India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

டிட்வா புயல் எதிரொலியாக ஹாஸ்பிடல்களில் டாக்டர்கள் முழு நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் மா.சு., தெரிவித்துள்ளார். மழைக்கு பின் காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஹாஸ்பிடல்களில் மின்சாரம் தடைபடாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், ஹாஸ்பிடல் அருகே மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பைசன் திரைப்படம் அருமையாக இருப்பதாக கிரிக்கெட்டர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். மாரி செல்வராஜின் படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இதில் தத்ரூபமாக நடிக்க துருவ் கடுமையான உழைப்பை போட்டிருப்பது தெரிவதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும், மற்ற நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்ததாக கூறிய அவர், படக்குழுவுக்கு தன்னுடைய வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.

ஜெ.ஜெயலலிதா கவின் கலை பல்கலை.,-யின் 3-வது பட்டமளிப்பு விழாவில் CM ஸ்டாலின் பங்கேற்று பட்டங்களை வழங்கினார். இதில், வாழ்நாள் சாதனைக்காக நடிகர் சிவக்குமாருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய CM, ஒரு கலைஞனாகவே பட்டம் வழங்க வந்துள்ளதாக தெரிவித்தார். சிவகுமார் தனக்கு சகோதரர் போன்றவர் எனக்கூறிய CM, ஜெ., பல்கலை.,-க்கு ₹5 கோடி மானியத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

பொங்கல் பரிசாக ₹5,000 வழங்க வேண்டும் என நயினார் கோரிக்கை வைத்துள்ளார். தனது தொகுதியான நெல்லைக்கு பாலம், ரோடு, கல்லூரி என நிறைய நன்மைகளை CM செய்துள்ளதாக கூறிய அவர், மக்கள் பொங்கல் பரிசு குறித்து பெரிய எதிர்பார்ப்புடன் இருப்பதாக பேசியுள்ளார். மேலும், இந்த அரசால் மக்கள் லட்சக்கணக்கில் நஷ்டத்தில் இருப்பதாகவும், வெறும் ₹1,000 கொடுத்தால் ஓட்டு போடுவார்களா என்பது சந்தேகமே எனவும் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையன் TVK-வில் இணைந்த நிலையில், வரும் 30-ம் தேதி கோபியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு EPS ஏற்பாடு செய்துள்ளார். இதில் அதிமுகவில் இருந்து KAS நீக்கப்பட்டதற்கான காரணத்தை அவர் விவரிக்க உள்ளாராம். அதேபோல் தலைமைக்கு எதிராக KAS பேசியதன் பின்னணியில் உள்ளவர்களின் விவரங்களை வெளியிடவும் அவர் திட்டமிட்டுள்ளார். கடந்த முறை கொங்கு பகுதியில் பரப்புரை செய்த போது EPS கோபிக்கு செல்லவில்லை.

செங்கோட்டையன் TVK-வில் இணைந்த நிலையில், வரும் 30-ம் தேதி கோபியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு EPS ஏற்பாடு செய்துள்ளார். இதில் அதிமுகவில் இருந்து KAS நீக்கப்பட்டதற்கான காரணத்தை அவர் விவரிக்க உள்ளாராம். அதேபோல் தலைமைக்கு எதிராக KAS பேசியதன் பின்னணியில் உள்ளவர்களின் விவரங்களை வெளியிடவும் அவர் திட்டமிட்டுள்ளார். கடந்த முறை கொங்கு பகுதியில் பரப்புரை செய்த போது EPS கோபிக்கு செல்லவில்லை.

இளையராஜா இசையமைத்திருந்த ‘கருத்த மச்சான்’ பாடலை டியூட் படத்தில் இருந்து நீக்க சென்னை HC உத்தரவிட்டுள்ளது. தனது அனுமதியின்றி, தனது பாடல்களை பயன்படுத்தப்பட்டுள்ளதாக இளையராஜா சென்னை HC வழக்கு தாக்கல் செய்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏற்கெனவே, இதே போல ‘ஒத்த ரூபாயும் தாரேன்’, ‘இளமை இதோ இதோ’, ‘என் ஜோடி மஞ்ச குருவி’ பாடல்களும் இது போல நீக்கப்பட்டிருந்தன.

பிஹார் காற்று TN-ல் வீசுவதாக PM மோடி பேசியதற்கு செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். பிஹாரில் பாஜக குறுக்கு வழியில் வென்றதாகவும், அதை வைத்து அனைத்து மாநில தேர்தல் முடிவுகளையும் முடிவு செய்யக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், காங்., இரண்டாக உடையும் என PM பேசியதை குறிப்பிட்ட அவர், TN பாஜக எத்தனை கோஷ்டிகளாக உடைந்திருக்கிறது என்பதை PM பூதக்கண்ணாடி வைத்து பார்க்கவேண்டும் என கூறியுள்ளார்.

வெள்ளி விலை மீண்டும் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் கிலோவுக்கு ₹12,000 உயர்ந்தது. இன்று(நவ.28) கிராமுக்கு ₹3 அதிகரித்து ₹183-க்கும், கிலோவுக்கு ₹3,000 அதிகரித்து ₹1,83,000-க்கும் விற்பனையாகிறது. உலக சந்தையில் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதே, இந்தியாவில் விலை அதிகரிப்புக்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தவெகவில் இணைந்த செங்கோட்டையன், டிடிவி தினகரனிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே பாஜக அவரிடம் கூட்டணி குறித்து பேசி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், CM வேட்பாளராக EPS இருக்கக்கூடாது என டிடிவி வைக்கும் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத இடத்தில் பாஜக இருக்கிறது. எனவே, டிடிவி தவெக பக்கம் செல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சொல்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.