News April 9, 2025
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலுங்கானாவை ஆளும் காங்கிரஸ் அரசு, அங்கு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருப்பதாகவும், ஆனால், நாட்டில் அக்கணக்கெடுப்பை நடத்த மோடியும், ஆர்எஸ்எஸ்சும் மறுப்பதாகவும் அவர் சாடினார். சிறுபான்மையினருக்கு கிடைக்க வேண்டிய பங்கை அவர்கள் மறுப்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்தார்.
Similar News
News December 21, 2025
தென்காசி: விஷம் குடித்த சிறுவன் உயிரிழப்பு!

சுரண்டை பகுதியை சேர்ந்த தம்பதியினர் கோவிந்தராஜ் – உமா (31). இவர்களுக்கு தர்ஷிக் முகுந்த் (9) என்ற மகன் உள்ளார். உமாவின் தயார் பெயரில் உள்ள வீட்டை அடமானம் வைத்து கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த உமா, தனது மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தர்ஷிக் முகுந்த் உயிரிழந்தார். சாம்பவர் வடகரை போலீஸார் விசாரனை.
News December 21, 2025
விஜய்யிடம் இதை LIKE பண்ணேன்: நாஞ்சில் சம்பத்

விஜய்யிடம் உள்ள துணிச்சலை பார்த்து ஆச்சர்யப்பட்டேன் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். அரசியலில் 4 சீட்டுகளுக்காக தங்களை குறுக்கிக்கொள்ள உயர்ந்த தலைவர்களே தயாராகிவிட்டார்கள் எனவும், ஆனால் இப்போது அரசியலுக்கு வந்த விஜய், பாஜகவையும் திமுகவையும் தைரியமாக எதிர்கிறார் என்று பாராட்டினார். மேலும், விஜய்யின் இந்த துணிச்சலுக்கு முன்னால் மலைகூட தனக்கு ஒரு குன்றாக தெரிவதாகவும் பேசியுள்ளார்.
News December 21, 2025
10 வருஷம் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியலையா?

வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட பலர் அதிமுக ஆட்சியில் சேர்க்கப்பட்டவர்கள் என்று செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். கள்ள ஓட்டு தொடர்பான <<18619007>>நயினார் நாகேந்திரனின்<<>> கருத்துக்கு பதிலளித்த அவர், 10 வருடமாக அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தபோது, இந்த கள்ள ஓட்டுகள் கண்ணுக்குத் தெரியவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அப்போது நல்ல ஓட்டாக இருந்தது இப்போது கள்ள ஓட்டாகிவிட்டதா எனவும் கேட்டுள்ளார்.


