India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

யாரையும் நம்பாமல், நள்ளிரவில் தனிமையான இடத்திற்கு செல்ல வேண்டாம் என்று பெண்களுக்கு பிரேமலதா அறிவுறுத்தியுள்ளார். அரசு, பெற்றோர், போலீஸ் என எல்லாரும் 24 மணிநேரமும் நம்மை பாதுகாக்க மாட்டார்கள் என்றும் கூறிய அவர், நாம் தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், அங்கு பரப்புரை செய்கையில் இவ்வாறு பிரேமலதா பேசினார்.

பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட மக்கள் அவசரமாக பயணிக்கும் இடங்களில் MRP-ஐ விட அதிக விலையில் சிலர் பொருள்களை விற்பர். அவசர கதியில் நாமும் அதிக பணம் கொடுத்து வாங்கியிருப்போம். ஆனால், இனி இந்த தவறை செய்யாதீர்கள். எந்தவொரு இடத்திலும் MRP-ஐ விட அதிக விலைக்கு பொருள்களை விற்பனை செய்தால் ‘1915′ என்ற நுகர்வோர் ஹெல்ப்லைனுக்கு கால் செய்து புகாரளிக்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், குமரி, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, தேனி, நீலகிரி, கோவை ஆகிய 8 மாவட்டங்களில் காலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் ஜாக்கிரதையாக செல்ல வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வா வாத்தியார், ஜீனி, LIK என அடுத்தடுத்து கீர்த்தி ஷெட்டியின் படங்கள் ரிலீஸாகவுள்ளன. இந்நிலையில், தனக்கு இயக்குநர் ஆகும் ஆசை அதிகரித்துக் கொண்டே வருவதாக கீர்த்தி தெரிவித்துள்ளார். ஆனால், தான் சினிமாவில் நுழைந்தபோது ஒரு படம் எப்படி தயாராகிறது என்றே தெரியாது எனவும் கூறினார். டைரக்ஷன் சவாலான வேலை என்ற அவர், இந்த சவாலை தனது படங்களின் இயக்குநர்களிடம் தொடர்ந்து கற்று வருகிறேன் என்றார்.

தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, மாநில கல்விக் கொள்கையை உருவாக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், 2026 – 2027 கல்வியாண்டு முதல், மாநில கல்விக் கொள்கை அடிப்படையில் படிப்படியாக பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இதற்கு ஏற்றார்போல் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நவம்பர் மாதத்தில், இந்திய வீராங்கனைகள் வெற்றிக் கோப்பைகளை அடுத்தடுத்து வென்று வருவது, நாட்டின் விளையாட்டு வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. நவ.2-ல் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய அணி தட்டியது. தொடர்ந்து, நவ.23-ல் பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பையை இந்திய மகளிர் அணி கெத்தாக தனதாக்கியது. அதற்கு அடுத்த நாளே (நவ.24) கபடி மகளிர் உலகக்கோப்பையையும் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.

மதுரையில் நடைபெற்று வரும் SIR பணிகள் குறித்து எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை, நாங்கள் மட சாம்பிராணியாக இருக்கிறோம் என செல்லூர் ராஜூ கூறியுள்ளார். SIR பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பலருக்கு, அதனை அப்லோட் செய்வது எப்படி என தெரியவில்லை, சிலருக்கு Internet வசதி இல்லை, சிலருக்கு அதற்கேற்ப மொபைல் போன் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இப்படி இருந்தால், SIR-ன் நோக்கம் நிறைவேறாது என்றும் கூறினார்.

‘ஐயா என் பேரு மாணிக்கம், எனக்கு இன்னொரு பேரும் இருக்கு’ என்று பேசும் ரஜினியின் முகத்தில் தெரியும் மாஸே வேற லெவல் தான். அப்படிப்பட்ட ‘பாட்ஷா’ படம், கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. இவ்விழாவில், திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் கெளரவிக்கப்படவுள்ள நிலையில், இத்திரையிடலும் அதில் இடம்பெற்றுள்ளது. பாட்ஷாவில் உங்களுக்கு பிடித்த சீன் எது?

*பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women).
*1839 – ஆந்திராவில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியால் கொரிங்கா நகரம் முற்றிலும் சேதமடைந்தது. 30,000 பேர் வரை உயிரிழந்தனர்.
*2016 – பிடல் காஸ்ட்ரோ நினைவுநாள்.

தமிழகத்தை போல் மே.வங்கத்திலும் SIR பணிகள் நவ.4 முதல் நடைபெற்று வருகின்றன. இதுவரை 7.64 கோடி SIR விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 4.45 கோடி விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் ECI தெரிவித்துள்ளது. இவற்றில் 10 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யவுள்ளதால், நிராகரிப்பு எண்ணிக்கை உயரவும் வாய்ப்புள்ளதாம்.
Sorry, no posts matched your criteria.