India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

முதல்வராகவும், பொதுச்செயலாளராகவும் முன்மொழிந்த தன்னை, EPS அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியதாக செங்கோட்டையன் சாடியுள்ளார். மேலும் EPS தலைமையில் ஒரு தேர்தலிலாவது அதிமுக வெற்றி பெற்றதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். டிசம்பரில் தவெக தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி அமையும் என்றும், இன்னும் சில Ex அமைச்சர்களும் விஜய்யுடன் இணைவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

தவெக பூத் ஏஜெண்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். பூத் ஏஜெண்டுகளுக்கான விண்ணப்பங்களை விரைவில் பூர்த்தி செய்து தலைமைக்கு அனுப்பி வைக்குமாறு தவெக தரப்பில் இருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு பறந்துள்ளது. ஒவ்வொரு பூத்திற்கும் ஒரு ஏஜெண்டு என்ற எண்ணிக்கையை 10-ஆக உயர்த்த தவெக அண்மையில் அறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில், பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்தியர்கள் அதிகம் விரும்பும் உணவுகளில் ஒன்றான ஹைதராபாத் பிரியாணி உலகளவில் சிறந்த உணவு என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது. ‘டேஸ்ட் அட்லாஸ்’ வெளியிட்டுள்ள சிறந்த 50 அரிசி உணவுகள் பட்டியலில், இந்தியாவில் இருந்து ஹைதராபாத் பிரியாணி மட்டுமே இடம்பிடித்துள்ளது. சிறந்த டாப் 10 உணவுகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை பிரியாணி பிரியர்களுக்கு SHARE பண்ணுங்க.

புயல் எதிரொலியாக நாளை (நவ.29) நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், விழுப்புரம், தஞ்சையில் பள்ளிகளுக்கு மட்டும் லீவு விடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், டிச.3-ல் மகா தீபத்தையொட்டி தி.மலைக்கு உள்ளூர் விடுமுறை.

2025-26-ம் ஆண்டின் 2-ம் காலாண்டில் 8.2% உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கண்டது ஊக்கமளிப்பதாக PM மோடி தெரிவித்துள்ளார். வளர்ச்சி ஆதரவு கொள்கைகள் மற்றும் சீர்திருந்தங்களின் தாக்கத்தை இது பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களின் கடின உழைப்பு, முயற்சியின் வெளிப்பாடு இது என்றும், அரசு தொடர்ந்து சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் சென்று ஒவ்வொருவரின் வாழ்வையும் எளிதாக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ரயில்களில் வழக்கமாக AC வகுப்புகளில் மட்டுமே பயணிகளுக்கு பெட்ஷீட்டும், தலையணையும் வழங்கப்படும். இந்நிலையில் ஜனவரி 1-ம் தேதியில் இருந்து Non AC ஸ்லீப்பர் கோச்சிலும், ₹50 செலுத்தி பெட்ஷீட், தலையணையை பெற்றுக்கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், தலையணை மட்டும் ₹30-க்கும், பெட்ஷீட்டை ₹20-க்கும் கூட பெற்றுக் கொள்ளலாம். அடிக்கடி ரயிலில் பயணிக்கும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க..

14 வயது சிறுமியும், 13 வயது சிறுவனும் காதல் மயக்கத்தில் வீட்டைவிட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா, விஜயவாடாவில் சிறுமியை கூட்டிக் கொண்டு கையில் அப்பாவின் மொபைல் போன் மற்றும் ₹10 ஆயிரத்துடன் வந்து இறங்கியுள்ளான். ஹோட்டல் ரூம் தேடிய சிறுவனை பார்த்து சந்தேகம் அடைந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் போலீஸுக்கு தகவல்தர, இருவரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பெற்றோரே கவனிங்க!

டிட்வா புயலின் வேகம் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக 3 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த புயலின் வேகம், தற்போது 7 கிமீ ஆக அதிகரித்துள்ளது. புயலானது, சென்னையில் இருந்து 490 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 380 கிமீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து 270 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனால், வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தந்தை – மகன் சண்டையால் பாமக இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில், ராமதாஸ் தலைமையிலான கட்சியே உண்மையான பாமக என தெரிவித்த ஜிகே மணி, EC-ல் போலியான ஆவணங்களை கொடுத்து அன்புமணி கட்சித் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அன்புமணி பாமக தலைவர் இல்லை என ராமதாஸ் அளித்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.