News April 9, 2025
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலுங்கானாவை ஆளும் காங்கிரஸ் அரசு, அங்கு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருப்பதாகவும், ஆனால், நாட்டில் அக்கணக்கெடுப்பை நடத்த மோடியும், ஆர்எஸ்எஸ்சும் மறுப்பதாகவும் அவர் சாடினார். சிறுபான்மையினருக்கு கிடைக்க வேண்டிய பங்கை அவர்கள் மறுப்பதாகவும் ராகுல் காந்தி விமர்சித்தார்.
Similar News
News December 31, 2025
புதுச்சேரி: சட்டமன்ற உறுப்பினர் புத்தாண்டு வாழ்த்து

வரும் ஆண்டு அனைவரது வாழ்க்கையிலும், வசந்த காற்றை வீச செய்யட்டும் என புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன் புத்தாண்டுவாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் 2025ல் பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா பல்வேறு வெற்றிகளை கண்டதாகவும், அதே உத்வேகத்தோடு அடுத்த ஆண்டில் அடி எடுத்து வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2026ல் ஒவ்வொரு குடிமகனின் இல்லங்களிலும் வசந்தம் வீசட்டும் என்று கூறியுள்ளார்.
News December 31, 2025
’தமிழ்நாடு’ – நீக்கியது ஜெயலலிதா தான்: சிவசங்கர்

அரசு பஸ்களில் தமிழ்நாடு என்ற பெயர் நீக்கப்பட்டதற்கு ஜெயலலிதா தான் காரணம் என அமைச்சர் சிவசங்கர் பேசியுள்ளார். பஸ்களில் தமிழ்நாடு இல்லாததை கண்டித்து சீமான் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அரியலூரில் பேசிய சிவசங்கர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்று கருணாநிதி வைத்த பெயரை, நீளமாக இருக்கிறது என்று கூறி, அதில் தமிழ்நாடு நீக்கப்பட்டது ஜெயலலிதா ஆட்சியில் தான் எனத் தெரிவித்துள்ளார்.
News December 31, 2025
அழகின் சிகரம் மீனாட்சி சவுத்ரி

மீனாட்சி சவுத்ரி, இன்ஸ்டாவில் லேட்டஸ்ட் போட்டோஸை பகிர்ந்துள்ளார். சேலையில் உள்ள போட்டோஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர் பார்த்தாலே ஏதோ ஒரு ஸ்பார்க் ஆகிறது நெஞ்சுக்குள். கவனத்தை ஈர்க்கும் தோற்றம், இனிமையான சிரிப்பு, வானவில் போன்று வியக்கும் அழகு என அனைத்து உவமைகளும் சொந்தம் கொண்டாட துடிக்கும் ஓவியமாக இருக்கிறார். இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.


