News April 13, 2024

நாட்டில் பிளவை ஏற்படுத்தவே சாதிவாரி கணக்கெடுப்பு

image

நாட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்தவே எதிர்க்கட்சிகள், சாதிவாரி கணக்கெடுப்பு கோருவதாக பாஜக தலைவர் ஜேபி நட்டா குற்றம்சாட்டியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் சின்ட்வாராவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்புக்கு பாஜக எதிரானது அல்ல என்றும், ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது மக்களிடையே பிளவை ஏற்படுத்தத்தான் என்றும் விமர்சித்தார்.

Similar News

News April 29, 2025

₹100, ₹200 நோட்டுகள் குறித்து RBI முக்கிய முடிவு!

image

ATMகளில் பணம் எடுக்கும் போது, தற்போது ₹100, ₹200 நோட்டுகள் பெரிதாக கிடைப்பதில்லை. இது பெரும் சிக்கலை உண்டாக்குகிறது. இதனால், இனி அனைத்து ATMகளிலும் ₹100, ₹200 இருப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தியுள்ளது. செப். மாதத்திற்குள் நாட்டில் 75% ATMகளிலும், மார்ச் 2026-க்குள் 90% ATMகளிலும் ₹100, ₹200 இருப்பதை உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளது. உங்களுக்கு ATMகளில் ₹100, ₹200 கிடைக்குதா?

News April 29, 2025

IND மகளிர் அணிக்கு அபராதம் விதிப்பு

image

IND, SL, RSA பங்கேற்கும் மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. RSA-க்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. முன்னதாக, ஏப்.27-ல் நடைபெற்ற SL-க்கு எதிரான ஆட்டத்தின்போது வெற்றி பெற்ற IND அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச முடியாததால், வீராங்கனைகளுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News April 29, 2025

திமுகவினர் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்?

image

ஆவணங்களிலிருந்து ‘காலனி’யை நீக்கினால் போதுமா, திமுகவினர் மனங்களில் இருந்து எப்போது அகலும் என எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மலை, பாணாம்பட்டு கிராமத்தில் குடிநீர் தொட்டியின் மீது மனிதக் கழிவு பூசப்பட்டுள்ளது. இதுபோன்ற கொடூரச் செயல்கள் CM கவனத்திற்கு வருகிறதா? என கேள்வி எழுப்பிய அவர், திராவிட மாடல் ஆட்சியில் பட்டியலின மக்கள் படும் துன்பங்களுக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என சாடினார்.

error: Content is protected !!