News May 7, 2025
சாதிவாரி கணக்கெடுப்பு: ஸ்டாலின் கேள்வி

சாதி அடிப்படையில் எதிர்க்கட்சிகள் மக்களை பிளப்பதாக கூறி வந்த மோடி அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இது I.N.D.I.A கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை தவிர்ப்பதற்கான மத்திய அரசின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததாக விமர்சித்த அவர், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுப்பினார்.
Similar News
News January 8, 2026
உயர்ந்தது சிகரெட் விலை

சென்னை உள்ளிட்ட பல இடங்களில் சிகரெட் விலை முன்கூட்டியே அதிகரித்துள்ளது. கலால் வரி உயர்வு அமலாகவுள்ள நிலையில், பிப்ரவரி முதல் ஒரு சிகரெட் ₹72-க்கு விற்கப்படலாம். இதனால், தற்போதே மொத்த விற்பனையாளர்கள், சில்லறை வியாபாரிகள் சிகரெட்டுகளை பதுக்க ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக, சிகரெட் விலை பாக்கெட்டுக்கு ₹20-₹25 வரையும், சில்லறை விற்பனை கடைகளில் சிகரெட் ஒன்றுக்கு ₹2-₹5 வரையும் அதிகரித்துள்ளது.
News January 8, 2026
‘ஜனநாயகன்’ புகாருக்கு தமிழிசை பதிலடி!

‘ஜனநாயகன்’ சென்சார் தாமதத்திற்கு மத்திய அரசையும், ஜனநாயகனான PM மோடியையும், <<18798698>>காங்.,<<>> குறை கூறுவது மக்களை திசைதிருப்பும் செயல் என தமிழிசை தெரிவித்துள்ளார். CBFC சட்டப்படி செயல்படுவதாக கூறிய அவர், மத்திய அரசிற்கு இதில் தொடர்பில்லை என ஐகோர்ட்டில் விளக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். திரைப்படங்களை தடை செய்த வரலாறு கொண்ட காங்., ஜனநாயகம் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போலாகும் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
News January 8, 2026
நகைக் கடன் தள்ளுபடியா?… வந்தாச்சு அப்டேட்

தேர்தலையொட்டி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படுமா என மக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், ₹6,000 கோடி மதிப்பிலான நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் நிலுவை விவரங்களை தயார் செய்யும்படி, அதிகாரிகளுக்கு TN அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.


