India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசின் கொள்கைகளே ரூபாயின் மதிப்பு குறைந்ததற்கு காரணம் என மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். மோடி அரசின் திட்டங்கள் சரியானதாக இருந்தால் ரூபாயின் மதிப்பு சரிந்திருக்காது எனவும் அவர் சாடியுள்ளார். 2014-ல் குஜராத் CM-ஆக இருந்த மோடி, ரூபாய் மதிப்பு குறைந்ததற்கு காங்கிரஸை குற்றம்சாட்டியதை சுட்டிக்காட்டி, இப்போது நீங்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என PM-யிடம் கார்கே கேட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் கவுஷல் (73) இன்று காலமானார். மூத்த வழக்கறிஞரான ஸ்வராஜ், மிசோரம் மாநில முன்னாள் கவர்னர் ஆவார். இவரது மறைவுக்கு பாஜக உள்பட பல கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஸ்வராஜ் கவுஷல், தனது கடின உழைப்பால் நாட்டிற்கு நிகரில்லா பணிகளை செய்துள்ளார் என பாஜக புகழஞ்சலி செலுத்தியுள்ளது.

2 நாள் பயணமாக இந்தியா வரும் புடின், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் தங்குகிறார். தான் வாழ்ந்த காலத்தில் உலகின் பெரும் பணக்காரராக விளங்கிய ஐதராபாத்தின் கடைசி நிஜாம் ஒஸ்மான் அலி கான் கட்டிய அரண்மனைதான் இது. வண்ணத்துப்பூச்சியின் வடிவத்தில் 8.2 ஏக்கரில் கட்டப்பட்ட இந்த அரண்மனையின் தற்போதைய மதிப்பு ₹170 கோடிக்கும் அதிகமாகும். 36 அறைகள், செயற்கை நீருற்று என பல ஆடம்பர வசதிகள் இதில் உள்ளன.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் போலீசாரை வைத்து கலவரத்தை தூண்டும் வகையில் CM ஸ்டாலின் செயல்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். தீபம் ஏற்றுவதற்கு இஸ்லாமியர்கள் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆனால் ஸ்டாலினின் பிரித்தாலும் சூழ்ச்சியினால் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். தேர்தல் நெருங்கிவருவதால் திமுக நடுக்கத்தில் இவ்வாறு செயல்படுவதாகவும் அவர் சாடியுள்ளார்.

சமந்தா உடனான திருமணம் நடந்து 3 நாள்களுக்கு பிறகு, ராஜ் நிடிமோருவின் EX மனைவி ஷியாமளி தனது இன்ஸ்டாவில் எமோஷனல் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். கடந்த காலங்களில் பல நாள்கள் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டதாகவும், அப்போது தனக்கு துணையாக நின்ற அனைவருக்கும் நன்றி எனவும் அவர் அதில் கூறியுள்ளார். மேலும், கவன ஈர்ப்பிற்காகவோ, தனிப்பட்ட வாழ்க்கை குறித்து டிராமா நடத்தவோ இதை பதிவிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை மதுரை HC அமர்வு தள்ளுபடி செய்தது. தமிழக அரசு உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாகவும் HC அமர்வு தெரிவித்துள்ளது. மேலும், மாநில அரசு கடமையை தவறியதாலேயே CISF வீரர்கள் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளது.

SBI வங்கியில் காலியாக உள்ள 996 Specialist Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ◆வயது: 20 – 42 வரை ◆கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ◆சம்பளம்: ₹51,000 ◆தேர்ச்சி முறை: Short Listing & Personal interview ◆வரும் 23-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <

மக்களை கவனிக்க வைக்கும் படங்கள் குறைந்து வருவதால், தமிழ் சினிமா சரிவை நோக்கி நகர்கிறது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் தமிழில் 32 திரைப்படங்கள் வெளியாகி சாதனை படைத்துள்ளதாம். ஆனால், இதில் சோகம் என்னவென்றால் படங்கள் எதுவும் வசூலில் சாதனையை படைக்கவில்லை. இந்த ஆண்டு இதுவரை வெளியான 262 படங்களில் 28 மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றுள்ளன. மொத்த எண்ணிக்கையில் இது 11% மட்டுமே என்பது பெரும் சோகம்.

வரி விதிப்பின் மூலம் US, இந்தியாவை அச்சுறுத்துகிறதா என ரஷ்ய அதிபர் புடினிடம் கேட்கப்பட்டது. அதற்கு, PM மோடியை அழுத்தத்தால் அடிபணிய வைக்க முடியாது என அவர் பதிலளித்தார். அதேபோல், தற்போதைய இந்திய பயணத்தின் போது AI துறையில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசிக்க உள்ளோம். மேலும், சீனாவில் SCO மாநாட்டில் எனது காரில் PM மோடியை அழைத்து சென்றது, எங்கள் நட்பின் அடையாளம் என்றும் கூறியுள்ளார்.

பள்ளிக்கு புறப்பட்டு காத்திருக்கும்போது, பஸ் கூட்டமாக வருவதால், மாணவர்கள் காலையிலேயே சற்று சோர்வடைகின்றனர். இதனால், குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி மாணவர்களுக்காக மட்டும் கட்டணமில்லா பஸ் சேவைகள் சென்னையில் அமலில் உள்ளது. இந்நிலையில், இன்று முதல் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்காக கட்டணமில்லா பஸ் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.