடுதி பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, பாதுகாப்பு விதிமீறல்களை கண்டுகொள்ளாமல் அனுமதி அளித்த 3 அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சம்பவம் குறித்த முழு அறிக்கையை விசாரணைக்குழு ஒருவாரத்தில் சமர்ப்பிக்கும் என CM பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

RBI ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்ததை தொடர்ந்து, பல வங்கிகள் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளன. அதன்படி, PNB 8.35%-ல் இருந்து 8.10%ஆகவும், Bank of Baroda 8.15%-ல் இருந்து 7.90% ஆகவும், Bank of India (BOI) 8.35%-ல் இருந்து 8.10%-ஆகவும் குறைத்துள்ளன. இதனால், வீடு, கார், தனிநபர் கடனுக்கான வட்டி வெகுவாக குறைந்துள்ளது. இது கடன் வாங்கிய நடுத்தர வர்க்கத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து தவெகவிற்கு சென்றதற்கு EPS தான் காரணம் என TTV குற்றம் சாட்டியுள்ளார். செங்கோட்டையன் பொதுச்செயலாளர் பதவியோ, CM பதவியோ கேட்கவில்லை. ஒற்றுமையாக இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என வலியுறுத்தினார். ஆனால், துரோக சக்தியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரே KAS, வேறு கட்சிக்கு சென்றுள்ளார் எனக் கூறிய அவர், TVK கூட்டங்களை செங்கோட்டையன் சிறப்பாக வழிநடத்துவார் என்றார்.

அதிக சத்தத்துடன் அலாரம் அடித்தும் டைம் ஆச்சு என பதற்றத்துடன் எழுவது இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். திடீரென இதயத்துடிப்பும் ரத்த அழுத்தமும் அதிகரிப்பதால், இதயத்திற்கு அதிக சுமை ஏற்பட்டு, ரத்த நாளங்களில் சுருக்கம், ரத்த ஓட்டம் குறைவது போன்ற பிரச்னைகள் வரலாம். எனவே, மெல்லிய சத்தம் கொண்ட அலாரமை 10 நிமிடங்கள் முன்பு வைத்து பழகுங்க. இது கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கும்.
Sorry, no posts matched your criteria.