News April 9, 2025
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலுங்கானாவை ஆளும் காங்கிரஸ் அரசு, அங்கு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருப்பதாகவும், ஆனால், நாட்டில் அக்கணக்கெடுப்பை நடத்த மோடியும், ஆர்எஸ்எஸ்சும் மறுப்பதாகவும் அவர் சாடினார். சிறுபான்மையினருக்கு கிடைக்க வேண்டிய பங்கை அவர்கள் மறுப்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்தார்.
Similar News
News January 3, 2026
தவெக வேட்பாளர் தேர்வில் விஜய்யின் பிடிவாதம்

தவெகவில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் பரிந்துரை லிஸ்ட்டில் இருப்போர் எவ்வளவு தொகையை தேர்தலுக்கு பயன்படுத்துவர் என்பதை தலைமைக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இந்த தொகையுடன், ஒரு பெருந்தொகையை தேர்தல் செலவுக்காக விஜய் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேட்பாளர்களின் குடும்பம் கடனில் சிக்கிவிடக் கூடாது என்பதில் விஜய் பிடிவாதமாக உள்ளாராம்.
News January 3, 2026
BREAKING: மகிழ்ச்சியான இரண்டு அறிவிப்புகள்

புத்தாண்டு தொடங்கிய முதல் வார இறுதி நாளான இன்று, CM ஸ்டாலின் 2 முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரேஷன் அட்டைதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொங்கல் பரிசுத் தொகை குறித்தும் CM ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
News January 3, 2026
Voter list-ல் பெயர் இல்லையா? இன்று சிறப்பு முகாம்

SIR-க்கு பிறகு வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து, விடுபட்ட வாக்காளர்கள் மீண்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ECI அறிவித்தது. இந்நிலையில், இன்று மற்றும் நாளை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. எனவே, நீக்கப்பட்டவர்களில் தகுதியானவர்கள் இருப்பின், தேவையான ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் SHARE IT.


