News April 9, 2025
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலுங்கானாவை ஆளும் காங்கிரஸ் அரசு, அங்கு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருப்பதாகவும், ஆனால், நாட்டில் அக்கணக்கெடுப்பை நடத்த மோடியும், ஆர்எஸ்எஸ்சும் மறுப்பதாகவும் அவர் சாடினார். சிறுபான்மையினருக்கு கிடைக்க வேண்டிய பங்கை அவர்கள் மறுப்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்தார்.
Similar News
News December 17, 2025
திருப்பரங்குன்றம் தீபம்.. இன்னும் ஒரு வருஷம் இருக்கு!

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, 4-வது நாளாக நாளையும் தொடரும் என HC தெரிவித்துள்ளது. விசாரணையின் போது கோயில் நிர்வாகம் – தர்கா தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடலாமா என கோர்ட் கேள்வி எழுப்பியது. அது தீர்வு எட்டப்படுவதை தாமதப்படுத்தும் என மனுதாரர் பதிலளிக்க, மார்கழியே பிறந்துவிட்டது, அடுத்த கார்த்திகைக்கு இன்னும் 360 நாள்கள் உள்ளதாக HC தெரிவித்துள்ளது.
News December 17, 2025
விவாகரத்து பற்றி அன்றே சொன்ன செல்வராகவன்?

செல்வராகவன் புகைப்படங்களை, அவரது மனைவி கீதாஞ்சலி தனது இன்ஸ்டாவில் இருந்து நீக்கியதால், இருவரும் விவகாரத்து செய்ய உள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில், செல்வராகவனின் சமீபத்திய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், மிகமோசமான காலகட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட செத்து பிழைத்து வந்திருக்கிறேன். இதற்கான காரணம் குறித்து இப்போது சொல்ல மாட்டேன். விரைவில் தெரியவரும் என அவர் கூறியிருந்தார்.
News December 17, 2025
நீதிபதி உத்தரவால் இந்தியா பற்றி எரிகிறது: அரசு

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, மதுரை ஐகோர்ட்டில் இன்று 3-வது நாளாக நடந்தது. அப்போது, மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தான் ராம ரவிக்குமார் குறிப்பிட்டார். ஆனால், தனி நீதிபதி (G.R.சுவாமிநாதன்) தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டதால், இந்தியா பற்றி எரிகிறது. நீதிபதி தேர்தலில் போட்டியிட தயாராகிக் கொண்டிருக்கிறார் என அரசு தரப்பு வாதத்தை முன்வைத்தது.


