News May 7, 2025
சாதிவாரி கணக்கெடுப்பு: ஸ்டாலின் கேள்வி

சாதி அடிப்படையில் எதிர்க்கட்சிகள் மக்களை பிளப்பதாக கூறி வந்த மோடி அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இது I.N.D.I.A கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை தவிர்ப்பதற்கான மத்திய அரசின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததாக விமர்சித்த அவர், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுப்பினார்.
Similar News
News November 23, 2025
16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. முக்கியமாக கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, கடலூர், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்யுதா?
News November 23, 2025
10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிச.1-ம் தேதி முதல் டிச.19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக அணுசக்தி மசோதா 2025 தாக்கல் செய்யப்படுகிறது. இதைத்தவிர உயர்கல்வி கமிஷன் மசோதா, தேசிய நெடுஞ்சாலைகள் திருத்த மசோதா, கார்பரேட் சட்டங்கள் திருத்த மசோதா உள்ளிட்டவையும் பட்டியலிடப்பட்டு உள்ளது.
News November 23, 2025
உரிமைகளை தாரைவார்க்க தயாரான திமுக: அன்புமணி

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியுள்ளது கவலையளிக்கிறதாக அன்புமணி தெரிவித்துள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் திமுக அரசு வழக்கம் போலவே அமைதி காத்து, உரிமைகளை தாரை வார்க்க தயாராகிக் கொண்டிருக்கிறதாகவும் சாடினார்.
காவிரி பாசன விவசாயிகளின் அச்சத்தை திமுக அரசு உணர்ந்து கொண்டதாக தெரியவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார்.


