India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புளிச்சக் கீரையில் நிறைய நார்ச்சத்துக்கள், ஜிங்க், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் என ஏராளமான சத்துக்கள் உள்ளன. இது HIGH BP, இதய பிரச்னை உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றாலும், சிலர் மட்டும் இதனை உண்பதை தவிர்க்கவேண்டும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் இதனை தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நலனை காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.

விஜய் அழைத்தால் தவெகவிற்காக பேச செல்வேன் என்று நாஞ்சில் சம்பத் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதிமுகவை விட தவெக வலிமையாக உள்ளது. இதனால், பல தொகுதிகளில் திமுகவுக்கும், தவெகவுக்கும் நேரடி போட்டி நிலவும் எனக் கூறிய அவர், களநிலவரமும் அப்படித்தான் இருக்கிறது என்றார். மேலும், கோடி ரூபாய் கொடுத்தாலும் விஜய்க்கு எதிராக பேசமாட்டேன் என்றும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

சுமார் 10 மணிநேர இடைவெளிக்கு பிறகு நாம் எடுத்துக்கொள்ளும் சில காலை உணவுகளால் நமக்கு உடல்நலம், மனச்சோர்வு போன்றவை உண்டாகின்றன. எனவே,
*வறுத்த உணவுகள்
*தயிர்
*டீ, காபி போன்ற சர்க்கரை பானங்கள்
*ஃப்ரிட்ஜில் வைத்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்
*எனர்ஜி டிரிங்ஸ் *தயிர் ஆகியவற்றை காலை உணவில் இருந்து தவிர்ப்பது நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர். நீங்கள் நலம் விரும்பும் உறவுகளுக்கு ஷேர் பண்ணுங்க.

நவ.27-ல் தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் DCM உதயநிதி. இந்நிலையில், திமுக தலைமையகமான அறிவாலயத்தில் முதல்முறையாக உதயநிதி பிறந்தநாள் கொண்டாடவுள்ளாராம். அன்றைய தினம் சுமார் 50,000 தொண்டர்கள் நேரடியாக உதயநிதிக்கு வாழ்த்து கூறவுள்ளனராம். கருணாநிதி, ஸ்டாலின் வரிசையில் அறிவாலயத்தில் பிறந்தநாள் கொண்டாடவுள்ள உதயநிதியை, 2026 தேர்தலில் முக்கிய முகமாக மாற்ற திமுக முயற்சிக்கும் என்கின்றனர்.

ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டித் தொடர், நவ.28 – டிச.10 வரை சென்னை, மதுரையில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் 24 அணிகள், 6 பிரிவுகளில் விளையாடவுள்ளன. இப்போட்டிகளை காண பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை <

நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 1-ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருகிறது. அதனைதொடர்ந்து டிச.1-ம் தேதியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், நாகைக்கு தொடர்ந்து மூன்று நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும்.

நடிகைகளின் பயணத்தில் திருமணம் என்பது தடைக்கல் அல்ல, அது ஒரு ஊக்கம் தரும் ஏணிப்படிகளே என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். அத்துடன், தன்னை பொறுத்தவரை கவர்ச்சி என்பது அவரவர் விருப்பம், அந்த எல்லைகளை திருமணம் தடுக்கவோ குறைக்கவோ முடியாது என்றும் கூறினார். திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியாக நடித்து வருவது குறித்த கேள்விக்கு ரகுல் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

திராவிட மாடல் அரசு என்றாலே திருட்டு, இருட்டு, புரட்டு, உருட்டு என்றே அர்த்தம் என H ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களில் திமுக அரசு சொல்வது அனைத்தும் முழு பொய் என்று சாடிய அவர், திமுகவை தான் நம்பவே மாட்டேன் என்றும் கூறினார். SIR பணிகளால் எந்த ஊழியரும் மன உளைச்சலில் இறக்கவில்லை என்றார். மேலும், உதயநிதி ஒரு இந்து விரோத சக்தி என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாளை புயல் உருவாகவுள்ள நிலையில், தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு விடுமுறை இல்லாவிடில், குடை, ரெயின் கோட் ஆகியவற்றை எடுத்துச் செல்லுங்கள் மாணவர்களே..

யாரையும் நம்பாமல், நள்ளிரவில் தனிமையான இடத்திற்கு செல்ல வேண்டாம் என்று பெண்களுக்கு பிரேமலதா அறிவுறுத்தியுள்ளார். அரசு, பெற்றோர், போலீஸ் என எல்லாரும் 24 மணிநேரமும் நம்மை பாதுகாக்க மாட்டார்கள் என்றும் கூறிய அவர், நாம் தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், அங்கு பரப்புரை செய்கையில் இவ்வாறு பிரேமலதா பேசினார்.
Sorry, no posts matched your criteria.