news

News December 6, 2025

புதிய கொடியை அறிமுகம் செய்தார் வைகோ

image

போதைப் பொருள் ஒழிப்பு, சாதி, மத மோதல்கள் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி வைகோ ‘சமத்துவ நடைபயணம்’ மேற்கொள்கிறார். இந்நிலையில், ஜன.2-ல் திருச்சியில் தொடங்கும் இப்பயணத்துக்கான கொடியை CM ஸ்டாலின், வைகோவிடம் கொடுத்து பயணத்தை தொடங்கி வைக்கிறார். இப்பயணம் ஜன.12-ல் மதுரையில் நிறைவடைகிறது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தன்னுடன் பங்கேற்பார்கள் என்றும் வைகோ கூறியுள்ளார்.

News December 6, 2025

கோவில்பட்டியில் அரசன் பட பூஜை?

image

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள ‘அரசன்’ படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், டிச.8-ல் கோவில்பட்டியில் பட பூஜை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, பிரமாண்டமான முறையில் வடசென்னை செட் போடப்பட்டுள்ளதாம். மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. வெற்றிமாறன் – சிம்பு காம்போ வெற்றி பெறுமா?

News December 6, 2025

படத்திற்கு சான்றளிக்கும் குழுக்களில் 50% பெண்கள்!

image

பாலின சமத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில், சென்சார் போர்டில் தணிக்கை மற்றும் மறுஆய்வு குழுக்களில், 50% பெண்கள் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் (CBFC) இதை உறுதி செய்துள்ளதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். மாநிலங்களவையில் பதிலளித்த அவர், படங்களுக்கு சான்றளிக்கும் பணிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

News December 6, 2025

திமுகவுக்கு 90, தவெகவுக்கு 70.. உளவுத்துறை SURVEY

image

கரூர் துயருக்கு பிறகு, மத்திய உளவுத்துறை எடுத்த சர்வேயில், தவெகவுக்கு 70 இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், திமுக கூட்டணி 90, அதிமுக – பாஜக கூட்டணி 35, நாதக 1 இடங்களில் முன்னிலை வகிப்பதாக சொல்லப்படுகிறது. மீதமுள்ள 38 தொகுதிகளில் இழுபறி நீடிக்கிறது. குறிப்பாக, வட, தென் மாவட்டங்களில் தவெகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக சர்வே தெரிவிக்கிறதாம். உங்கள் கருத்து என்ன?

News December 6, 2025

TN அரசில் வேலை: 1,100 காலியிடங்கள், ₹56,100 சம்பளம்!

image

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ➤காலியிடங்கள்: 1100 Assistant Surgeon (General) ➤வயது : 18 – 37 வரை ➤கல்வித்தகுதி: MBBS ➤தேர்ச்சி முறை: கணினி தேர்வு ➤சம்பளம்: ₹56,100 – ₹2,05,700 விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.11 ➤முழு விவரங்களுக்கு இங்கே <>கிளிக்<<>> செய்யவும். வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் SHARE THIS.

News December 6, 2025

நேஷனல் ஹெரால்டு வழக்கு: DK சிவகுமாருக்கு நோட்டீஸ்

image

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஏற்கெனவே <<18429627>>சோனியா, ராகுல்<<>> மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடக DCM டிகே சிவகுமாருக்கு, டெல்லி போலீஸின் பொருளாதார குற்றப்பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய யங் இந்தியன் நிறுவனத்திற்கு, சிவகுமார் அல்லது அவர் தொடர்பான நிறுவனங்கள் வழங்கிய நிதி பரிமாற்றங்கள் குறித்து, விரிவான விவரங்களை டிச.19-க்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

News December 6, 2025

சிக்கலில் திமுக அமைச்சர்கள்?

image

K.N.நேரு மீதான நகராட்சி நிர்வாகத்துறை முறைகேடு வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இதை மீண்டும் தூசிதட்ட முடிவு எடுத்துள்ளதாம் ED. அத்துடன், செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன், MP கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மீதான வழக்குகளையும் மீண்டும் விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, இம்மாத இறுதிக்குள் சில சீனியர் அமைச்சர்களைக் குறிவைத்து ரெய்டு நடக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

News December 6, 2025

விஜய் உடன் கைகோர்க்கிறார் பிரபல நடிகர்

image

அரசியலில் நுழைந்ததால் ‘ஜனநாயகன்’ தான் கடைசி படம் என விஜய் அறிவித்துவிட்டார். இதனால், ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய்க்கு farewell கொடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக, இவ்விழாவில் பங்கேற்க ரஜினி, கமல், அஜித், எஸ்கே, தனுஷ், சிம்பு உள்ளிட்ட நட்சத்திரங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். இதில், ஒரே மேடையில் விஜய்யுடன் கைகோர்க்க முதல் ஆளாக தனுஷ் ஓகே சொல்லி விட்டதாக கூறப்படுகிறது.

News December 6, 2025

Elon Musk-க்கு ₹1250 கோடி அபராதம்: முடக்கப்படுகிறதா X?

image

ஐரோப்பிய யூனியனின் புதிய டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை (DSA) பின்பற்றாததால், எலான் மஸ்கின் X நிறுவனத்திற்கு சுமார் ₹1259 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. X நிறுவனம் மக்களை ஏமாற்றும் விதமாக Blue Tick-ஐ வடிவமைத்துள்ளதாக EU குற்றஞ்சாட்டியது. இதை மஸ்க் கடுமையாக விமர்சித்ததோடு, விதிமுறைகளையும் பின்பற்றவில்லை. இந்த அபராதத்தை கட்டவில்லை எனில் ஐரோப்பிய நாடுகளில் ‘X’ முடங்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

News December 6, 2025

ரயிலில் இதை செய்தால் 5 ஆண்டுகள் சிறை.. Must Read

image

ரயிலில் பயணிக்கும் போது வாட்டர் கெட்டிலை பயன்படுத்தக்கூடாது என RPF எச்சரித்துள்ளது. ஏனென்றால், குறைந்த மின்னழுத்தம் கொண்ட சார்ஜிங் பாயிண்டில் இதுபோன்ற மின் சாதனங்களை பயன்படுத்தினார் உயர் மின்னழுத்தம் ஏற்பட்டு எதிர்பாராத அசம்பாவிதங்கள் ஏற்படலாம். இந்நிலையில் ரயில்களில் கெட்டில் பயன்படுத்தினால் ₹1,000 அபராதம் (அ) 5 ஆண்டுகள் சிறை தண்டனை (அ) இரண்டுமே விதிக்கப்படும் என RPF தெரிவித்துள்ளது.

error: Content is protected !!