News April 9, 2025
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலுங்கானாவை ஆளும் காங்கிரஸ் அரசு, அங்கு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருப்பதாகவும், ஆனால், நாட்டில் அக்கணக்கெடுப்பை நடத்த மோடியும், ஆர்எஸ்எஸ்சும் மறுப்பதாகவும் அவர் சாடினார். சிறுபான்மையினருக்கு கிடைக்க வேண்டிய பங்கை அவர்கள் மறுப்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்தார்.
Similar News
News November 28, 2025
உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.10,000 – ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்ட முழுவதும் எங்கேயாவது சாலை விபத்து ஏற்படும் இடங்களில் உள்ள நபர்கள் உடனடியாக முதலுதவி செய்து மருத்துவமனைக் அழைத்துச் சென்று உயிரைக் காப்பாற்றும் நபர்களுக்கு” நல்ல சமரியான்” திட்டம் மூலம் ரூபாய் பத்தாயிரம் பரிசு தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் தெரிவித்துள்ளார். இதன் மூலம் விபத்தில் சிக்குபவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கும்.
News November 28, 2025
₹5,000 கொடுக்கலன்னா ஓட்டு போடமாட்டாங்க: நயினார்

பொங்கல் பரிசாக ₹5,000 வழங்க வேண்டும் என நயினார் கோரிக்கை வைத்துள்ளார். தனது தொகுதியான நெல்லைக்கு பாலம், ரோடு, கல்லூரி என நிறைய நன்மைகளை CM செய்துள்ளதாக கூறிய அவர், மக்கள் பொங்கல் பரிசு குறித்து பெரிய எதிர்பார்ப்புடன் இருப்பதாக பேசியுள்ளார். மேலும், இந்த அரசால் மக்கள் லட்சக்கணக்கில் நஷ்டத்தில் இருப்பதாகவும், வெறும் ₹1,000 கொடுத்தால் ஓட்டு போடுவார்களா என்பது சந்தேகமே எனவும் தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
KAS பின்னணியில் யார்? மக்களை சந்திக்கும் EPS

செங்கோட்டையன் TVK-வில் இணைந்த நிலையில், வரும் 30-ம் தேதி கோபியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு EPS ஏற்பாடு செய்துள்ளார். இதில் அதிமுகவில் இருந்து KAS நீக்கப்பட்டதற்கான காரணத்தை அவர் விவரிக்க உள்ளாராம். அதேபோல் தலைமைக்கு எதிராக KAS பேசியதன் பின்னணியில் உள்ளவர்களின் விவரங்களை வெளியிடவும் அவர் திட்டமிட்டுள்ளார். கடந்த முறை கொங்கு பகுதியில் பரப்புரை செய்த போது EPS கோபிக்கு செல்லவில்லை.


