News May 7, 2025
சாதிவாரி கணக்கெடுப்பு: ஸ்டாலின் கேள்வி

சாதி அடிப்படையில் எதிர்க்கட்சிகள் மக்களை பிளப்பதாக கூறி வந்த மோடி அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இது I.N.D.I.A கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை தவிர்ப்பதற்கான மத்திய அரசின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததாக விமர்சித்த அவர், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுப்பினார்.
Similar News
News December 11, 2025
தி.குன்றம் விவகாரம்: முதல் முறையாக தவெக கருத்து

திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி முதல்முறையாக தவெக தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் TN அரசு தவறான வாதங்களை முன்வைத்ததாக CTR நிர்மல் குமார் விமர்சித்துள்ளார். அங்கு அரசு தான் அசாதாரண சூழலை ஏற்படுத்தியது என்ற அவர், பாரம்பரியமாக பின்பற்ற வேண்டிய முறைகளை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றார். இவரது கருத்து தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News December 11, 2025
தமிழகம் 100/100.. SIR படிவங்கள் பதிவேற்றம்

SIR படிவங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை டிச.14-ம் தேதி வரை EC நீட்டித்துள்ளது. இந்நிலையில், TN-ல் 100% SIR படிவங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாக EC அறிவித்துள்ளது. மொத்தம் 6.41 கோடி வாக்காளர்களுக்கு SIR படிவம் கொடுக்கப்பட்டதாகவும், பெரும்பாலானோர் படிவத்தை சமர்ப்பித்ததை தொடர்ந்து, விவரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாக EC கூறியுள்ளது. இதையடுத்து டிச.19-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.
News December 11, 2025
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு.. வந்தது HAPPY NEWS

பொங்கல் பரிசாக தலா ₹5,000 வழங்குமாறு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ₹3,000 வழங்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பை ஜனவரி மாதம் முழுவதும் மக்கள் பெற்றுக் கொள்ள அவகாசம் வழங்கவிருப்பதாகவும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


