News April 9, 2025
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலுங்கானாவை ஆளும் காங்கிரஸ் அரசு, அங்கு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருப்பதாகவும், ஆனால், நாட்டில் அக்கணக்கெடுப்பை நடத்த மோடியும், ஆர்எஸ்எஸ்சும் மறுப்பதாகவும் அவர் சாடினார். சிறுபான்மையினருக்கு கிடைக்க வேண்டிய பங்கை அவர்கள் மறுப்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்தார்.
Similar News
News November 23, 2025
அனைத்து சாதியினரையும் நீதிபதியாக்கிய கவாய்!

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், அவரது பதவிக்காலத்தில் மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, பல மாநில ஐகோர்ட்களில் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை 129 பேர் பரிந்துரைக்கப்பட்டு, 93 பேர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் 10 பேர் SC பிரிவினர், 11 OBC, 13 சிறுபான்மையினர் மற்றும் 15 பெண் நீதிபதிகள் அடங்குவர்.
News November 23, 2025
BREAKING: அதிமுக அறிவித்தது

டிசம்பர் 10-ம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறும் என்று இபிஎஸ் அறிவித்துள்ளார். அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூடும் இப்பொதுக்குழுவில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்தும் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்.
News November 23, 2025
TVK, விஜய்யின் செயல்பாட்டில் நிகழ்ந்த மாற்றம்!

கரூர் துயர சம்பவத்திற்கு விஜய் தாமதமாக வந்ததே முக்கிய காரணம் என அரசு முதல் நெட்டிசன்கள் வரை சாடி வருகின்றனர். 2 மாதங்களுக்கு பிறகு காஞ்சியில் நடைபெற்று வரும் மக்கள் சந்திப்பு கூட்டம் 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 30 நிமிடங்கள் முன்னதாகவே விஜய் வருகை தந்தார். தவெக தொண்டரணியும் <<18365491>>நிகழ்ச்சி அரங்கில்<<>> மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.


