News May 7, 2025
சாதிவாரி கணக்கெடுப்பு: ஸ்டாலின் கேள்வி

சாதி அடிப்படையில் எதிர்க்கட்சிகள் மக்களை பிளப்பதாக கூறி வந்த மோடி அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இது I.N.D.I.A கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை தவிர்ப்பதற்கான மத்திய அரசின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததாக விமர்சித்த அவர், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுப்பினார்.
Similar News
News December 13, 2025
நிலவின் தெளிவான புகைப்படங்கள்

நிலவின் மிகச்சிறந்த, மிகத் துல்லியமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் குர்திஷ் வானியல் புகைப்படக் கலைஞர் தர்யா கவா மிர்ஸா. செலஸ்ட்ரான் நெக்ஸ்டார் 8SE டெலஸ்கோப்பை பயன்படுத்தி தான் எடுத்த 81,000 போட்டோக்களை ஒருங்கிணைத்து நிலவின் மேற்பரப்பை காட்டும் துல்லியமான படங்களை இவர் உருவாக்கியுள்ளார். இதற்கு AI பயன்படுத்தவில்லையாம். நிலவின் அற்புத அழகை காட்டும் படங்களை ஸ்வைப் செய்து பாருங்கள்.
News December 13, 2025
தமிழகத்தில் வேகமெடுக்கும் H3N2 இன்ஃபுளூயன்சா

H3N2 இன்ஃபுளூயன்சா காய்ச்சல், பாக்., இங்கிலாந்தில் அதிகமாக பரவுகிறது. அதேநேரம், இந்தியாவிலும் இதன் பரவல் தொடங்கியுள்ளதாக ICMR தெரிவித்துள்ளது. குளிர், காற்றுமாசு, கோவிட் தொற்றுக்கு பிறகு ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற காரணங்களால் தமிழகம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த வகை இன்ஃபுளூயன்சா பரவுவது அதிகரித்துள்ளது. எனவே, தொடர் இருமல், காய்ச்சல் இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள்.
News December 13, 2025
மக்கள் நாயகன் காலமானார்… கண்ணீருடன் இரங்கல்

மனிதனுக்கு மனிதனே உதவ முன்வராத அவசர காலத்தில், கிளிக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த <<18542461>>ஜோசப் சேகர்(73)<<>> இப்போது பூவுலகில் இல்லை. புற்றுநோய் பாதிப்பால் மறைந்த அவர், பல்லாயிரக்கணக்கான கிளிகளை அனாதையாக விட்டுச் சென்றிருக்கிறார். ஜோசப் சேகரின் மறைவுக்கு அரசியல் கட்சிகள், பறவைகள் நல ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த பறவை மனிதரின் வாழ்க்கை பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்பதே நிதர்சனம்.


