India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

TN அரசு அறிவித்த ஓய்வூதியத் திட்டத்தை ‘ஏமாற்று வேலை’ என கூறிய நயினாருக்கு CPI(M) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். ஓய்வூதியத் திட்டத்தை ஒழித்துக்கட்டி, ஆசிரியர், அரசு ஊழியர்களை நடுத்தெருவில் நிறுத்தியது BJP ஆட்சிதான் என்று சாடிய அவர், நாடு முழுவதும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை BJP அமல்படுத்தும் என்று கூறும் தைரியம் நயினாருக்கு இருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

பிக்பாஸில் பார்வதி, கம்ருதீனுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டதால் இந்த வாரம் எவிக்ஷன் இருக்காது என பேசப்பட்டது. ஆனால், ஷோ முடிய இன்னும் 2 வாரங்களே இருப்பதால் எவிக்ஷனை திட்டமிட்டுள்ளனர். வீட்டில் உள்ள அனைவரும் நாமினேஷனில் இருக்கும் நிலையில், அரோரா மட்டும் TTF வென்று எவிக்ஷனிலிருந்து தப்பித்துள்ளார். இந்நிலையில், குறைந்த வாக்குகள் பெற்றதால் சுபிக்ஷா வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

LIC-யில் நீங்கள் எடுத்த தனிநபர் காப்பீட்டுக்கான பிரீமியத்தை கட்டாமல் விட்டுட்டீங்களா? இதனை புதுப்பிக்க சலுகைகளோடு புதிய திட்டத்தை 2 மாதத்திற்கு அந்நிறுவனம் அமல்படுத்தியுள்ளது. அதன்படி அபராத கட்டணத்தில் 30% (அ) அதிகபட்சம் ₹5,000 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. மார்ச் 2-ம் தேதி வரை அமலில் இருக்கும் இந்த தள்ளுபடியால் பல லட்சம் பேர் பலனடைவார்கள் என LIC தெரிவித்துள்ளது. அனைவரும் இதை SHARE பண்ணுங்க.

விஜய் ஹசாரே தொடரில் குறைந்த இன்னிங்ஸில் 100 சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற பெருமையை ருதுராஜ் கெய்க்வாட் படைத்துள்ளார். மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் அவர், தற்போதுவரை 57 போட்டிகளில் 105 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அதே நேரத்தில், இத்தொடரில், 100 சிக்ஸர்களை கடந்த 2-வது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். முதல் இடத்தில் மணிஷ் பாண்டே 108 சிக்ஸர்களுடன் உள்ளார்.

சொந்த வரி வருவாயை பெருக்குவதில் TN அரசு கவனம் செலுத்த வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். <<18749969>>TAPS<<>> திட்டம் அரசின் நிதிச்சுமையை அதிகரிக்கும் என்று கூறிய அவர், நிதி மேலாண்மை செம்மையாக இருந்தால் ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமே என குறிப்பிட்டுள்ளார். சிக்கனம் முக்கியம் என்று தெரிவித்த அவர், நிதி மேலாண்மையை எல்லா துறைகளும் தாரக மந்திரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கம் <<18759404>>₹3,000<<>> வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2,22,91,710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான டோக்கன்கள் இன்று ரேஷன் கடைகளுக்கு சென்றடைய உள்ள நிலையில், நாளை முதல் வீடு வீடாக விநியோகிக்கப்பட உள்ளன. SHARE IT.

சென்னையில் AVM சரவணனின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், அவரது உருவப்படத்தை CM ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து பேசிய அவர், AVM நிறுவனத்திற்கும், கலைஞருக்கும் நீண்ட தொடர்பு உள்ளதாக தெரிவித்தார். மெய்யப்ப செட்டியாருக்கு பின், AVM நிறுவனத்தை தாங்கிப் பிடித்தவர் சரவணன் என்று புகழ்ந்தார். காலத்திற்கேற்ப மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என தனக்கு அறிவுரைகளை வழங்கியவர் சரவணன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொங்கல் பரிசாக, 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹3000 வழங்கப்படும் என்று CM ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த ரொக்கப்பரிசு அறிவிப்பும் வெளியாகியுள்ளது. பொங்கல் பரிசுத்தொகுப்பு & ரொக்கப்பரிசு வழங்குவதற்கு ₹6,937 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகை ₹3,000 வழங்குவதற்கான அறிவிப்பை இன்று CM ஸ்டாலின் வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பும் வழங்கப்படவுள்ளது. இதற்காக ₹248 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்கள் இன்று ரேஷன் கடைகளுக்கு சென்றடையும். நாளை முதல் விநியோகம் செய்யப்படும்.

CM ஸ்டாலின் அளித்த பல்வேறு வாக்குறுதிகளில், ஒன்றை கூட நிறைவேற்றவில்லை என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் பேட்டியளித்த அவர், ‘இன்று எழுதி வைத்துக்கொள்ளுங்கள்; நாளைக்கு தேர்தல் நடந்தாலும் சரி, ஏப்ரலில் தேர்தல் நடந்தாலும் சரி, எப்போது தேர்தல் நடந்தாலும், திமுக வீட்டுக்கு செல்வது உறுதி, NDA ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.
Sorry, no posts matched your criteria.