News April 9, 2025
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலுங்கானாவை ஆளும் காங்கிரஸ் அரசு, அங்கு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருப்பதாகவும், ஆனால், நாட்டில் அக்கணக்கெடுப்பை நடத்த மோடியும், ஆர்எஸ்எஸ்சும் மறுப்பதாகவும் அவர் சாடினார். சிறுபான்மையினருக்கு கிடைக்க வேண்டிய பங்கை அவர்கள் மறுப்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்தார்.
Similar News
News December 25, 2025
கிருஷ்ணகிரிக்கு நாளை முக்கிய முகாம் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமாக ‘நமக்கு நாமே ஸ்டாலின்’ முகாம், கிருஷ்ணகிரியில் நாளை (டிச.26) நடைபெற உள்ளது. இம்முகாமில் மக்களின் குறைகள் நேரடியாக கேட்கப்பட்டு உடனடி தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு துறைகள் ஒருங்கிணைந்து சமூக நலத்திட்டங்கள், சான்றிதழ்கள், நல உதவிகள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று பயனடைய மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. ஷேர் பண்ணுங்க!
News December 25, 2025
சென்னை: மெட்ரோ பயனாளிகளுக்கு அறிவிப்பு!

சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும். அதன்படி, பகல் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
News December 25, 2025
பொங்கல் பரிசுடன் பணம்.. கடந்து வந்த பாதை

பொங்கல் பரிசு குறித்த அரசின் அறிவிப்பு தள்ளிப்போவதால் மக்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2026 பொங்கல் பரிசுடன் ரொக்கம் குறித்த அறிவிப்பு நிச்சயம் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தேர்தல் சமயம் என்பதால் பம்பர் ஆஃபராக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பொங்கல் பரிசாக ரொக்கம் வழங்கும் வழக்கம் எப்போது வந்தது எவ்வளவு கொடுக்கப்பட்டது என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க.


