News April 9, 2025
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலுங்கானாவை ஆளும் காங்கிரஸ் அரசு, அங்கு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருப்பதாகவும், ஆனால், நாட்டில் அக்கணக்கெடுப்பை நடத்த மோடியும், ஆர்எஸ்எஸ்சும் மறுப்பதாகவும் அவர் சாடினார். சிறுபான்மையினருக்கு கிடைக்க வேண்டிய பங்கை அவர்கள் மறுப்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்தார்.
Similar News
News October 18, 2025
இவர்களுக்கு தீபாவளி விடுமுறை இல்லை

தீபாவளியன்று டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு விடுமுறை இல்லை என்றும் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய மருத்துவ அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், அசம்பாவிதம் ஏற்பட்டால் dphei@nic.in என்ற மின்னஞ்சலுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
News October 18, 2025
ஆண்களே.. இதை கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க

*சிறுநீர் கழித்த பிறகு ஆணுறுப்பை தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும்.
*குளிக்கும்போது சோப் போட்டு சுத்தம் செய்யலாம்.
*அதிக வாசனைமிக்க சோப்களை பயன்படுத்தக்கூடாது. அதில் அதிக ரசாயனம் இருப்பதால் சரும பிரச்னைகளை உருவாக்கும்.
*காட்டன் உள்ளாடைகளை பயன்படுத்த வேண்டும். *உடலுறவுக்கு பிறகு கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும். *யூரினரி தொற்று ஏற்படுவதால், அது உங்கள் பார்ட்னருக்கும் தொற்றை ஏற்படுத்தக்கூடும்.
News October 18, 2025
இந்திய ரூபாயை மிஞ்சிய ஆப்கன் கரன்சி

ஆப்கானிஸ்தானின் கரன்சி மதிப்பு, இந்திய ரூபாயின் மதிப்பைவிட உயர்ந்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. தற்போது 1 ஆப்கானி (AFN) = 1.33 ரூபாயாக உயர்ந்துள்ளது. தாலிபன்கள் உறுதியாக கடைப்பிடிக்கும் நாணய கொள்கை தான் இதற்கு முக்கிய காரணமாம். அமெரிக்க டாலர் மற்றும் பாகிஸ்தான் கரன்சிக்கு தடை விதித்ததுடன், அனைத்து பரிவர்த்தனைகளையும் ஆப்கன் கரன்சியிலேயே நடத்துவதை கட்டாயமாக்கி உள்ளதால், ஆப்கன் கரன்சி வலுவாக உள்ளதாம்.