India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மகளிர் உரிமைத் தொகை ₹1,000 உயர்த்தப்படும் என CM ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனிடையே, பொங்கலுக்கு முன்பாக மகளிருக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியிருந்தார். இந்நிலையில், வழக்கமாக உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் நாள் அன்றோ (ஜன.15) (அ) நாளையோ தொகை உயர்வு பற்றிய அறிவிப்பை CM வெளியிடுவார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரெடியா?

டெல்லியில் PM மோடி முன்னிலையில் திருவாசகத்தின் முதல் பாடலை தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நாளை இசைக்க உள்ளார். மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நாளை நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்கும் ஜிவி பிரகாஷ் தனது இசை கச்சேரியில் இதனை நிகழ்த்த உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏழை தாயின் மகன் என்ற மோடியின் 75வது பிறந்தநாள் பாடலுக்கு அவர் இசையமைத்திருந்தது கவனிக்கத்தக்கது.

பிரபல பாடகர் சமர் ஹசாரிகா (75) உடல்நலக் குறைவால் காலமானார். அசாம் திரையுலகில் பின்னணி பாடகராக கொடி கட்டி பறந்த இவர், பாரத ரத்னா பெற்ற பூபன் ஹசாரிகாவின் சகோதரர் ஆவார். தமிழ் திரையுலகில் கோலோச்சிய SPB போல, அசாமில் புகழ்பெற்று இருந்துள்ளார். அம்மாநில கலாசாரத்தை போற்றும் வகையில் பல ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக செல்வப்பெருந்தகை சொல்வதில் அர்த்தமே இல்லை என தமிழிசை கூறியுள்ளார். மேலும், கூட்டத்தில் சிக்கி ஒரு உயிரிழப்பு ஏற்பட்டதற்காக தெலங்கானாவில் ஒரு நடிகரை காங்கிரஸ் CM கைது செய்தார். ஆனால் விஜய்க்காக பேசி இங்குள்ள காங்., தலைவர் செல்வப்பெருந்தகை குளிர்காய்கிறார் என்றும், கட்சிக்குள் தனது முக்கியத்துவத்தை இழந்து வருவதால் அவர் இப்படி பேசுவதாகவும் விமர்சித்துள்ளார்.

வீட்டில் உள்ள கேஸ் சிலிண்டருக்கு அடியில் துளைகள் இருப்பதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. தரைக்கும் கேஸ் சிலிண்டருக்கு இடையே காற்றழுத்தம் ஏற்படாமல் இருக்க இந்த துளைகள் உதவுகின்றன. அத்துடன் சிலிண்டருக்கு அடியில் தண்ணீர் தேங்கினால் சிலிண்டர் துருபிடிக்கலாம். இதனால் சிலிண்டர் பழுதாகி எரிவாயு கசிவு ஏற்பட்டு விபத்து நிகழும் அபாயம் இருக்கிறது. இவற்றையெல்லாம் தடுக்கவே இந்த துளைகள் இருக்கிறன. SHARE.

பிரிக்ஸ் 2026 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இந்நிலையில் அதற்கான புதிய லோகோ மற்றும் இணையதளத்தை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டார். மேலும் இந்தாண்டு தலைமையேற்றுள்ள இந்தியா, மனிதநேயமே முதன்மை & மக்கள் மைய அணுகுமுறையை கடைப்பிடிக்கும் என தெரிவித்துள்ளது. எனினும் 2016-ம் ஆண்டு வெளியான BRICS லோகோவுடன் ஒப்பிட்டு, பெரிய மாற்றங்கள் செய்யாதது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கூடுதல் மகிழ்ச்சி அறிவிப்பாக <<18841026>>நாளை<<>> (ஜன.14) முதலே பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிகளில் வகுப்புகள் முடிவடைந்து விடுமுறை கொண்டாட்டத்தை மாணவர்கள் இப்போதே தொடங்கிவிட்டனர். 5 நாள்கள் தொடர் விடுமுறை என்பதால் பலரும் சொந்த ஊர்களுக்கும், தாத்தா பாட்டி வீடுகளுக்கும் புறப்பட்டுவிட்டனர். இதனால் சாலைகள் திக்குமுக்காடுகின்றன. நீங்க பொங்கல் விடுமுறைக்கு தயாராகி விட்டீர்களா?

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், குமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

உலகில் உள்ள உயிரினங்களில் சில விலங்குகள் மிகவும் சோம்பேறிகளாக, அதாவது மெதுவாக செயல்படுபவையாக உள்ளன. இந்த விலங்குகளின் ஓய்வெடுக்கும் பழக்கம் மற்றும் மெதுவான செயல்பாடு, அவற்றின் ஆற்றலைச் சேமிக்கவும், உணவை ஜீரணிக்கவும், வேட்டையாடலில் இருந்து தப்பிக்கவும் உதவுகின்றன. எந்தெந்த விலங்குகள் மிகவும் சோம்பேறிகள் என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை SHARE பண்ணுங்க.

சென்சார் பிரச்னையால் ‘ஜன நாயகன்’ படம் தள்ளிப்போனதால் ‘தெறி’ படம் பொங்கல் நாளில் (ஜன.15) ரீ-ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தியேட்டரை திருவிழாவாக்க ரசிகர்கள் தயாராகி வந்தனர். இந்நிலையில், ரிலீஸாகவுள்ள பட (ஜன நாயகன்) தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தெறி பட ரீ-ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுவதாக கலைப்புலி தாணு அறிவித்துள்ளார். இதனால், விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.