India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகளிர் உரிமைத் தொகைக்கு ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம் என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 9,000 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற இருப்பதாக அவர் கூறியுள்ளார். அந்த முகாம்களில், பெண்கள் மகளிர் உரிமைத் தொகைக்காக புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
இந்திய பங்குச்சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவுடன் காணப்படுகிறது. தீவிரவாத தாக்குதலால் எல்லையில் நிலவும் பதற்றம் உள்ளிட்டவை இன்று பங்குச்சந்தைகளில் எதிரொலித்தன. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் வீழ்ச்சியடைந்துள்ளது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 338 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. நிதி தொடர்பான நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
எனது தேசப்பற்றையே சோதிப்பது வலியைக் கொடுக்கிறது, எங்களை வேறு மாதிரி சித்தரிக்காதீர்கள் என நீரஜ் சோப்ரா என வேதனை தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், பாக். வீரர் அர்ஷத் நதீமை, பெங்களூரில் நடைபெறும் போட்டிக்கு நீரஜ் அழைத்திருந்ததை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் வசைபாடினர். ஆனால், தாக்குதலுக்கு முன்னதாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் நீரஜ் தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் மேலும் ₹1000 கோடி முதலீடு செய்வதாக சாம்சங் நிறுவனம் உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர் சாம்சங் தொழிலாளர் பிரச்சனையை CM ஸ்டாலின் திறம்பட கையாண்டதாகவும் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியில் கியா நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வராமல் வேறு மாநிலத்திற்கு சென்றதாகவும் அமைச்சர் விமர்சித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் துணை பிரதமர் இசாக் தார் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திரப் போராளிகளாக இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். சிந்து நதி நீரை தடுத்தால் அது போராக பார்க்கப்படும் எனவும் இசாக் தார் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா தெரிவித்திருந்த நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் மோசமாக உள்ளதாக ASER அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கவர்னர் விமர்சித்துள்ளார். உதகையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய அவர் இந்த மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என காவல்துறை மிரட்டியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
பல பல்கலை.களை நேரில் ஆய்வு செய்த பிறகே இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்ததாகவும் கவர்னர் கூறியுள்ளார்.
புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டத்தில் 2025-26ம் ஆண்டு பட்ஜெட் நலத்திட்டங்களுக்கு நிதி தேவைப்படுவதால், மதுபானம் மீதான கலால் வரி உள்ளிட்ட வரிகளை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த வரி உயர்வால், புதுச்சேரியில் மதுபான விலை கணிசமாக உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது. புதுச்சேரி மது விலை குறைவு என்பதால், தமிழகத்தில் இருந்தும் பலர் அதை வாங்கி அருந்துவர். ஆதலால் மது பிரியர்களை இது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பட்டா மற்றும் அரசு நிலங்களில் அனுமதியின்றி மணல் அள்ளுவது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, விசாரணை என்ற பெயரில் விவசாயிகளுக்கு அபராதம் விதித்துள்ளது என பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், அரசு நிலத்தில் கள்ளத்தனமாக கனிமங்களை வெட்டி எடுத்தவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
கவர்னர் வழக்கு விவகாரத்தில் வெற்றி பெற்ற முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். மே 3-ல் நேரு உள் விளையாட்டு அரங்கில் விழா நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை நிறுத்திவைக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்பது உள்பட பல முக்கிய அம்சங்கள் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் லஷ்கர்-இ-தொய்பா தளபதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் அவ்வமைப்பின் முக்கிய தளபதி அல்தாப் அலி என தெரிய வந்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பொறுப்பேற்றுக் கொண்டது. மேலும், தொடர் எதிர்தாக்குதல் நடவடிக்கைகளால் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
Sorry, no posts matched your criteria.