India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சால்ட் லேக் மைதானத்துக்கு வந்த மெஸ்ஸி, கொஞ்ச நேரத்திலேயே புறப்பட்டுவிட்டார். ஏற்பாட்டாளர்களே அவரை சூழ்ந்து நின்றதால் அவரை பார்க்க முடியாமல் கடுப்பான ரசிகர்கள் <<18551245>>மைதானத்தை சூறையாடினர்.<<>> இந்த நிகழ்வின் நிர்வாக குறைபாடை கண்டு அதிர்ச்சியடைந்ததாக மே.வங்க CM மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்காக மெஸ்ஸி மற்றும் ரசிகர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும், இதுபற்றி விசாரணை நடத்த குழு அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள மெஸ்ஸியை காண ரசிகர்களை போலவே, பல நட்சத்திரங்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இன்று காலை கொல்கத்தா சென்ற அவரை நடிகர் ஷாருக்கான் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவரது மகன், ஆர்யன் கான் மெஸ்ஸியுடன் போட்டோ எடுத்து கொண்டார். ஒரே ஃப்ரேமில் ஷாருக்கானும், மெஸ்ஸியும் இருப்பதை ரசிகர்கள், ‘2 G.O.A.T’s in one frame’ என கமெண்ட் செய்து வைரலாக்கியுள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. குறிப்பாக, டெல்டா, தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வரும் நாள்களில் அதிகாலையில் பனியின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் IMD தெரிவித்துள்ளது. அதனால், கவனமாக இருங்கள் நண்பர்களே!

நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் ‘ஜெயிலர் 2′ படத்தில் சந்தானம் நடிக்கிறார் என்ற பேச்சு அடிபடுகிறது. ஆனால், அதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. சந்தானமும் அமைதியாகவே இருக்கிறார். இந்த நிலையில்தான், அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘எதுவாக இருந்தாலும் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். அது என்ன கள்ளக்காதலா? மறைத்து செய்ய, படம் தானே, சொல்லிட்டுதான் செய்வேன்’ என பதிலளித்தார்.

நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் மருத்துவ குணம் நிறைந்த பொருள் மிளகு. இதில், பப்பாளி விதைகளை சேர்த்து கலப்படம் செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஒரிஜினல் மிளகை கண்டுபிடிப்பது எப்படி? *ஒரு கிளாஸ் தண்ணீரில் மிளகை போட்டால், கலப்படமில்லாத மிளகு தண்ணீரில் மூழ்கிவிடும், பப்பாளி விதைகள் எனில் அவை மிதக்கும் *பப்பாளி விதையில் ஒருவித கசப்பு வாசனை வரும், ஆனால் மிளகுக்கு தனித்துவமான கார வாசனை உண்டு.

இந்தியாவின் மாநில பொருளாதார வளர்ச்சியில் (GSDP) 16% உடன் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இந்நிலையில், பெருமாநிலங்களை பின்னுக்கு தள்ளி தமிழகம் வானுயர் சாதனையை படைத்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லாமலேயே இந்த சாதனையை செய்துள்ளதாக கூறிய அவர், 2021-2025 நிதியாண்டுகளில் மட்டும் தமிழகத்தின் பொருளாதாரம் ₹10.5 லட்சம் கோடிக்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.

நடிகை ராஜேஸ்வரி மறைவுக்கு அவரின் நெருங்கிய தோழியும், நடிகையுமான மீனா செல்லமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜேஸ்வரி தன்னுடன் சிரித்த முகத்துடன் எடுத்த கடைசி போட்டோவை பதிவிட்டு, ‘நான் ஒரு ஆளு 10 ஆம்பளைக்கு சமம்னு சொல்லுவியே!, ஏன் இப்படி தற்*லை பண்ணுன ராஜி!, ஆசை ஆசையா வளர்த்த பொண்ண பத்திகூட யோசிக்காம இந்த முடிவு எடுத்திட்டியே, மனசு வலிக்குது ராஜி என உருக்கமாக இரங்கல் கூறியுள்ளார்.

டெக்னாலஜி என்றும் வளர்ச்சியடைக்கூடியதே. ஒரு காலத்தில் அனைவரது வீட்டிலும் இருந்த ரேடியோ இன்று அட்ரஸே இல்லாமல் ஆகிவிட்டன. அப்படித்தான் தற்போது நாம் யூஸ் பண்ணும் பல விஷயங்களும் டெக்னாலஜியின் வளர்ச்சியால் இன்னும் 5 ஆண்டுகளில் முற்றிலுமாக அழிந்துவிடலாம். அவை என்னென்னவென்று தெரிஞ்சிக்க போட்டோஸை வலது பக்கம் Swipe செய்து பார்க்கவும். காலப்போக்கில் இன்னும் எவையெல்லாம் மறையும் என நினைக்கிறீங்க?

அரசியல் வியூகங்களில் அனுபவம் மிக்கவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என TTV தினகரனுக்கு அண்ணாமலை வாழ்த்து கூறியுள்ளார். அத்துடன் மறைந்த CM ஜெயலலிதாவின் வலதுகரமாக திகழ்ந்தவர் டிடிவி எனவும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார். இதற்கு அதிமுகவினர் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருவதால் மீண்டும் மோதல் போக்கு உருவாகியுள்ளது. அதிமுக, ஜெ.,-வுக்கு துரோகம் செய்தவர் TTV என EPS விமர்சித்து வருவது கவனிக்கத்தக்கது.

அனைத்துக் கட்சிகளும் எங்களுடன் தோழமையாக உள்ளன. ஆனால், கூட்டணி என கூற முடியாது என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகள், வேட்பாளர்கள் யார் என்ற முழு விவரமும் ஜன.9-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரின் இந்த பேச்சின் மூலம் கடைசி நேரத்தில் கூட கூட்டணி கணக்கு மாற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.