News April 9, 2025
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலுங்கானாவை ஆளும் காங்கிரஸ் அரசு, அங்கு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருப்பதாகவும், ஆனால், நாட்டில் அக்கணக்கெடுப்பை நடத்த மோடியும், ஆர்எஸ்எஸ்சும் மறுப்பதாகவும் அவர் சாடினார். சிறுபான்மையினருக்கு கிடைக்க வேண்டிய பங்கை அவர்கள் மறுப்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்தார்.
Similar News
News December 10, 2025
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News December 10, 2025
234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறும் காங்கிரஸ்

2026 சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் அக்கட்சியின் உறுப்பினர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுவதாக செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இதற்கான கட்டணமில்லா படிவத்தை நாளை முதல் டிச.15-ம் தேதி வரை சத்தியமூர்த்தி பவனில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து விவரங்களுடன் பூர்த்தி செய்த படிவத்தை டிச.15-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
News December 10, 2025
TN அரசுடன் ₹4,000 கோடிக்கு ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம்

தமிழக அரசு மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ₹4,000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், தமிழக அரசுடன் இணைந்து திரைப்படங்கள், வெப் சீரிஸ் உள்ளிட்டவற்றை ஜியோ ஹாட்ஸ்டார் தயாரிக்கும். இது ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும், இளம் படைப்பாளிகளுக்கு தேவையான ஊக்கத்தையும் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


